Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
1700 ரூபாயாக அதிகரிக்கப்பட்டது தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம்!

1700 ரூபாயாக அதிகரிக்கப்பட்டது தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம்!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் விரைவில் தீர்வினை வழங்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொட்டகலையில் இடம்பெற்ற இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினையால் மலையக மக்கள் தான் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். அவ்வளவு பிரச்சினையிலும், அவர்கள் எமக்கு தேயிலையை பறித்துக் கொடுத்தார்கள்.

அந்தத் தேயிலையை நாம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததன் ஊடாக, 2023 ஆம் ஆண்டு நாட்டுக்கு அந்நியச்செலாவணி அதிகரித்தது.

2024 ஆம் ஆண்டிலும் அந்நியச் செலாவணி அதிகரித்து வருகிறது.

இதற்காக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நான் ஜனாதிபதி என்ற வகையில், நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவர்களின் வியர்வையால்தான் நாடு இன்று முன்னேற்றமடைந்துள்ளது.

நாம் தற்போது அரச ஊழியர்களின் சம்பளத்தை 10 ஆயிரம் ரூபாயால் அதிகரித்துள்ளோம்.

எனது ஆட்சியில் மலையக மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு முன்வைக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், பெருந்தோட்ட தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாளாந்த வேதன அதிகரிப்பு தொடர்பான அதிவிசேட வர்த்தமானி தொழில் ஆணையாளரினால் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச நாளாந்த வேதனம் 1,350 ரூபாயாகவும், நாளாந்த விசேட கொடுப்பனவு 350 ரூபாயாகவும், மொத்தமாக 1700 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலதிக தேயிலை கிலோவொன்றுக்காக வழங்கப்படும் கொடுப்பனவும் 80 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

யாழ் போதனா வைத்தியசாலையில் இளம்பெண் அவமானப்படுத்தப்பட்டதாக முறைப்பாடு!
செய்திகள்

யாழ் போதனா வைத்தியசாலையில் இளம்பெண் அவமானப்படுத்தப்பட்டதாக முறைப்பாடு!

June 17, 2026
இந்திய அரசுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தது டெலிகிராம்
உலக செய்திகள்

இந்திய அரசுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தது டெலிகிராம்

June 17, 2026
சுரேஷ் சலேவின் உடல்நிலை கவலைக்கிடம்; ஆடைகளின்றி சோதனை செய்ததை CID ஏற்றுக்கொண்டதாக மனைவி குற்றச்சாட்டு!
செய்திகள்

சுரேஷ் சலேவின் உடல்நிலை கவலைக்கிடம்; ஆடைகளின்றி சோதனை செய்ததை CID ஏற்றுக்கொண்டதாக மனைவி குற்றச்சாட்டு!

June 17, 2026
கத்தாரில் வதிவிட விசா இரத்து செய்யப்பட்டால் 14 நாட்களுக்குள் வெளியேற வேண்டும்; விதிகளை மீறினால் தினசரி அபராதம்
செய்திகள்

கத்தாரில் வதிவிட விசா இரத்து செய்யப்பட்டால் 14 நாட்களுக்குள் வெளியேற வேண்டும்; விதிகளை மீறினால் தினசரி அபராதம்

June 17, 2026
உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க வேண்டும்; சமிந்திராணி கிரியெல்ல கோரிக்கை!
செய்திகள்

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க வேண்டும்; சமிந்திராணி கிரியெல்ல கோரிக்கை!

June 17, 2026
பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி குறித்து வெளியான அறிவிப்பு!
செய்திகள்

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி குறித்து வெளியான அறிவிப்பு!

June 17, 2026
Next Post
சாவகச்சேரி பகுதியில் லேன்ட் மாஸ்டர் விபத்து; ஒருவர் பலி!

சாவகச்சேரி பகுதியில் லேன்ட் மாஸ்டர் விபத்து; ஒருவர் பலி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.