Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தோல்வியடைந்த நாடாக இலங்கையை மாற்றியது சிங்கள கட்டமைப்புகளே!

தோல்வியடைந்த நாடாக இலங்கையை மாற்றியது சிங்கள கட்டமைப்புகளே!

3 years ago
in சிறப்பு கட்டுரைகள்

இலங்கை பிரித்தானிய காலனித்துவத்திலிருந்து விடுபட்டு 75 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் நிலையில் ஒரு தோல்வியடைந்த நாடாக மாறியிருக்கின்றது – இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்திருக்கின்றார். இலங்கை 75ஆவது ஆண்டில்தான் தோல்வியடைந்த நாடாக மாறியிருக்கின்றதா?

சந்திரிகாவின் தந்தையார் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க தனிச்சிங்கள சட்டத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம் இலங்கையின் சிங்கள – பௌத்த இனவாத அரசியலுக்கு புதிய முகத்தை வழங்கினார். ஆனால், அதே பண்டாரநாயக்க 1926இல் இலங்கையை மூன்று சமஷ்டி அலகுகளாக மாற்றும் யோசனையை முன்வைத்திருந்தார். அந்தவேளையில், அதனை அன்றைய கொழும்பு தமிழ் தலைமைகள் எதிர்த்திருந்தன.ஆனால், அரசியலில் அதிகாரத்தை கைப்பற்றும் மோதலில் பண்டாரநாயக்கவின் முற்போக்கான நிலைப்பாடு காணாமல் போய்விட்டது. தமிழர் மீதான விரோத இனவாத நிலைப்பாட்டின் மூலம் தென்னிலங்கையின் அதிகார அரசியல் எப்போது கருக்கொண்டதோ அப்போதே இலங்கைத் தீவின் தோல்வி அரசியல் அத்தியாயம் ஆரம்பித்துவிட்டது. இந்தத் தோல்வி அரசியலுக்கு இரண்டு முறை சந்திரிகாவும் தலைமை தாங்கியிருக்கின்றார் என்பதுதான் வரலாறு.

இன்று நாடு பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியிருக்கும்போதுதான் நாட்டின் தோல்வி பற்றி தென்னிலங்கையில் உரையாடப்படுகின்றது. ஆனால், இப்போதும்கூட பொருளாதார வீழ்ச்சிக்கான காரணங்களில் ஒன்றாக இனவாத அரசியலை நோக்குவதற்கு தென்னிலங்கை தயாராக இல்லை. இப்போதும் நாட்டின் தேசிய இனப் பிரச்சனைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் வெளிப்படையாக உரையாடுவதற்குத் தயாராக இல்லை.அரசியலமைப்பிலுள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தைக்கூட
முழுமையாக அமுல்படுத்துவதற்கு தயாராக இல்லை. இந்த பின் புலத்தில் நோக்கினால் அரசியலமைப்பிலுள்ள விடயங்களைக்கூட அமுல்படுத்த மறுக்கும் தோல்வியடைந்த நாடுதான் இலங்கை. நாட்டின் அரசியலமைப்பிலுள்ள விடயங்களையே அமுல்படுத்த மறுக்கும் ஒரு நாட்டின் ஆட்சியாளர்கள் எவ்வாறு வெற்றிபெற்றவர்களாக இருக்க முடியும்? இலங்கையை ஒரு தோல்விடைந்த நாடாக்கியதில் சிங்கள – பௌத்த கட்டமைப்புக்களே பிரதான பங்கு வகித்திருக்கின்றன. இந்த உண்மையை எப்போது சிங்கள அரசியல் சமூகம் உணர்கின்றதோ- அப்போதுதான் இலங்கைக்கானதொரு புதிய அரசியல் கலாசாரம் தொடர்பில் தென்னிலங்கை சிந்திக்க முற்படும். அதுவரையில், இந்த நாடு தோல்விடைந்த நாடாகவே தொடரும்.

சிங்கள அரசியல்வாதிகள் சிங்கள – பௌத்த மத பீடங்களிலிருந்து அரசியலை விடுவிக்காவிட்டால் எந்தவொரு முன்னேற்றகரமான மாற்றங்களும் இந்த நாட்டில் இடம்பெறப் போவதில்லை. எத்தனை ‘அரகலய’க்கள் வந்தாலும்கூட நாட்டின் சிங்கள – பௌத்த கட்டமைப்புகளின் கற்கால சிந்தனைகளின்மீது கேள்வி எழுப்பாவிட்டால், ‘அரகலய’க்களால் எந்தவொரு பயனும் ஏற்படப் போவதில்லை. இவ்வாறான ‘அரகலய’க்களும் சில புதிய சிங்கள-பௌத்தவாதிகளை அதிகாரத்துக்குக் கொண்டு வருவதற்கே பயன்படும்.

தொடர்புடையசெய்திகள்

தமிழர்களின் தொன்மை தொடர்பில் சிங்களத்தில் தயாரிக்கப்பட்ட ஆவணத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு
சிறப்பு கட்டுரைகள்

தமிழர்களின் தொன்மை தொடர்பில் சிங்களத்தில் தயாரிக்கப்பட்ட ஆவணத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு

April 26, 2026
ஈரான், நேட்டோ, மற்றும் மறைமுக நிழல் மோதல்கள்; ஒரு ஆழமான பார்வை
உலக செய்திகள்

ஈரான், நேட்டோ, மற்றும் மறைமுக நிழல் மோதல்கள்; ஒரு ஆழமான பார்வை

April 6, 2026
இஸ்ரேலை நோக்கிய இன்னுமொரு அச்சுறுத்தல்
சிறப்பு கட்டுரைகள்

இஸ்ரேலை நோக்கிய இன்னுமொரு அச்சுறுத்தல்

March 28, 2026
எரிபொருள் சிக்கல் நீளுமா? ; உலகளாவிய பதற்றத்தின் பின்னணி!
காணொளிகள்

எரிபொருள் சிக்கல் நீளுமா? ; உலகளாவிய பதற்றத்தின் பின்னணி!

February 28, 2026
எப்ஸ்டீன் கோப்புகள் (Epstein Files) – சிறு விளக்கம்; 188 இடங்களில் இலங்கை எனும் பெயர்
உலக செய்திகள்

எப்ஸ்டீன் கோப்புகள் (Epstein Files) – சிறு விளக்கம்; 188 இடங்களில் இலங்கை எனும் பெயர்

February 6, 2026
கிவுல் ஓயாவும், மயிலத்தமடு மகாவலி அபிவிருத்தியும்!-ஆபத்தை உணராத மட்டக்களப்பு பண்ணையாளர்கள்!
சிறப்பு கட்டுரைகள்

கிவுல் ஓயாவும், மயிலத்தமடு மகாவலி அபிவிருத்தியும்!-ஆபத்தை உணராத மட்டக்களப்பு பண்ணையாளர்கள்!

January 29, 2026
Next Post
வாழைச்சேனையில் இப்தார் நிகழ்வு!

வாழைச்சேனையில் இப்தார் நிகழ்வு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.