Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பரீட்சைக் கால இடர்களை அறிவிக்க 5 புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

பரீட்சைக் கால இடர்களை அறிவிக்க 5 புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

52 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தர (உயர்தர) பரீட்சைக் காலத்தில் ஏற்படக்கூடிய இடர்கள் மற்றும் அவசர நிலைமைகள் குறித்து அறிவிப்பதற்காக 5 புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி இதனைத் தெரிவிக்கையில், முப்படையினர் மற்றும் பொலிஸாரின் தொடர்ச்சியான ஒத்துழைப்புடன் விசேட செயல் திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

பரீட்சைக்கு முன்பும், பரீட்சை நடைபெறும் காலத்திலும், பரீட்சை நிறைவடைந்த பின்னரும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இயற்கை அனர்த்தம் அல்லது வேறு அவசர நிலைமைகள் ஏற்பட்டால், மாணவர்களை பாதுகாப்பாக பரீட்சை நிலையங்களுக்கு அழைத்துச் செல்ல தேவையான வசதிகள் ஏற்படுத்தப்படுவதுடன், வினாத்தாள்களை பாதுகாப்பாக எடுத்துச் செல்வதற்கும் பரீட்சை கடமைகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு தேவையான ஆதரவையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், பரீட்சைக்கு முந்தைய தினம் 5 புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிவிக்கப்படும் என்றும், ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள 117 அவசர உதவி இலக்கமும் தொடர்ந்து செயற்பாட்டில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், வானிலை மற்றும் அனர்த்த நிலைமைகள் தொடர்பான தொழில்நுட்ப அறிக்கைகள் 3 அல்லது 6 மணித்தியாலங்களுக்கு ஒருமுறை வெளியிடப்படவுள்ளதாகவும், முப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் உதவி நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாகவும் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

‘L’ பலகை வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலையில் செல்ல தடை; பொலிஸார்  எச்சரிக்கை!
செய்திகள்

‘L’ பலகை வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலையில் செல்ல தடை; பொலிஸார் எச்சரிக்கை!

August 6, 2026
கிழக்குக் கடற்பரப்பில் பவளப்பாறைகள் தொடர்பாக விரிவான ஆய்வு!
செய்திகள்

கிழக்குக் கடற்பரப்பில் பவளப்பாறைகள் தொடர்பாக விரிவான ஆய்வு!

August 6, 2026
பாடசாலை விடுமுறை தொடர்பில் வௌியான அறிவிப்பு!
செய்திகள்

பாடசாலை விடுமுறை தொடர்பில் வௌியான அறிவிப்பு!

August 6, 2026
கல்முனை பொதுச் சந்தையில் சுகாதார சோதனை; விதிமுறை மீறிய வியாபாரிகளுக்கு சட்ட நடவடிக்கை!
செய்திகள்

கல்முனை பொதுச் சந்தையில் சுகாதார சோதனை; விதிமுறை மீறிய வியாபாரிகளுக்கு சட்ட நடவடிக்கை!

August 6, 2026
நெடுந்தீவு கடற்பரப்பில் அனர்த்தத்திற்குள்ளான 11 இந்திய மீனவர்கள் பாதுகாப்பாக மீட்பு!
செய்திகள்

நெடுந்தீவு கடற்பரப்பில் அனர்த்தத்திற்குள்ளான 11 இந்திய மீனவர்கள் பாதுகாப்பாக மீட்பு!

August 6, 2026
திருகோணமலையில் குளவி தாக்குதல்; 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!
செய்திகள்

திருகோணமலையில் குளவி தாக்குதல்; 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

August 6, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.