மட்டக்களப்பு மாவட்டத்தின், மண்முனை மேற்கு பிரதேச செயலகமும் மண்முனை மேற்கு கலாசாரப்பேரவையும் இணைந்து நடாத்திய கலாசார விழா இன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
பிரதேச கலாசார உத்தியோகத்தர் எம்.சிவானந்தராஜாவின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற நிகழ்வு, மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலாளர் சுதாகர் தலைமையில் ஆரம்பமானது.
ஆரம்ப நிகழ்வாக அதிதிகள் வரவேற்பையடுத்து தமிழ்மொழி வாழ்த்து, வரவேற்பு நடனம் இடம்பெற்றதுடன், கலைஞர்கள் கௌரவிப்பும் இடம்பெற்றது. நிகழ்வில் நிர்வாக உத்தியோகத்தர்களான துரைராஜா, கோமளேஸ்வரன், மாவட்ட கலாசார இணைப்பாளர் மலர்செல்வன், முன்னாள் பிரதேச சபை தவிசாளர் எஸ். சண்முகராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது நடனங்கள், பாடல்கள், கவிதை, உள்ளிட்ட பல கலை நிகழ்வுகளும் கலைஞர்களால் நிகழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.








