ஊழியர் சேமலாப நிதியத்தின் வட்டி வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய 2023ஆம் ஆண்டில் காணப்பட்ட ஒன்பது வீத வட்டி, 13 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டிய தெரிவித்தார்.

சீரான முறையில் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டதை கவனத்தில் கொண்டு, அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.
சுமார் 27 இலட்சத்திற்கும் அதிக ஊழியர்களின் சேமலாப நிதியம் இந்த வட்டி வீத அதிகரிப்பின் மூலம் பல நன்மைகளை பெற்றுத் தரும் என்று ராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.