Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வற் வரியை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை!

வற் வரியை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்காக வற் வரி அதிகரிக்கப்பட்டதனால் அரசாங்கம் எதிர்பார்த்த வருமானம் தற்போது கிடைக்கப்பெற்று வருகின்றது என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்தார்.

இதேவேளை அதிகரிக்கப்பட்ட வற்வரியை மீண்டும் நூற்றுக்கு 15 வீதமாக குறைப்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது என அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று (14) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் அங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

“வீழ்ச்சியடைந்திருந்த நாட்டின் பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கும்போது சில கடுமையான தீர்மானங்களை எடுப்பது தவிர்க்கமுடியாத விடயமாகும். இதனால் நாட்டு மக்கள் அனைவருக்கும் ஏதோ ஒருவகையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பொருளாதார ரீதியில் மக்களுக்கு பாரிய நெருக்கடி நிலைமை ஏற்பட்டிருப்பதை நாங்கள் உணர்ந்து வருகிறோம். இந்த பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண அரசாங்கம் படிப்படியாக நடவடிக்கை எடுத்து வருகிறது.

குறிப்பாக 2022இல் அதிபர் ரணில் விக்ரமசிங்க நாட்டை பொறுப்பேற்கும் போது திறைசேரியில் 852 பில்லியன் ரூபா மறை பெறுமானத்திலேயே இருந்தது. ஆனால் 2023 நிறைவடையும்போது எமது அடிப்படை செலவுகளுக்கு ஒதுக்கிய பின்னர் திறைசேரியில் 52 பில்லியன் ரூபா மீதமாகி இருந்தது.

அனைவரின் அர்ப்பணிப்பின் மூலமே இதனை செய்ய முடியுமாகியது. விசேடமாக நிதி அமைச்சின் அதிகாரிகள் திறைசேரியின் அதிகாரிகள் மிகவும் அர்ப்பணிப்புடன் மேற்கொண்ட சேவையின் மூலமே இந்த இலக்கை எமக்கு எட்ட முடிந்தது.

மேலும் இந்த பொருளாதார அபிவிருத்திக்கு வற் வரி அதிகரிக்கப்பட்டதுடன் நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய வருமானங்களை முறையாகச் சேர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதேபோன்று நாட்டுக்கு கிடைக்க வேண்டிய வரி வருமானங்களைப் பெற்றுக்கொள்ள முறையான வேலைத்திட்டங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இதன் காரணமாக தற்போது அரசாங்கம் எதிர்பார்த்த வருமானங்கள் கிடைக்கப்பெற்று வருவதால், இறுதியாக அதிகரிக்கப்பட்ட வற்வரியை மீண்டும் நூற்றுக்கு 15வீதமாக குறைப்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தி இருக்கிறது.

இன்னும் ஒரு சில மாதங்களில் வற்வரியை நூற்றுக்கு 15வீதம் வரை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்க எதிர்பார்க்கிறோம்.

மேலும் நாடு ஸ்திரநிலையை அடைந்துவரும் நிலையில் நாட்டில் ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்தி, தற்போது முன்னெடுத்துச்செல்லப்படும் ஆட்சி முறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதா அல்லது பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப அமைக்கப்பட்டிருக்கும் வேலைத்திட்டத்தை அவ்வாறே தொடர்ந்து முன்னுக்குக் கொண்டு செல்வதா என்பதே மக்கள் முன்னால் இருக்கும் சவாலாகும்.

அதனால் மனங்களை மாற்றும் வார்த்தைகளுக்கு ஏமாந்துவிடாமல் மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும்“ என தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி குறித்து வெளியான அறிவிப்பு!
செய்திகள்

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி குறித்து வெளியான அறிவிப்பு!

June 17, 2026
சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் புலிகளின் தங்கத்தை தேடியவர்களுக்கு ஏமாற்றம்
செய்திகள்

சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் புலிகளின் தங்கத்தை தேடியவர்களுக்கு ஏமாற்றம்

June 17, 2026
சுற்றுலா நிதி முறைகேடு வழக்கு; பெசில் ராஜபக்ஷவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

சுற்றுலா நிதி முறைகேடு வழக்கு; பெசில் ராஜபக்ஷவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

June 17, 2026
யோஷித ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ளார்
செய்திகள்

யோஷித ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ளார்

June 17, 2026
இலங்கை இராணுவத்துக்கு 5.5 மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான இராணுவ பொருட்களை இலவசமாக வழங்கிய இந்தியா
செய்திகள்

இலங்கை இராணுவத்துக்கு 5.5 மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான இராணுவ பொருட்களை இலவசமாக வழங்கிய இந்தியா

June 17, 2026
ஊழியர் சேமலாப மற்றும் நம்பிக்கை நிதிகளை ஒருங்கிணைக்க அமைச்சரவை அங்கீகாரம்!
செய்திகள்

ஊழியர் சேமலாப மற்றும் நம்பிக்கை நிதிகளை ஒருங்கிணைக்க அமைச்சரவை அங்கீகாரம்!

June 17, 2026
Next Post
குளவிக்கொட்டுக்கு இலக்காகிய நிலையில் சுற்றுலாப் பயணிகள் உட்பட்ட 9 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

குளவிக்கொட்டுக்கு இலக்காகிய நிலையில் சுற்றுலாப் பயணிகள் உட்பட்ட 9 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.