Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உயிரை மாய்க்கும் பிரசங்கங்கள் தொடர்பில் விசேட விசாரணை ஆரம்பம்!

உயிரை மாய்க்கும் பிரசங்கங்கள் தொடர்பில் விசேட விசாரணை ஆரம்பம்!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சமூக ஊடகங்கள் மூலம் மத போதனைகளை வழங்கி உயிரை மாய்க்க தூண்டியதாக கூறப்படும் ருவான் பிரசன்ன குணரத்னவின் ஆதரவாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்களை கண்டுபிடிக்க குற்றப்புலனாய்வு திணைக்களம் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இது இரகசியப் பொலிஸ் பிரிவின் இரண்டு உதவி பொலிஸ் அத்தியட்சகர்களின் கீழ் 15 அதிகாரிகள் கொண்ட இரண்டு குழுக்களால் நாடு முழுவதும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்தக் குழுவில் உயிரை மாய்த்துக்கொண்ட ஏழு பேரின் மருத்துவப் பதிவுகள் மூலம் விசாரணை நடத்தி வருகிறது, மேலும் யூடியூப், பேஸ்புக் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்களில் பரவிய வீடியோக்களும் இந்த விசாரணைக்காக பயன்படுத்தப்படவுள்ளது.

மேலும், இந்த நபரின் போதனைகளில் ஈடுபட்டவர்கள் மற்றும் அவரைப் பின்பற்றுபவர்களை அடையாளம் கண்டு, அவர்களிடம் விசாரணை நடத்தி வாக்குமூலங்களைப் பெற மற்றைய பொலிஸ் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரனைக்கமைய, இறந்த நபருக்கு எத்தனை சீடர்கள் இருந்தார்கள், சம்பந்தப்பட்டவர்கள், அவர்கள் எந்தெந்த மாகாணங்களை சேர்ந்தவர்கள் என கண்டறியப்படவுள்ளது.

சமீபத்தில் பதிவான ஏழு சந்தேக மரணங்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது, இந்த ஏழு பேரும் அதே விஷத்தை குடித்து உயிரை மாய்த்துக் கொண்டதால், இந்த விஷத்தை குறித்த போதனைகளில் கலந்துகொண்ட அனைவருக்கும் விநியோகித்தாரா என்ற சந்தேகத்தில் இந்த விசாரணை நடத்தப்படுகின்றது.

மேலும், உயிரிழந்தவரின் வழியை பின்பற்றி அவரை பின்பற்றுபவர்கள் தொடர்ந்து இதுபோன்ற விரிவுரைகளை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை கண்டறிய இந்த விசாரணைகள் நடத்தப்படும்.

இந்த தற்செயலான உயிரை மாய்க்கும் அலையாக மாறுவதைத் தடுக்க இந்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பிரதி பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்க மற்றும் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காவிந்த பியசேகர ஆகியோரின் பணிப்புரைக்கு அமைய இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தொடர்புடையசெய்திகள்

அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட டிரம்ப்!
உலக செய்திகள்

அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட டிரம்ப்!

June 18, 2026
செம்மணி புதைகுழியில் மேலும் 14 என்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!
செய்திகள்

செம்மணி புதைகுழியில் மேலும் 14 என்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!

June 17, 2026
எரிபொருள் விலை எப்போது குறையும்? பதிலளித்தார் அனில் ஜயந்த!
செய்திகள்

எரிபொருள் விலை எப்போது குறையும்? பதிலளித்தார் அனில் ஜயந்த!

June 17, 2026
திருமண மண்டபத்தில் மோதல்; பொலிஸாரை தாக்கிய 7 பேர் கைது!
செய்திகள்

திருமண மண்டபத்தில் மோதல்; பொலிஸாரை தாக்கிய 7 பேர் கைது!

June 17, 2026
ஈரான் மீள்கட்டமைப்புக்கு 300 பில்லியன் டொலர் முதலீட்டு நிதி!
உலக செய்திகள்

ஈரான் மீள்கட்டமைப்புக்கு 300 பில்லியன் டொலர் முதலீட்டு நிதி!

June 17, 2026
அஸ்வெசும் பயனாளிகளுக்கு ஜூன் மாத கொடுப்பனவு நாளை வங்கி கணக்குகளில்!
செய்திகள்

அஸ்வெசும் பயனாளிகளுக்கு ஜூன் மாத கொடுப்பனவு நாளை வங்கி கணக்குகளில்!

June 17, 2026
Next Post
துரத்தி சென்ற பொலிஸ் உத்தியோகத்தரை கடித்தவர் தலைமறைவு!

துரத்தி சென்ற பொலிஸ் உத்தியோகத்தரை கடித்தவர் தலைமறைவு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.