Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பில் அரச உத்தியோகத்தர்களுக்கு மட்டக்களப்பில் செயலமர்வு!

தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பில் அரச உத்தியோகத்தர்களுக்கு மட்டக்களப்பில் செயலமர்வு!

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள்

இலங்கை அபிவிருத்தி ஊடகவியலாளர் மன்றம் மற்றும் பொது நலவாய மன்றம் ஆகியன இணைந்து நடாத்திய தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பாக அரச உத்தியோகத்தர்களை வலுப்படுத்தும் செயலமர்வு இன்று (05) திகதி மட்டக்களப்பில் இடம்பெற்றது.

இலங்கை அபிவிருத்தி ஊடகவியலாளர் மன்றத்தின் பணிப்பாளர் சட்டத்தரணி அசாத் முஸ்தபா அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக மட்டக்களப்பு கல்லடி தனியார் விடுதியில் இடம்பெற்ற நிகழ்வினை இலங்கை அபிவிருத்தி ஊடகவியலாளர் மன்றத்தின் சிரேஸ்ட உத்தியோகத்தர் எம்.பஸ்லானின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா முரளிதரன் கலந்து சிறப்பித்துள்ளார்.

தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பான வழிகாட்டல்கள் இதன் போது வழங்கப்பட்டதுடன், தகவல் வழங்கும் உத்தியோகத்தர்களின் கடந்த கால அனுபவங்கள் பகிரப்பட்டதுடன், குறித்த துறை சார்ந்த சவால்கள் மற்றும் சாதக, பாதக நிலை தொடர்பிலும் இதன் போது விரிவாக விவாதிக்கப்பட்டது.

இச் செயலமர்விற்கு பிரதான வளவாளராக விடியல் பத்திரிகையின் பணிப்பாளர் ரிப்தி அலி கலந்து கொண்டு வளவாண்மை மேற்கொண்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாரை ஆகிய மாவட்டங்களில் குறித்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், இச்செயலமர்வுகளில் சுமார் 100 இற்கு மேற்பட்ட அரச உத்தியோகத்தர்கள் உள்வாங்கப்பட்டு, செயலமர்வுகள் இடம்பெற்று வருகின்றது.

ஊடகம் மற்றும் சழகம் சார்ந்த செயற்பாடுகளில் சுமார் 15 வருட காலமாக இலங்கை அபிவிருத்தி ஊடகவியலாளர் மன்றம் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

நாய் கடித்த பெண்ணுக்கு 40 ஆயிரம் ரூபா அபராதம் செலுத்திய உரிமையாளர்; மட்டக்களப்பில் சம்பவம்
செய்திகள்

நாய் கடித்த பெண்ணுக்கு 40 ஆயிரம் ரூபா அபராதம் செலுத்திய உரிமையாளர்; மட்டக்களப்பில் சம்பவம்

June 15, 2025
நாட்டின் சில கரையோரப் பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை
செய்திகள்

நாட்டின் சில கரையோரப் பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

June 15, 2025
பசுவின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிற்றில் சிக்கி 9 வயது சிறுவன் உயிரிழப்பு
செய்திகள்

பசுவின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிற்றில் சிக்கி 9 வயது சிறுவன் உயிரிழப்பு

June 15, 2025
முன்னாள் அமைச்சர் தயா கமகேவின் மூன்று நிறுவனங்களை ஏலத்தில் விற்க உத்தரவு
செய்திகள்

முன்னாள் அமைச்சர் தயா கமகேவின் மூன்று நிறுவனங்களை ஏலத்தில் விற்க உத்தரவு

June 15, 2025
தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து பயணிக்க தமிழரசுக் கட்சி முன்வர வேண்டும் ; ஆனந்தசங்கரி
அரசியல்

தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து பயணிக்க தமிழரசுக் கட்சி முன்வர வேண்டும் ; ஆனந்தசங்கரி

June 15, 2025
மொரட்டுவையில் லிப்ட் இடிந்து விழுந்ததில் இளைஞன் பலி
செய்திகள்

மொரட்டுவையில் லிப்ட் இடிந்து விழுந்ததில் இளைஞன் பலி

June 15, 2025
Next Post
புதிய பொலிஸ்மா அதிபர் நியமனம்; நடவடிக்கை எடுக்க ஆராயும் சட்டத்தரணிகள் சங்கம்!

புதிய பொலிஸ்மா அதிபர் நியமனம்; நடவடிக்கை எடுக்க ஆராயும் சட்டத்தரணிகள் சங்கம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.