Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சிறைச்சாலை அதிகாரிகள் தொழிற்சங்க போராட்டத்தை கைவிட்டனர்!

சிறைச்சாலை அதிகாரிகள் தொழிற்சங்க போராட்டத்தை கைவிட்டனர்!

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவின் வாக்குறுதி மீது நம்பிக்கை வைத்து சிறைச்சாலை அதிகாரிகள் முன்னெடுத்து வந்த பணி பகிஷ்கரிப்பு போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலை ஆணையாளருமான காமினி பி, திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

20ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு கோரி சிறைச்சாலை அதிகாரிகள் நேற்று முன்தினம் திங்கட்கிழமை முதல் தொழிற்சங்க போராட்டம் ஒன்றை ஆரம்பித்திருந்தனர். அதுதொடர்பாக நேற்று சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் உள்ளிட்ட சிறைச்சாலை உயர் அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளுக்கிடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதன்போது, நீதிமன்ற நடவடிக்கைகள் பாதிப்படைவதற்கு இடமளிக்க வேண்டாம் எனவும் சிறைச்சாலை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படும் வகையிலும் செயற்பட வேண்டாம் என சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

சிறைச்சாலை அதிகாரிகளின் கோரிக்கை நியாயமானது. அதனை நிறைவேற்ற அமைச்சரவை பத்திரம் சமர்ப்பித்து, அவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்கு தான் நடவடிக்கை எடுப்பதாக நீதி அமைச்சர் கடந்த திங்கட்கிழமை தெரிவித்திருந்தார்.

நீதி அமைச்சரால் வழங்கப்பட்ட இந்த வாக்குறுதி தொடர்பில் நம்பிக்கை வைத்து, தொழிற்சங்க போராட்டத்தை கைவிட்டு சேவைக்கு திரும்புவதாக பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சிறைச்சாலை அதிகாரிகளின் தொழிற்சங்க போராட்டம் காரணமாக சந்தேக நபர்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நேற்று முன்தினம் நீதிமன்றத்துக்கு அழைத்துச்செல்லப்படவில்லை. அதனால் நீதிமன்ற உத்தரவை மீறி செயற்பட்டமை தொடர்பில் நீதிமன்றத்துக்கு வந்து விளக்கமளிக்குமாறு கொழும்பு பிரதம நீதிவான், சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்துக்கு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கமாகும்.

தொடர்புடையசெய்திகள்

வவுனியா சிறைச்சாலைக்குள் அதிரடியாக நுழைந்த குற்றப்புலனாய்வுப் பிரிவினர்
செய்திகள்

வவுனியா சிறைச்சாலைக்குள் அதிரடியாக நுழைந்த குற்றப்புலனாய்வுப் பிரிவினர்

June 13, 2025
திருகோணமலை மாவட்ட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு
செய்திகள்

திருகோணமலை மாவட்ட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு

June 13, 2025
நிறைவுக்கு வந்தது சீனி நிதி மோசடி விசாரணை
செய்திகள்

நிறைவுக்கு வந்தது சீனி நிதி மோசடி விசாரணை

June 13, 2025
3 ஆண்டுகளில் 10 இலட்சம் ரஷ்ய வீரர்கள் பலி; உக்ரைன் அறிவிப்பு
உலக செய்திகள்

3 ஆண்டுகளில் 10 இலட்சம் ரஷ்ய வீரர்கள் பலி; உக்ரைன் அறிவிப்பு

June 13, 2025
யாழில் மூன்று இலட்சம் பெறுமதியான 6 ஆடுகளை திருடிய இருவர் கைது
செய்திகள்

யாழில் மூன்று இலட்சம் பெறுமதியான 6 ஆடுகளை திருடிய இருவர் கைது

June 13, 2025
என்னைப் பதவி விலகுமாறு கோருவதற்கு சாணக்கியனுக்கு அருகதை இல்லை; கோவிந்தன் கருணாகரம்
அரசியல்

என்னைப் பதவி விலகுமாறு கோருவதற்கு சாணக்கியனுக்கு அருகதை இல்லை; கோவிந்தன் கருணாகரம்

June 13, 2025
Next Post
மத்ரசா மாணவனை காணவில்லை!

மத்ரசா மாணவனை காணவில்லை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.