Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தமிழ் அரசியல் கைதியை துப்பாக்கி முனையில் அச்சுறுத்திய அமைச்சர்; நீதிமன்றில் வாக்குமூலம்!

தமிழ் அரசியல் கைதியை துப்பாக்கி முனையில் அச்சுறுத்திய அமைச்சர்; நீதிமன்றில் வாக்குமூலம்!

2 years ago
in செய்திகள்

இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தை தன்னை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தினார் மரண அச்சுறுத்தல் விடுத்தார் என அரசியல் கைதியொருவர் தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் சிறைச்சாலையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதி பூபாலசிங்கம் சூரிய பாலன் இதனை நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் சிறைச்சாலைக்குள் நுழைந்த இராஜாங்க அமைச்சர் என்னை முழங்காலில் இருத்தினார் உண்மையை சொல்லுமாறு என்னை அச்சுறுத்தினார் துப்பாக்கியை தலையை நோக்கி நீட்டி எனக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தார் என சூரியபாலன் தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் சிறைச்சாலைக்குள் மதுபோதையில் நுழைந்த அமைச்சர் தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்தியமை தொடர்பிலான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டவேளை அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சந்தேகநபரான இராஜாங்கஅமைச்சர் நீதிமன்றத்தில் பிரசன்னமாகியிருந்தார்.

விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு புத்துயிர் கொடுக்க முயன்ற குற்றச்சாட்டில் என்னை 2019 ஜனவரி 8 ம் திகதி புளியங்குளம் பொலிஸார் கைதுசெய்தனர் ஏனைய 11அரசியல் கைதிகளுடன் நான் தடுத்துவைக்கப்பேட்டேன் என சூரியபாலன் தெரிவித்துள்ளார்.

அன்றைய தினம் சிறைச்சாலைகள் அமைச்சர் எங்களை சந்திக்க விரும்புகின்றார் விடுதலைக்கான கையெழுத்துக்களை பெறவிரும்புகின்றார் என சிறைச்சாலைகள் பாதுகாப்பு அதிகாரி தெரிவித்தார் என சூரியபாலன் தெரிவித்துள்ளார்.

எங்களை வெளியில் அழைத்து சென்று வரிசையாக நிற்க செய்தனர் வரிசையாக நிற்க வைத்தனர் சிறைச்சாலை பிரதான அதிகாரி தலைமை சிறைக்காவலர் பல பொலிஸ் அதிகாரிகள் அங்கு காத்திருந்தனர் எனவும் அவர்தெரிவித்துள்ளார்.

ரீசேர்ட் அணிந்த தொப்பி அணிந்திருந்த நாங்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள சம்பவங்கள் குறித்து கேள்வி எழுப்பினார் நான் எனக்கு சிங்களம் தெரியாது என தெரிவித்தேன். அதற்கு அவர் கைத்துப்பாக்கியை எடுத்து எனது நெற்றியில் வைத்து நான் பொய் சொல்கின்றேன் என தெரிவித்து என்னை மிரட்டினார் என சூரியபாலன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்
செய்திகள்

இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்

June 13, 2026
சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!
செய்திகள்

சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!

June 13, 2026
எரிபொருளுக்கான அரச மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு!
செய்திகள்

எரிபொருளுக்கான அரச மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு!

June 13, 2026
பண்டாரநாயக்க விமான நிலைய இரண்டாம் முனைய கட்டுமானம் நவம்பரில் மீண்டும் ஆரம்பிக்கத் திட்டம்
செய்திகள்

பண்டாரநாயக்க விமான நிலைய இரண்டாம் முனைய கட்டுமானம் நவம்பரில் மீண்டும் ஆரம்பிக்கத் திட்டம்

June 13, 2026
மாதம்பேவில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 65 வயது வர்த்தகர் கைது
செய்திகள்

மாதம்பேவில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 65 வயது வர்த்தகர் கைது

June 13, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சுரேஷ் சலே குறித்து சரத் ​​பொன்சேகா கடும் குற்றச்சாட்டு!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சுரேஷ் சலே குறித்து சரத் ​​பொன்சேகா கடும் குற்றச்சாட்டு!

June 13, 2026
Next Post
போதைப்பொருளுடன் காதல் ஜோடி கைது!

போதைப்பொருளுடன் காதல் ஜோடி கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.