Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் தம்மை வந்து சந்திக்குமாறு பங்கு மக்கள் உண்ணாவிரத போராட்டம்!

மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் தம்மை வந்து சந்திக்குமாறு பங்கு மக்கள் உண்ணாவிரத போராட்டம்!

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு – மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குட்பட்ட தேற்றாத்தீவு புனித யூதாதையர் தேவாலயத்தைச் சேர்ந்த பங்கு மக்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் தம்மை வந்து சந்திக்குமாறு தாம் எழுத்து மூலமான கோரிக்கை விடுத்தும் அவர் இதுவரையில் சந்திக்காத காரணத்தினால் உடனடியாக ஆயர் தம்மை நேரில் வந்து சந்தித்து தமது பிரச்சனைகளைக் கேட்டறியும் வரை உண்ணாவிரதத்தில் தேற்றாத்தீவு புனித யூதாதையர் மக்கள் ஈடுபட்டள்ளனர்.

இந்நிலையில், இப்பங்கு மக்களுக்கு தேற்றாத்தீவு புனித யூதாதையர் திருத்தலம் தான் முக்கியமானதாகும். இதன் வளர்ச்சிதான் எமக்குத் தேவை. இவைகள் அனைத்தையும் முன்வைத்து நாம் ஆயருடன் கதைப்பதற்கு வருமாறு எழுத்துமூலம் வேண்டுகோள் விடுத்திருந்தோம்.

எனவே ஆயர் வந்து எமது குறைபாடுகளைக் கேட்டறியும் வரையில் எமது உண்ணாவிரதம் தொடரும் என உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதன்போது கருத்து தெரிவித்த தேற்றாத்தீவு புனித யூதாதையர் திருத்தலத்தின் நிருவாகக் குரு அருட் தந்தை ஆர்.திருச்செல்வம்,

“ஞாயிற்றுக்கிழமை (03.03.2024) காலை நான் பழுகாமத்தில் அமைந்துள்ள ஆலயத்திற்குச் சென்று விட்டு தேற்றாத்தீவு புனித யூதாதையர் திருத்தலத்திற்கு வந்து பார்க்கும் போது ஆலயத்தின் முன்னால் சிலர் உண்ணாவிரத்தில் இருப்பதாக அறிந்தேன்.

இந்த உண்ணாவிரதத்திற்கும் எனக்கும் எதுவித தொடர்பும் இல்லை. எமது ஆயர் வரவேண்டும் என அந்த மக்கள் ஏற்கனவே கேட்டுக் கொண்டதன் பிரகாரம் இதுபற்றி நான் ஆயரின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளேன்.

அந்த வகையில் ஆயர் இங்கு வந்து மக்களைச் சந்திப்பதாகக் கூறியுள்ளார். அவ்வாறு தெரிவித்த பின்னரும் மக்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டம் செய்வது வேதனையளிக்கின்றது. இது ஆலயத்திற்கு நல்ல செயற்பாடு இல்லை.

எனவே மக்கள் ஆர்ப்பாட்டங்களைச் செய்யாமல் அமைதியான முறையில் என்னைச் சந்தித்திருக்க வேண்டும்.

ஆயரின் பதிலை ஏற்கனவே மக்களுக்குத் தெரிவித்த பின்னரும் அதற்குக் கீழ்ப்படியாமல் இருக்கின்றார்கள் என்பதையிட்டு கவலையடைகின்றேன்” என்றார்.

தொடர்புடையசெய்திகள்

ஹங்குரன்கெத்த பகுதியில்இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வீடொன்றில் மோதி விபத்து
செய்திகள்

ஹங்குரன்கெத்த பகுதியில்இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வீடொன்றில் மோதி விபத்து

June 14, 2025
சிவப்புக் கோட்டை தாண்டிய ஈரான்; மிகப் பெரிய விலையை கொடுக்க நேரிடும் என இஸ்ரேல் எச்சரிக்கை
உலக செய்திகள்

சிவப்புக் கோட்டை தாண்டிய ஈரான்; மிகப் பெரிய விலையை கொடுக்க நேரிடும் என இஸ்ரேல் எச்சரிக்கை

June 14, 2025
கடந்த ஆண்டு கிழக்கு மாகாணத்தில் 304 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம்; தடுக்க ‘சரோஜா’ திட்டம் ஆரம்பம்
காணொளிகள்

கடந்த ஆண்டு கிழக்கு மாகாணத்தில் 304 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம்; தடுக்க ‘சரோஜா’ திட்டம் ஆரம்பம்

June 14, 2025
4 மில்லியனுக்கு மேல் அஸ்வெசும பணத்தை மோசடி செய்த பிரதேச செயலக அதிகாரி கைது
செய்திகள்

4 மில்லியனுக்கு மேல் அஸ்வெசும பணத்தை மோசடி செய்த பிரதேச செயலக அதிகாரி கைது

June 14, 2025
குழந்தைகளுக்கு காய்ச்சல், சளி, இருமல் இருந்தால் பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம்; டொக்டர் தீபால்
செய்திகள்

குழந்தைகளுக்கு காய்ச்சல், சளி, இருமல் இருந்தால் பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம்; டொக்டர் தீபால்

June 14, 2025
அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக சிவனொளிபாத மலைக்கு செல்லும் பாதைக்கு பூட்டு
செய்திகள்

அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக சிவனொளிபாத மலைக்கு செல்லும் பாதைக்கு பூட்டு

June 14, 2025
Next Post
வெளிநாட்டு பெண்ணொருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 13 வயது பாடசாலை மாணவன் கைது!

வெளிநாட்டு பெண்ணொருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 13 வயது பாடசாலை மாணவன் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.