முள்ளிவாய்க்கால் தினமான இன்று பிரித்தானிய தொழிற்கட்சியானது வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில் இறுதியுத்தத்தின் போது பல்லாயிரக்கணக்கான மக்கள் கொலைசெய்யப்பட்ட இந்த நாளில் தாங்கள் இழப்புக்களை சந்தித்த மக்களோடும் ,அவர்களுடைய உறவுகளோடும் ஒன்றுசேர்ந்து இந்த நாளை அனுஷ்டிப்பதாக தெரிவித்துள்ளனர்.
அத்தோடு இந்த செயற்பாடுகளிள் ஈடுபட்டவர்கள் இன்னும் நீதிக்கு முன்னர் கொண்டுவரப்படவில்லை என்பதை அவர்கள் குறிப்பிட்டதோடு,அவர்கள் அனைவரையும் சர்வதேச சட்டங்களுக்கு அமைய உடனடியாக ஐக்கியநாடுகள் சபையின் பரிந்துரைகளும் ஏற்ப செயற்படவேண்டும் என்று நாங்கள் பிரித்தானிய அரசாங்கத்தை வலியுறுத்துவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.








