Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ரொஷான் ரணசிங்கவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி;மனு மீதான பரிசோதனை நிறைவு!

ரொஷான் ரணசிங்கவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி;மனு மீதான பரிசோதனை நிறைவு!

1 year ago
in செய்திகள்

இலங்கை கிரிக்கெட் (SLC)க்கான இடைக்கால குழுவை நியமிக்குமாறு முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக தேசிய கிரிக்கட் நிர்வாக சபையின் தலைவர் ஷம்மி சில்வாவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான பரிசோதனையினை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிறைவு செய்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, நவம்பர் 06ஆம் திகதி அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் ஏழு பேர் கொண்ட இடைக்கால குழு நியமிக்கப்பட்டது. உலகக் கோப்பையை வென்ற இலங்கையின் முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்கா தலைமையில், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ஐ. இமாம் அடங்கிய குழுவில்; ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரோஹினி மாரசிங்க; ஐராங்கனி பெரேரா, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி; அர்ஜுன ரணதுங்க (தலைவர்); உபாலி தர்மதாச; ரகித ராஜபக்ஷ, சட்டத்தரணி; மற்றும் ஹிஷாம் ஜமால்தீன். இக்குழுவில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மறுநாள், மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலக் குழுவுக்கு 14 நாள் தடை உத்தரவு பிறப்பித்தது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் நீதியரசர் விக்கும் களுஆராச்சி ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

பின்னர், நவம்பர் 13ஆம் தேதி, அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் ரணசிங்க, தடை உத்தரவை நீக்கக் கோரி மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இருந்தபோதிலும், நவம்பர் 27 அன்று, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, SLPP பாராளுமன்ற உறுப்பினர் ரணசிங்கவை விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கினார். அதனைத் தொடர்ந்து ரணசிங்கவிற்கு பதிலாக புதிய விளையாட்டுத்துறை அமைச்சராக சுற்றுலாத்துறை அமைச்சராக கடமையாற்றிய ஹரின் பெர்னாண்டோ பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

அவரது நியமனத்தின் பின்னர், அமைச்சர் பெர்னாண்டோ, டிசம்பர் 12 அன்று, ரணசிங்கவினால் நியமிக்கப்பட்ட குழுவை கலைப்பதற்கான புதிய அதிவிசேட வர்த்தமானியை வெளியிட்டார். இதன்படி, புதிய அறிக்கையின் மூலம், நவம்பர் 05, 2023 தேதியிட்ட குறிப்பு எண். 2356/43ஐக் கொண்ட அதிவிசேட வர்த்தமானி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சர் இதனை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் டிசம்பர் 13ஆம் திகதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

700 மில்லியன் வரி ஏய்ப்பு ; முன்னாள் இராஜாங்க அமைச்சரின் மனைவி கைது
செய்திகள்

700 மில்லியன் வரி ஏய்ப்பு ; முன்னாள் இராஜாங்க அமைச்சரின் மனைவி கைது

June 9, 2025
சூடுபிடிக்கும் கைதிகளை விடுவித்த விவகாரம்; சிறைச்சாலைகள் ஆணையாளரை பணி இடைநீக்கம் செய்ய தீர்மானம்
செய்திகள்

சூடுபிடிக்கும் கைதிகளை விடுவித்த விவகாரம்; சிறைச்சாலைகள் ஆணையாளரை பணி இடைநீக்கம் செய்ய தீர்மானம்

June 9, 2025
சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களின் விபரங்களை வெளியிட்டார் கம்மன்பில
செய்திகள்

சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களின் விபரங்களை வெளியிட்டார் கம்மன்பில

June 9, 2025
இன்று முதல் அமுலுக்கு வருகிறது ட்ரம்பின் 12 நாடுகளுக்கான தடை
உலக செய்திகள்

இன்று முதல் அமுலுக்கு வருகிறது ட்ரம்பின் 12 நாடுகளுக்கான தடை

June 9, 2025
முகக்கவசத்துக்கு உடனடியாக கட்டுப்பாட்டு விலையை விதிக்க வேண்டும்; தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர்
செய்திகள்

முகக்கவசத்துக்கு உடனடியாக கட்டுப்பாட்டு விலையை விதிக்க வேண்டும்; தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர்

June 9, 2025
17 சபைகளிலும் ஆட்சி அமைப்போம் குறுக்கே எவரும் வர வேண்டாம்; சுமந்திரன் எச்சரிக்கை
அரசியல்

17 சபைகளிலும் ஆட்சி அமைப்போம் குறுக்கே எவரும் வர வேண்டாம்; சுமந்திரன் எச்சரிக்கை

June 9, 2025
Next Post
ஆறு மாதங்களுக்குள் பாதாள உலக கும்பலுக்கு முடிவு; சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கூறுகிறார்!

காவல் நிலையங்களை இணைத்து போதைப்பொருள் குற்றவாளிகளை அடையாளம் காணும் திட்டம் அறிமுகம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.