Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அரச வைத்தியசாலைகளில் இலவச உணவு வழங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்!

அரச வைத்தியசாலைகளில் இலவச உணவு வழங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்!

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நாட்டில் உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பினால் அரசாங்க மருத்துவமனைகளில் நோயாளர்களிற்கு வழங்கப்படும் உணவின் தரத்தில் குறைபாடு காணப்படுவதாக வெளியாகும் குற்றச்சாட்டுகளால் அரசாங்க மருத்துவமனைகள் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உணவுப்பொருட்களின் விலைகள் அதிகரிப்பு, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு, இலவச உணவில் தங்கியிருப்பது போன்றவற்றின் காரணமாக அதிகரிக்கும் கஸ்டங்கள் குறித்து சுகாதார துறை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மருத்துவமனைகளில் அனுமதி பெறும் நோயாளர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ள அவர்கள் தனியார் மருத்துவமனைகளில் அறவிடப்பட்டும் கட்டண அதிகரிப்பு காரணமாகவே அதிகளவு மக்கள் அரசமருத்துவமனைகளை நாடுவதாக தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக அரசாங்க மருத்துவமனைகளில் வழங்கப்படவேண்டிய இலவச உணவின் அளவும் அதிகரித்துள்ளது. இது ஏற்கனவே பலவீனமாக உள்ள வளங்கள் மீது மேலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த காலங்களில் நோயாளிகள் இலவச உணவை கேட்பது குறைவு. அவர்களை வந்து பார்ப்பவர்களிடமிருந்து உணவு கிடைப்பதும் ஒரு காரணம் என தெரிவித்துள்ள முக்கியமான அரசாங்க மருத்துவமனையின் அதிகாரியொருவர் ஆனால் தற்போது நிலைமை முற்றிலும் மாறிவிட்டது பலர் தற்போது இலவச உணவை நம்பியுள்ளனர்.

மேலும் நோயாளிகளை பார்வையிட எவரும் வருவதும் இல்லை. மருத்துவமனைகள் நிரம்பிவழிகின்றன, உணவுப்பொருட்களின் தரங்கள் குறைவடைகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உணவை விநியோகிப்பவர்கள் ஊட்டச்சத்து மிக்க உணவை வழங்குவது குறித்து சிந்திப்பார்களா என்பது தெரியவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

கட்டுநாயக்கவில் சட்டவிரோத சிகரெட்டுகளுடன் இளைஞன் கைது
செய்திகள்

கட்டுநாயக்கவில் சட்டவிரோத சிகரெட்டுகளுடன் இளைஞன் கைது

June 9, 2025
பொசன் தானங்களில் தொற்று நோயாளர்கள் கலந்துகொள்ள வேண்டாம் என அறிவுறுத்தல்
செய்திகள்

பொசன் தானங்களில் தொற்று நோயாளர்கள் கலந்துகொள்ள வேண்டாம் என அறிவுறுத்தல்

June 9, 2025
பொசன் வார யாத்திரீகர்களுக்கு அவசர தொடர்பு எண் அறிமுகம்
செய்திகள்

பொசன் வார யாத்திரீகர்களுக்கு அவசர தொடர்பு எண் அறிமுகம்

June 9, 2025
கிழக்கு மாகாண பாடசாலை மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தை முன்னெடுப்பதற்காக எட்டு கோடி நிதி ஒதுக்கீடு
செய்திகள்

கிழக்கு மாகாண பாடசாலை மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தை முன்னெடுப்பதற்காக எட்டு கோடி நிதி ஒதுக்கீடு

June 9, 2025
323 கொள்கலன் விவகாரத்தில் சிக்கியுள்ள அதிகாரிகள் நாட்டை விட்டு தப்பியோட திட்டம்
செய்திகள்

323 கொள்கலன் விவகாரத்தில் சிக்கியுள்ள அதிகாரிகள் நாட்டை விட்டு தப்பியோட திட்டம்

June 9, 2025
கதிர்காம காட்டுப்பாதை 20ஆம் திகதி திறக்கப்பட்டு 04ம் திகதி மூடப்படும்-அடையாள அட்டையும் அவசியம்; அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர்
செய்திகள்

கதிர்காம காட்டுப்பாதை 20ஆம் திகதி திறக்கப்பட்டு 04ம் திகதி மூடப்படும்-அடையாள அட்டையும் அவசியம்; அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர்

June 9, 2025
Next Post
விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச்செல்ல முயன்ற சாரதி உட்பட நால்வர் பொலிஸாரால் கைது!

விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச்செல்ல முயன்ற சாரதி உட்பட நால்வர் பொலிஸாரால் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.