Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தமிழக மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடிக்க தடை!

தமிழக மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடிக்க தடை!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது. நேற்று தமிழ்புத்தாண்டு முன்னிட்டு மீன்களின் விலைகள் சற்று குறைவாகவே விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 15,000 விசைப்படகுகள் 2 மாதங்களுக்கு அதாவது 61 நாட்களுக்கு கடலுக்கு செல்லாது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தின் வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா மற்றும் பாக்கு நீரிணை ஆகிய கடல் பகுதிகளில் ஏப்ரல், மே, ஜீன் ஆகிய மாதங்களில் மீன்களின் இனப்பெருக்க காலமாக மத்திய மீன்வளத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் இந்த காலகட்டங்களில் மீன்பிடிக்க சென்றால் மீன் இனப்பெருக்கம் பாதிக்கப்படும் என்பதால் இந்த காலக்கட்டத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது.

இதனால் இந்த காலக்கட்டத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் கடலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த 61 நாட்கள் மீனவர்கள் தங்களின் படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளை சீரமைப்பார்கள். தமிழகத்தில் இந்த மீன்பிடி தடைக்காலம் நேற்று (ஏப்ரல்14) அன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

இந்த மீன்பிடித் தடைக்காலம் வருகின்ற (Meen Pidi Thadai Kalam Date 2024) ஜூன் 14-ம் தேதி வரை மொத்தம் 61 நாட்கள் அமுலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கடல் மீன்படி ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன் கீழ் இந்த தடை தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக மீன்வளத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மீன்பிடி தடைக் காலக்கட்டத்தில் (Meen Pidi Thadai Kalam 2024) கன்னியாகுமாரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர் ஆகிய 14 மாவட்டங்களின் விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தடைக்காலத்தில் மீனவர்களுக்கு நிவாரணமாக (meen pidi thadai kalam nivarana nithi 2024) வழங்கப்பட்டு வந்த ரூ.5000/- இனி ரூ.8000/- ஆக வழங்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிவாரணத் தொகை தமிழகத்தில் 1.90 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடைக்காலம் முடிந்த பிறகு மீன்களின் விலை உயரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தொடர்புடையசெய்திகள்

கல்முனையில் குவியும் குப்பைகள்; உடனடி நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை!
செய்திகள்

கல்முனையில் குவியும் குப்பைகள்; உடனடி நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை!

August 6, 2026
பரீட்சைக் கால இடர்களை அறிவிக்க 5 புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!
செய்திகள்

பரீட்சைக் கால இடர்களை அறிவிக்க 5 புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

August 6, 2026
‘L’ பலகை வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலையில் செல்ல தடை; பொலிஸார்  எச்சரிக்கை!
செய்திகள்

‘L’ பலகை வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலையில் செல்ல தடை; பொலிஸார் எச்சரிக்கை!

August 6, 2026
கிழக்குக் கடற்பரப்பில் பவளப்பாறைகள் தொடர்பாக விரிவான ஆய்வு!
செய்திகள்

கிழக்குக் கடற்பரப்பில் பவளப்பாறைகள் தொடர்பாக விரிவான ஆய்வு!

August 6, 2026
பாடசாலை விடுமுறை தொடர்பில் வௌியான அறிவிப்பு!
செய்திகள்

பாடசாலை விடுமுறை தொடர்பில் வௌியான அறிவிப்பு!

August 6, 2026
கல்முனை பொதுச் சந்தையில் சுகாதார சோதனை; விதிமுறை மீறிய வியாபாரிகளுக்கு சட்ட நடவடிக்கை!
செய்திகள்

கல்முனை பொதுச் சந்தையில் சுகாதார சோதனை; விதிமுறை மீறிய வியாபாரிகளுக்கு சட்ட நடவடிக்கை!

August 6, 2026
Next Post
யாழ் ஸ்ரீ சந்திரசேகர பிள்ளையார் ஆலயத்தின் தேர்த்திருவிழா!

யாழ் ஸ்ரீ சந்திரசேகர பிள்ளையார் ஆலயத்தின் தேர்த்திருவிழா!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.