Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வெளிநாடுகளில் தலைமறைவான 93 சந்தேக நபர்களுக்கு இன்டர்போல் சிவப்பு அறிவித்தல்!

வெளிநாடுகளில் தலைமறைவான 93 சந்தேக நபர்களுக்கு இன்டர்போல் சிவப்பு அறிவித்தல்!

2 hours ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கையில் இடம்பெற்ற குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும், வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள 93 சந்தேக நபர்களைக் கைது செய்து நாட்டுக்கு அழைத்து வருவதற்காக இன்டர்போல் ஊடாக சிவப்பு அறிவித்தல்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

‘முழு நாடும் ஒன்றாக’ எனும் தேசிய நடவடிக்கையின் முன்னேற்றம் தொடர்பில் விளக்கமளிப்பதற்காக இன்று (13) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான எஃப்.யு. வூட்லர் இதனைத் தெரிவித்துள்ளார்.

2024 மற்றும் 2025ஆம் ஆண்டுகளிலும், 2026ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியிலும் இன்டர்போல் சிவப்பு அறிவித்தல்கள் ஊடாக 38 சந்தேக நபர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பொலிஸ்மா அதிபரின் நேரடி தலையீட்டின் மூலம் மேலும் 35 முக்கிய குற்றச்செயல் சந்தேக நபர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட சந்தேக நபர்கள் சட்டவிரோதமாக சம்பாதித்ததாகக் கூறப்படும் சொத்துக்களை அடையாளம் கண்டு அரசின் பொறுப்புக்குள் கொண்டு வருவதற்கான விசேட வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதன்படி, வாகனங்கள், வீடுகள், தங்கம் மற்றும் காணிகள் உள்ளிட்ட சொத்துக்களை முடக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

2024ஆம் ஆண்டில் சுமார் 1.49 பில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களும், 2025ஆம் ஆண்டில் சுமார் 1.549 பில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களும் முடக்குவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், 2026 ஜனவரி 1ஆம் திகதி முதல் இதுவரை சட்டவிரோதமாக சம்பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் 839 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை அரசின் பொறுப்புக்குள் கொண்டு வருவதற்கான ஆரம்பகட்ட சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மகிந்தவின் ஆட்சியில் மீளப்பெறப்படாத மற்றுமொரு பாரிய நிதி அறிக்கையில் அம்பலம்
செய்திகள்

மகிந்தவின் ஆட்சியில் மீளப்பெறப்படாத மற்றுமொரு பாரிய நிதி அறிக்கையில் அம்பலம்

August 13, 2026
‘க்ளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முக்கிய கலந்துரையாடல்!
செய்திகள்

‘க்ளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முக்கிய கலந்துரையாடல்!

August 13, 2026
பதவி இழப்பைப் பற்றி கவலையில்லை; மாற்றத்துக்காக எந்த சவாலையும் எதிர்கொள்ளத் தயார்!
செய்திகள்

பதவி இழப்பைப் பற்றி கவலையில்லை; மாற்றத்துக்காக எந்த சவாலையும் எதிர்கொள்ளத் தயார்!

August 13, 2026
திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த தனியார் பேருந்து விபத்து
செய்திகள்

திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த தனியார் பேருந்து விபத்து

August 13, 2026
சிறுமி ஒருவரை வீதியில் இறக்கிவிட்டு தப்பிச் சென்ற முச்சக்கர வண்டி
செய்திகள்

சிறுமி ஒருவரை வீதியில் இறக்கிவிட்டு தப்பிச் சென்ற முச்சக்கர வண்டி

August 13, 2026
முஸ்லீம் பெண் தாதியர்கள் ஆடை விவகாரம்!; எம்.பி ஹிஸ்புல்லாஹ் கூறுவது என்ன?
காணொளிகள்

முஸ்லீம் பெண் தாதியர்கள் ஆடை விவகாரம்!; எம்.பி ஹிஸ்புல்லாஹ் கூறுவது என்ன?

August 13, 2026
Next Post
மகிந்தவின் ஆட்சியில் மீளப்பெறப்படாத மற்றுமொரு பாரிய நிதி அறிக்கையில் அம்பலம்

மகிந்தவின் ஆட்சியில் மீளப்பெறப்படாத மற்றுமொரு பாரிய நிதி அறிக்கையில் அம்பலம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.