Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
போலி கடவுச்சீட்டு விவகாரம் குறித்து சீனப் பிரஜை ஒருவரை நாடு கடத்தத் தீர்மானம்!

போலி கடவுச்சீட்டு விவகாரம் குறித்து சீனப் பிரஜை ஒருவரை நாடு கடத்தத் தீர்மானம்!

3 years ago
in செய்திகள்

போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இலங்கைக்குள் பிரவேசிக்க முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் சீனப் பிரஜை ஒருவரை நாடு கடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டிற்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்பட்டதாக முன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

2023 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி துபாயிலிருந்து இரண்டு சீனப் பிரஜைகளும் ஒரு எகிப்தியரும் இலங்கைக்கு வந்திருந்தனர்.

இதில் சீனர்களில் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கினியாவில் தயாரிக்கப்பட்ட கடவுச்சீட்டை கொண்டிருந்தார்.

இந்தநிலையில் அது போலியானது என்று கண்டறிந்த குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள், அவரை நாட்டுக்குள் அனுமதிக்க மறுத்துள்ளனர்.

இதனையடுத்து சீன பிரஜையும், சகாக்களும் கட்டுக்கடங்காத வகையில் நடந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் விடயத்தில் தலையீடு செய்த இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ, 2023 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு கடிதமொன்றை அனுப்பினார்.

அதில் தனது அமைச்சின் கீழ் ஆரம்பிக்கப்படவுள்ள வீடமைப்புத் திட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சீனப் பிரஜை இலங்கை வந்துள்ளதாகத் தெரிவித்திருந்தார்.

எனவே கடவுச்சீட்டை பரிசீலித்து சீன நபரை இலங்கைக்குள் அனுமதிக்குமாறு இராஜாங்க அமைச்சர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இலங்கையில் உள்ள சீன நிறுவனம், அவர் உண்மையானவர் என்றும் அவர் சீன கடவுச்சீட்டை வைத்துள்ளார். அவருக்கு விதிக்கப்படும் எந்த தண்டனைக்கும், அல்லது அவரை நாடு கடத்தும் முடிவுக்கும் தாங்களே பொறுப்பு என்று கூறியதன் அடிப்படையிலேயே தாம் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு கடிதம் அனுப்பியதாக அருந்திக்க பெர்ணான்டோ விளக்கமளித்திருந்தார்.

எனினும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் பொதுப் பாதுகாப்பு அமைச்சின் கீழ் வருகின்ற நிலையில் இந்த விடயம் அமைச்சர் டிரன் அலஸிடம் தெரிவிக்கப்பட்டது.

முதலில் சீன நாட்டவர் தொடர்பில் சீன தூதரகத்துடன் சரிபார்த்து முடிவெடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்ததாக அருந்திக்க பெர்ணான்டோ குறிப்பிட்டிருந்தார்.

தொடர்புடையசெய்திகள்

ஈரானுக்கு ஆதரவாக பதிவிட்ட செய்தி வாசிப்பாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
செய்திகள்

ஈரானுக்கு ஆதரவாக பதிவிட்ட செய்தி வாசிப்பாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

June 9, 2026
புனரமைக்க முடியாத மலையக வீடுகளுக்கு ரூ.50 இலட்சம்; அரசின் புதிய தீர்மானம்!
செய்திகள்

புனரமைக்க முடியாத மலையக வீடுகளுக்கு ரூ.50 இலட்சம்; அரசின் புதிய தீர்மானம்!

June 9, 2026
30 ஆண்டு சட்டப் போராட்டத்தில் தாய்க்கு வெற்றி; வீட்டின் உரிமை தாய்க்கே என நீதிமன்றம் தீர்ப்பு
செய்திகள்

30 ஆண்டு சட்டப் போராட்டத்தில் தாய்க்கு வெற்றி; வீட்டின் உரிமை தாய்க்கே என நீதிமன்றம் தீர்ப்பு

June 9, 2026
விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமில்லை; ஆனந்த விஜேபால
செய்திகள்

விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமில்லை; ஆனந்த விஜேபால

June 9, 2026
வலுவடையும் டொலரின் மதிப்பு; ரூ. 342 ஐ தாண்டிய விற்பனை விலை!
செய்திகள்

வலுவடையும் டொலரின் மதிப்பு; ரூ. 342 ஐ தாண்டிய விற்பனை விலை!

June 9, 2026
50 ஆண்டுகளாக தொடரும் உரிமைப் போராட்டம்; தீர்வு இல்லை என குற்றச்சாட்டு!
செய்திகள்

50 ஆண்டுகளாக தொடரும் உரிமைப் போராட்டம்; தீர்வு இல்லை என குற்றச்சாட்டு!

June 9, 2026
Next Post
களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் விபத்து!

களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் விபத்து!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.