Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சிறுவர்களை கட்டிப்போட்டது தொடர்பில் சம்பவ இடத்திற்கு விரைந்த சாணக்கியன்; பொறுப்பதிகாரிகள் கூறிய காரணம்!

சிறுவர்களை கட்டிப்போட்டது தொடர்பில் சம்பவ இடத்திற்கு விரைந்த சாணக்கியன்; பொறுப்பதிகாரிகள் கூறிய காரணம்!

3 years ago
in மட்டு செய்திகள்

மட்டக்களப்பில் விசேட தேவையுடைய பிள்ளைகளை சித்திரவதை செய்தமை தொடர்பில் நேற்றைய தினம் (20.04.2023) வெளியான காணொளியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கான பராமரிப்பு நிலையத்திற்கு நேரடி விஜயமொன்றை மேற்கொண்டு மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் விசாரணை இதன்போது இரா.சாணக்கியன் பராமரிப்பு நிலைய பொறுப்பாளர் உட்பட பணியாளர்களிடம் விசாரணை நடத்தும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

அதுமட்டுமன்றி அவர் குறித்த பராமரிப்பு நிலையத்திலுள்ள விசேட தேவையுடைய பிள்ளைகளுடன் சேர்ந்து கலந்துரையாடுவது போன்ற புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளன. மட்டக்களப்பில் விசேட தேவையுடைய பிள்ளைகளை சித்திரவதை செய்தமை குறித்து வெளியான தகவல் தொடர்பாக கொக்குவில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கான பராமரிப்பு நிலையத்தில 22 பெண்கள் 4 ஆண்கள் உட்பட 26 சிறுவர்கள் தங்கவைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர். அண்மையில் அங்குள்ள இரு சிறுமிகளை கயிற்றால் கட்டி சித்திரவதை செய்த காணொளிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியிருந்தன.

இதனையடுத்து பொலிஸார் மற்றும் மனித உரிமை ஆணைக்குழுவினர் சென்று விசாரணைகளை மேற்கொண்ட போது இதில் வாய்பேச மூடியாத இரு பிள்ளைகளையே இவ்வாறு கட்டிவைத்து சித்திரவதை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் சிறுவர்களுக்கு நன்கொடையாளர்களால் வழங்கப்பட்ட பாவனை பொருட்களை அங்கு கடமையாற்றி வரும் சிலர் திருடிச் சென்றபோது அவர்களை கண்டுபிடித்து எச்சரித்த கோபத்தினால் இவ்வாறு செய்துள்ளதாக பராமரிப்பு நிலைய பொறுப்பாளர் கூறியுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதேவேளை அங்கு கடமையாற்றும் அனைத்து பணியாளர்களிடமும் வாக்குமூலம் பெற்ற பின்னரே குறித்த சித்திரவதையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கொக்குவில் சிறுவர் பெண்கள் பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

அக்காலத்தில் போருக்கு ஆட்கள் சேர்த்துக்கொடுத்த இந்த அரசாங்கம் தமிழர்களுக்கு தீர்வு தராது-சுரேஸ்பிரேமச்சந்திரன்
காணொளிகள்

அக்காலத்தில் போருக்கு ஆட்கள் சேர்த்துக்கொடுத்த இந்த அரசாங்கம் தமிழர்களுக்கு தீர்வு தராது-சுரேஸ்பிரேமச்சந்திரன்

July 23, 2026
மட்டு மேயர் சுகாதார பரிசோதகர்களை வைத்து தன்னை அச்சுறுத்துவதாக அந்தனிசில் ராஜ்குமார் குற்றச்சாட்டு
காணொளிகள்

மட்டு மேயர் சுகாதார பரிசோதகர்களை வைத்து தன்னை அச்சுறுத்துவதாக அந்தனிசில் ராஜ்குமார் குற்றச்சாட்டு

July 23, 2026
குருக்கள் மட சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி தொடர்பில் நீதிமன்ற உத்தரவு
செய்திகள்

குருக்கள் மட சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி தொடர்பில் நீதிமன்ற உத்தரவு

July 23, 2026
உன்னிச்சை ஆறாம் கட்டை மற்றும் ஏழாம் கட்டையில் யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு; அருகில் உள்ள மக்களுக்கு முக்கிய அறிவிப்பு
காணொளிகள்

உன்னிச்சை ஆறாம் கட்டை மற்றும் ஏழாம் கட்டையில் யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு; அருகில் உள்ள மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

July 23, 2026
கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்
செய்திகள்

கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

July 22, 2026
மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை
செய்திகள்

மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை

July 22, 2026
Next Post
‘வாட்ஸ்அப்’ பயனர்களுக்கு ஓர் மகிழ்ச்சி தகவல்!

'வாட்ஸ்அப்' பயனர்களுக்கு ஓர் மகிழ்ச்சி தகவல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.