Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வாகரையை அழிக்கும் செயற்பாட்டில் இறங்கியுள்ள மக்கள் பிரதிநிதிகள்; கிழக்கு ஆளுனருடன் விசேட கலந்துரையாடல்!

வாகரையை அழிக்கும் செயற்பாட்டில் இறங்கியுள்ள மக்கள் பிரதிநிதிகள்; கிழக்கு ஆளுனருடன் விசேட கலந்துரையாடல்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

எமது வாக்குகளினால் மக்கள் பிரதிநிதிகளானவர்கள் இன்று வாகரை பிரதேசத்தினை அழிக்கும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுத்துவருவதாக வாகரை பிரதேச பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமானுக்கும் வாகரை பிரதேச பொது அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று(28) காலை மட்டக்களப்பில் உள்ள ஆளுனரின் அலுவலகத்தில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் ஏற்பாட்டின் கீழ் நடைபெற்றது.

வாகரை பகுதியில் இல்மனைட் அகழ்வு மற்றும் இறால் பண்ணை திட்டங்களுக்கு அனுமதி வழங்கவேண்டாமென கோரி வாகரை பிரதேச மக்கள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த திட்டங்கள் ஊடாக வாகரை பிரதேசத்தில் சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படும் என்பதுடன் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் என்ற காரணத்தினால் இந்த திட்டங்களுக்கு எதிராக தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் குறித்த போராட்டங்களில் ஈடுபடும் வாகரை பிரதேச பொது அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்தித்து ஆளுனர் கலந்துரையாடினார்.

தமது பகுதிகளுக்கு இவ்வாறான திட்டங்கள் பொருத்தமற்றவை எனவும் அவை தொடர்பில் ஆளுனரின் கவனத்திற்கு கொண்டுசென்றுள்ளதாகவும் எவ்வாறாயினும் அதனையும் மீறி திட்டங்கள் முன்னெடுக்கப்படுமானால் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என இங்கு பொது அமைப்புகளின் பிரதிநிதிகளினால் தெரிவிக்கப்பட்டது.

வாகரை பிரதேசத்தினை பாதிக்கும் வகையிலான செயற்பாடுகளை அனுமதிக்க முடியாதெனவும் அவ்வாறான மக்கள் நலனுக்கு எதிரான திட்டங்களை எதிர்ப்போமெனவும் பொது அமைப்புகள் தெரிவித்தன.

இறால் பண்ணை வளர்க்கும் பகுதிகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள்,விவசாய நிலங்கள்,கண்டல்தாவரங்கள் நிறைந்து காணப்படுகின்றன.

காட்டை அண்டிய பகுதிகளில் மக்கள் குடியிருப்பு பகுதிகள் காணப்படுகின்றன அத்தோடு அதனை அண்டிய சதுப்பு நிலங்கள் காணப்படுகின்றன.

இவை இல்லாமல் போனால் வாகரை பகுதி மக்களின் இருப்புகள் இல்லாமல்போகும் நிலையேற்படும். வாகரை பிரதேச மக்களின் இருப்பினை மக்களினால் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் சிதைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவதாகவும் வாகரை பிரதேசத்தில் முன்னெடுக்கப்படும் இந்த இறால் பண்ணை திட்டத்தினை நிறுத்துவதற்கு அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மக்களுக்கு எதிரான மக்கள் ஏற்றுக்கொள்ளாத எந்த திட்டத்திற்கும் ஆதரவளிக்கப்போவதில்லையெனவும் அதற்கு எதிராக மக்களுடன் இணைந்து செயற்படுவேன் எனவும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் மக்களின் வாழ்வாதாரத்தினை நோக்காக கொண்டு முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை எந்த தடைகள் வந்தாலும் முன்கொண்டு செல்வேன் எனவும் மக்களுக்கு தீங்கான எந்த திட்டங்கள் வந்தாலும் அதனை ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லையெனவும் கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

60 வகையான மருந்துகளின் விலைகளை திருத்தியமைக்க நடவடிக்கை
செய்திகள்

60 வகையான மருந்துகளின் விலைகளை திருத்தியமைக்க நடவடிக்கை

June 19, 2026
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு படகுகள், வலைகள் வழங்கல்!
செய்திகள்

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு படகுகள், வலைகள் வழங்கல்!

June 19, 2026
நெடுந்தீவில் காணாமல் போன மீனவர் நாகபட்டினத்தில் சடலமாக மீட்பு
செய்திகள்

நெடுந்தீவில் காணாமல் போன மீனவர் நாகபட்டினத்தில் சடலமாக மீட்பு

June 19, 2026
கிரானில் உயர்தர பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கு தெரிவான மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு
செய்திகள்

கிரானில் உயர்தர பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கு தெரிவான மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

June 19, 2026
எல் நினோ காலநிலை மாற்றத்தினால் இலங்கைக்கு பாதிப்பு குறைவு; விவசாயத் திணைக்களம்
செய்திகள்

எல் நினோ காலநிலை மாற்றத்தினால் இலங்கைக்கு பாதிப்பு குறைவு; விவசாயத் திணைக்களம்

June 19, 2026
அம்பாறையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்; அமைச்சர்களின் படங்களை மாட்டின் கொம்புகளில் கட்டி எதிர்ப்பு
செய்திகள்

அம்பாறையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்; அமைச்சர்களின் படங்களை மாட்டின் கொம்புகளில் கட்டி எதிர்ப்பு

June 19, 2026
Next Post
100 கோடி ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் பூமியில் பரிணாம வளர்ச்சி; அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்!

100 கோடி ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் பூமியில் பரிணாம வளர்ச்சி; அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.