Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு பன்குடாவெளி வீடு ஒன்று காட்டு யானையால் சேதம்!

மட்டு பன்குடாவெளி வீடு ஒன்று காட்டு யானையால் சேதம்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு செங்கலடி பன்குடாவெளி பகுதியில் புகுந்த யானைகள் அங்கிருந்த வீடு ஒன்றை உடைத்து நாசம் செய்துள்ள நிலையில் வீட்டில் இருந்த குடும்பத்தினர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

செங்கலடி பன்குடாவெளி தளவாய் பகுதியினுள் நுழைந்த காட்டு யானைகளே இவ்வாறு அட்டகாசம் செய்துள்ளது.

மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பன்குடாவெளி – தளவாய் பகுதினுள் நேற்றிரவு (22) உட்புகுந்த காட்டு யானைகள் வீடொன்றை சேதப்படுத்தியுள்ளது.

இரவு 12 மணியளவில் நுழைந்த யானைகள் வீட்டின் சுவர், கதவு, வீட்டின் முன் பகுதி உள்ளிட்டவையை உடைத்துள்ளதுடன் , அங்கிருந்த பயன்தரும் வாழை, தென்னை மரங்கள், பயிர்கள், வீட்டின் சுற்று வேலி உள்ளிட்டவையையும் அழித்துள்ளது.

வீட்டில் இருந்த ஆறு மாத குழந்தை உள்ளிட்ட குடும்பத்தினர் சத்தம் கேட்டு ஓடியதால் மயிரிழையில் உயிர் தப்பியதாக வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

தளவாய் பகுதியில் தொடர்ச்சியாக காட்டு யானைத் தொல்லையினால் தாம் பெரிதும் பாதிக்கப்படுவதாக கவலை தெரிவிக்கும் மக்கள் தமது பிரச்சினை குறித்து அதிகாரிகள் பாராமுகமாக உள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து உயிர் தப்பிய பெண் கருத்து தெரிவிக்கும் போது “நேற்று இரவு 12 மணி அளவில் யானை எமது வீட்டில் புகுந்தது, வீட்டினை சேதப்படுத்தி இங்குள்ள உடமைகளையும் சேதமாக்கியது நாங்கள் ஓடி தப்பினோம்.

நாம் மிகவும் சிரமப்பட்டு கஷ்டப்பட்டு கட்டிய வீடு இப்படி ஆகிவிட்டது. அரசாங்கத்தினால் எங்களுக்கு எந்த வித உதவியும் கிடைக்கவில்லை. நாங்கள் இது கஷ்டப்பட்டு கட்டிய வீடு அரசாங்கம் எங்களுக்கு உதவ வேண்டும்.

எங்களுக்கு மின்சார வசதி இல்லை. மின்சாரம் வழங்க முடியாது என்கின்றனர். மின்சாரம் வழங்குவதாக இருந்தால் 2 இலட்சம் கேட்கின்றனர். இல்லை என்றால் மின் இணைப்பு வழங்க முடியாது என தெரிவித்துள்ளனர்“ என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு
செய்திகள்

இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு

September 17, 2026
யோஷித, கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு முன் விசாரணை மாநாட்டிற்காக ஒத்திவைப்பு!
செய்திகள்

யோஷித, கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு முன் விசாரணை மாநாட்டிற்காக ஒத்திவைப்பு!

September 17, 2026
மன்னார் மருத்துவமனையில் தாதியர்களுடன் ‘செல்ஃபி’ எடுத்த ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க!
செய்திகள்

மன்னார் மருத்துவமனையில் தாதியர்களுடன் ‘செல்ஃபி’ எடுத்த ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க!

September 17, 2026
மட்டக்குளி விபத்து – கார் சாரதி 30ஆம் திகதி வரை விளக்கமறியலில்!
செய்திகள்

மட்டக்குளி விபத்து – கார் சாரதி 30ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

September 17, 2026
டிட்வா சூறாவளி பாதிப்பு; வீட்டு வாடகைக் கொடுப்பனவு 2026 டிசம்பர் வரை நீடிப்பு
செய்திகள்

டிட்வா சூறாவளி பாதிப்பு; வீட்டு வாடகைக் கொடுப்பனவு 2026 டிசம்பர் வரை நீடிப்பு

September 17, 2026
நாராஹென்பிட RMV வளாகத்தில் தரகர் மாஃபியா ஒழிப்பு; பொலிஸார் அதிரடி நடவடிக்கை!
செய்திகள்

நாராஹென்பிட RMV வளாகத்தில் தரகர் மாஃபியா ஒழிப்பு; பொலிஸார் அதிரடி நடவடிக்கை!

September 17, 2026
Next Post
விமான நிலையத்திலிருந்து வெளியில் வரும்போதே சுற்றுலாப்பயணிகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரம்!

விமான நிலையத்திலிருந்து வெளியில் வரும்போதே சுற்றுலாப்பயணிகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.