Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ரஷ்யா இராணுவத்திற்கு கூலிப்படையை அனுப்பிய மேஜர் ஜெனரல் கைது!

ரஷ்யா இராணுவத்திற்கு கூலிப்படையை அனுப்பிய மேஜர் ஜெனரல் கைது!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கையின் ஒய்வு பெற்ற இராணுவத்தினரை ரஷ்ய இராணுவத்திற்கு கூலிப்படையாக அழைத்துச் செல்லும் ஒழுங்கமைக்கப்பட்ட கடத்தலின் தலைவன் என அடையாளம் காணப்பட்ட ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் மற்றும் சார்ஜன்ட் மேஜர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் 08 ம் திகதி இரவு குருநாகலில் வைத்து அவர்களை கைது செய்துள்ளனர்.

பிரசன்ன ரணவக்க என்ற இந்த மேஜர் ஜெனரல் 2022ஆம் ஆண்டு இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற இராணுவப் பிரிவுத் தளபதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றைய சந்தேக நபரான மேஜர் சரத் விஜேசிங்க சார்ஜன்ட் எனவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களம், வர்த்தகக் கடத்தல் மற்றும் கடல் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளின் நீண்ட விசாரணையின் பலனாக, இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் குருநாகலில் வசிப்பவர்கள் மற்றும் மேஜர் ஜெனரல் குருநாகல் லேக் வீதியில் வசிக்கின்றார். கை தான சந்தேக நபர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

சந்தேக நபர்கள் இருவரும் 500க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களை கூலிப்படையாக ரஷ்யாவுக்கு அனுப்பியுள்ளமை தெரியவந்துள்ளது.

இதில், 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

அதேவேளை அண்மைக்காலமாக சுமார் 150 பேர் ரஷ்யாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பயிற்சி முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டிலிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடையசெய்திகள்

இலங்கை உட்பட 60 நாடுகள் மீதான ட்ரம்ப்பின் வரிகளுக்கு புதிய சவால்!
உலக செய்திகள்

இலங்கை உட்பட 60 நாடுகள் மீதான ட்ரம்ப்பின் வரிகளுக்கு புதிய சவால்!

August 4, 2026
3 மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு!
செய்திகள்

3 மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு!

August 4, 2026
நீதிபதிகள் ஓய்வு வயது திருத்தம்; இலங்கைக்கு சர்வதேச நீதிபதிகள் சங்கம் கவலை!
செய்திகள்

நீதிபதிகள் ஓய்வு வயது திருத்தம்; இலங்கைக்கு சர்வதேச நீதிபதிகள் சங்கம் கவலை!

August 4, 2026
சீரற்ற வானிலை; பரீட்சைகள் குறித்து நாளை விசேட கலந்துரையாடல்!
செய்திகள்

சீரற்ற வானிலை; பரீட்சைகள் குறித்து நாளை விசேட கலந்துரையாடல்!

August 4, 2026
விபத்துக்களை குறைக்க மோட்டார் சைக்கிள்களுக்கு பிரத்யேகப் பாதை!
செய்திகள்

விபத்துக்களை குறைக்க மோட்டார் சைக்கிள்களுக்கு பிரத்யேகப் பாதை!

August 4, 2026
சீரற்ற வானிலை தாக்கம்; சப்ரகமுவ, கண்டி, நுவரெலியாவில் 6 பேர் உயிரிழப்பு – ஒருவர் மாயம்!
செய்திகள்

சீரற்ற வானிலை தாக்கம்; சப்ரகமுவ, கண்டி, நுவரெலியாவில் 6 பேர் உயிரிழப்பு – ஒருவர் மாயம்!

August 4, 2026
Next Post
மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருது வழங்கி வைப்பு!

மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருது வழங்கி வைப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.