Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
எஸ்யூவி ஆடம்பர காரில் வந்து யாசகம் பெரும் நபர்; ஒருநாள் வருமானம் 45000!

எஸ்யூவி ஆடம்பர காரில் வந்து யாசகம் பெரும் நபர்; ஒருநாள் வருமானம் 45000!

1 year ago
in உலக செய்திகள், செய்திகள்

சில மணி நேரம் பிச்சை எடுப்பதன் மூலம் நாள் ஒன்றுக்கு 500 ரிங்கிட் ($140) இலங்கை ரூபாயின் மதிப்பில் 45000 ரூபா உழைப்பதாக மலேசியாவின் ஆண் ஒருவர் தெரிவித்து உள்ளார்.

அவரிடம் எஸ்யூவி ஆடம்பர கார் ஒன்றும் உள்ளது.

பாகாங் மாநிலத்தின் மாரான் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் ஸ்ரீஜெயா இரவுச் சந்தையில் பிச்சை எடுப்பதை ஒழிக்கும் நடவடிக்கையாக சோதனையில் ஈடுபட்டபோது இந்த உண்மை அம்பலமானது.

சோதனையின்போது சாம்பல்நிற ஆடையும் குல்லாவும் அணிந்த நிலையில் இவர் பிச்சை எடுத்துக்கொண்டு இருந்தார்.

காகிதப் பை ஒன்றை வைத்திருந்த அவர், அவ்வழியாகச் செல்வோர் இரக்கப்படும் அளவுக்கு நடந்துகொண்டார்.

அதிகாரிகள் இவரை விசாரித்தபோது, அவர் எந்தப் பதிலையும் தரவில்லை. அவர் ஊமை மற்றும் செவிடாக இருக்கலாம் என்று அதிகாரிகள் கணித்தனர்.

ஆனால், அடையாளப் பத்திரங்களை அதிகாரிகள் கேட்டபோது திடீரென்று அவர் பேசினார். பத்திரங்கள் தமது காரில் இருப்பதாக அவர் கூறினார்.

அது எஸ்யுவி ரகத்தைச் சேர்ந்த புரோட்டான் எக்ஸ் 70 ஆடம்பர கார் என்பதும் அப்போது தெரிய வந்தது. அந்த காரின் தற்போதைய விலை மலேசிய நாணயத்தில் 123,800 ரிங்கிட் முதல் 128,800 ரிங்கிட் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டது.

பெயர் எதனையும் தெரிவிக்காத அந்த நபர், இரவுச் சந்தையில் நான்கு அல்லது ஐந்து மணி நேரம் பிச்சை எடுத்து தினமும் 500 ரிங்கிட் வரை பெறுவதாகக் கூறினார்.

கிளந்தான் மாநிலத்தைச் சேர்ந்த அவர், உடற்குறை காரணமாக கடந்த 2001ஆம் ஆண்டு முதல் சமூகநலத் துறையிடம் இருந்து மாதாமாதம் 450 ரிங்கிட் நிதி உதவியும் பெற்று வருகிறார்.

பிச்சை எடுக்க வேண்டாம் என வாய்மொழி எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள், அவர் மீது நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை.

தொடர்புடையசெய்திகள்

மேலும் 400,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும உதவித்தொகை
செய்திகள்

மேலும் 400,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும உதவித்தொகை

June 6, 2025
சிங்கப்பூருக்கு சென்ற ஸ்ரீலங்கன் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கம்
செய்திகள்

சிங்கப்பூருக்கு சென்ற ஸ்ரீலங்கன் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கம்

June 6, 2025
துறைமுகத்தில் இலஞ்சம் கேட்ட அதிகாரசபை ஊழியர்கள் இடைநீக்கம்
செய்திகள்

துறைமுகத்தில் இலஞ்சம் கேட்ட அதிகாரசபை ஊழியர்கள் இடைநீக்கம்

June 6, 2025
தென் மேற்கு பருவமழை வலுவடையும் என எதிர்பார்ப்பு
செய்திகள்

தென் மேற்கு பருவமழை வலுவடையும் என எதிர்பார்ப்பு

June 6, 2025
மனிதப் புதைகுழியில் இதுவரை ஒரு சிசுவின் எலும்புக்கூடு உட்பட 18 எலும்புக்கூட்டுகள் மீட்பு
செய்திகள்

மனிதப் புதைகுழியில் இதுவரை ஒரு சிசுவின் எலும்புக்கூடு உட்பட 18 எலும்புக்கூட்டுகள் மீட்பு

June 6, 2025
கேரளாவில் குவாட்டர் மதுபான உற்பத்தி நிறுத்தப்படப்போவதாக பரபரப்பு
உலக செய்திகள்

கேரளாவில் குவாட்டர் மதுபான உற்பத்தி நிறுத்தப்படப்போவதாக பரபரப்பு

June 6, 2025
Next Post
யாசகம் பெறுவதற்கு மூன்று சிறுவர்களை பயன்படுத்திய பெண் கைது!

யாசகம் பெறுவதற்கு மூன்று சிறுவர்களை பயன்படுத்திய பெண் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.