Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கொழும்பில் மனதை ஒருநிலைப்படுத்தும் நிகழ்வு!

கொழும்பில் மனதை ஒருநிலைப்படுத்தும் நிகழ்வு!

2 years ago
in செய்திகள்

ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் அலுவலகம் மற்றும் கல்வி அமைச்சு என்பன இணைந்து ஏற்பாடு செய்த மனதை ஒருநிலைப்படுத்தி, வலுப்படுத்தும் நிகழ்ச்சி நேற்று (20) கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது

தற்போதைய சந்ததியினருக்கு தியானம் தொடர்பான புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில், புத்த ரஷ்மி தேசிய வெசாக் பண்டிகையுடன் இணைந்ததாக இந்த நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

வணக்கத்திற்குரிய கலாநிதி கிரிந்தே அஸ்ஸாஜி தேரரின் ஆலோசனையின் கீழ் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் வழிகாட்டுதலில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

நிகழ்வில் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழகங்கள், சர்வதேச பாடசாலைகள் மற்றும் தொழிநுட்பக் கல்லூரிகள் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 500 பேர் கலந்துகொண்டனர்.

மீதிரிகல ஆரண்ய சேனாசனவாசி வணக்கத்திற்குரிய ஹோமாகம தம்மகுசல தேரர் மாணவர்களுக்கு தியானம் மேற்கொள்வது பற்றிய நடைமுறை பயிற்சிகளை இதன்போது வழங்கினார்.

இங்கு சிறப்புரையாற்றிய கங்காராம விகாராதிபதியான கிரிந்தே அஸ்ஸஜி தேரர், நாட்டின் எதிர்காலம் சிறுவர் தலைமுறையைச் சார்ந்தது எனவும், நாட்டின் சிறுவர்களின் அறிவு, கல்வி, திறமை, திறன் என்பவற்றிலே நாட்டின் எதிர்காலம் தீர்மானிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

மேலும், ஒழுக்கமும் திறமையும் கொண்ட சிறுவர் தலைமுறையை உருவாக்குவதற்கு மனதை ஒருநிலைப்படுத்துவது தொடர்பான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்று குறிப்பிட்ட அவர் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

நீதியரசர்களின் ஓய்வூதிய வயதெல்லையை தன்னிச்சையாக மாற்றக்கூடாது
செய்திகள்

நீதியரசர்களின் ஓய்வூதிய வயதெல்லையை தன்னிச்சையாக மாற்றக்கூடாது

July 4, 2026
சட்டவிரோதமான முறையில் கழிவு தேயிலையை கொண்டு சென்ற மூவர் கைது!
செய்திகள்

சட்டவிரோதமான முறையில் கழிவு தேயிலையை கொண்டு சென்ற மூவர் கைது!

July 4, 2026
சட்டவிரோத மீன்பிடி ஒழிப்பு நடவடிக்கையில் 27 பேர் கைது; 12 படகுகள் கைப்பற்றல்!
செய்திகள்

சட்டவிரோத மீன்பிடி ஒழிப்பு நடவடிக்கையில் 27 பேர் கைது; 12 படகுகள் கைப்பற்றல்!

July 4, 2026
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு சர்வதேச விசாரணை கோரி மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!
காணொளிகள்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு சர்வதேச விசாரணை கோரி மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

July 4, 2026
சூரியபுரவில் காட்டு யானை தாக்கி 45 வயது நபர் உயிரிழப்பு!
செய்திகள்

சூரியபுரவில் காட்டு யானை தாக்கி 45 வயது நபர் உயிரிழப்பு!

July 4, 2026
மேல் மாகாணத்தில் நாளை முதல் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை
செய்திகள்

மேல் மாகாணத்தில் நாளை முதல் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

July 4, 2026
Next Post
தனி நாடாக மாறப்போகும் தாய்வான்; புதிய ஜனாதிபதி பதவியேற்பு!

தனி நாடாக மாறப்போகும் தாய்வான்; புதிய ஜனாதிபதி பதவியேற்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.