Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தமிழீழ விடுதலை புலிகள் மீதான இந்திய அரசின் தடையின் பின்னணி?

தமிழீழ விடுதலை புலிகள் மீதான இந்திய அரசின் தடையின் பின்னணி?

1 year ago
in சிறப்பு கட்டுரைகள், செய்திகள்

தமிழீழ விடுதலை புலிகளுக்கும் இலங்கையின் அரச படைகளுக்கும் இடையில் இடம்பெற்ற மூன்று தசாப்தக்கால போர் நிறைவடைந்து 15 வருடங்கள் ஆகின்றன.

போரில் உயிரிழந்தவர்களை நினைவுக்கூர்ந்து வடக்கு மற்றும் கிழக்கில் நிகழ்வுகளும் அனுஷ்டிப்புகளும் இடம்பெற்றிருந்தன. இவ்வாறானதொரு நிலையில், நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு பாதகமான வன்முறை மற்றும் சீர்குலைவு நடவடிக்கைகளுக்காக தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீடிப்பதாக இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது

தமிழீழ விடுதலை புலிகளுக்கு எதிரான வலுவான நிலைப்பாட்டை தொடர்ந்தும் இந்தியா கடைப்பிடிக்கின்றமையின் வெளிப்பாடாகவே இந்த நீடிப்பு உள்ளது.

இந்திய பிரஜைகளின் பாதுகாப்பிற்கு விடுதலை புலிகள் இயக்கத்தால் பெரும் அச்சுறுத்தல் ஏற்படுத்துகிறது.
எனவே உடனடியாக அமலுக்கு வரும் வகையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தை சட்டவிரோத அமைப்பாக அறிவிக்க வேண்டியது அவசியம் என்று இந்திய உள்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

விடுதலை புலிகளுக்கு எதிரான தடையை மேலும் சுட்டிக்காட்டிய இந்திய மத்திய அரசு, இணைய வலைதளங்களில் கட்டுரைகள் மூலம் புலம்பெயர்ந்தோர் தொடர்ந்தும் புலிகள் இயக்கத்தை ஆதரித்து வருகின்றனர்.

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதற்கு இந்திய அரசையே பொறுப்பாக்குவதன் மூலம் இலங்கைத் தமிழர்கள் மத்தியில் இந்தியாவுக்கு எதிரான உணர்வை பரப்புகின்றனர். இதனால் இந்தியாவின் முக்கியமான நபர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அவசியமாகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளது.

2009ஆம் ஆண்டு மே மாதம் விடுதலை புலிகள் இயக்கம் இலங்கையில் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்டனர்.

ஆனால் விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளர்கள் ‘ஈழம்’ (தமிழர்களுக்குத் தனி நிலம்) என்ற கருத்தைக் கைவிடவில்லை. இந்த இலக்கை அடைவதற்காக நிதி திரட்டுதல் மற்றும் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் இரகசியமாக செயல்பட்டு வருகின்றனர்.

சர்வதேச நாடுகளில் ‘எஞ்சியிருக்கும் விடுதலை புலி தலைவர்கள் அல்லது அங்கத்தவர்கள், சிதறிய செயற்பாட்டாளர்களை மீண்டும் ஒருங்கிணைத்து உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் இந்த அமைப்பை மீள எழுப்புவதற்கான முயற்சிகளை ஆரம்பித்துள்ளனர் என்றும் இந்தியா குறிப்பிடுகின்றது.

அனைத்துத் தமிழர்களுக்கும் தனித் தாயகம் (தமிழீழம்) என்ற விடுதலைப் புலிகளின் நோக்கமானது இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் என்றும் கூறுகின்றது.

தமிழீழ போராட்ட வரலாற்றில் வடக்கில் செயல்பட்ட அனைத்து அமைப்புகளுக்கும் இந்தியாவின் ஆதரவு இருந்தது. ஆனால் விடுதலை புலிகள் இயக்கமும் அதன் தலைமைத்துவமும் இந்தியாவை சந்தேக கண் கொண்டே பார்த்தது.

விடுதலைப் புலிகள் இயக்கம் 1975 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட போது, இலங்கையை ஆட்சி செய்த சிங்கள அரசுகளின் தமிழர் தொடர்பான கொள்கைகளால் விரக்தியுற்ற பல இளைஞர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் ஈர்க்கப்பட்டனர்.

புலிகள் இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட ஆரம்பக்காலக்கட்டத்தில் இலங்கை பொலிஸ் துறையினர், மற்றும் அரசுக்கு ஆதரவான உள்ளூர் அரசியல்வாதிகளை இலக்கு வைத்து சிறிய அளவிளான தாக்குதல்களை நடத்தியது.

1975 ஆம் ஆண்டு யாழ் நகர முதல்வர் அல்பிரட் துரையப்பா சுட்டுக்கொலைச் செய்யப்பட்டமை இக்காலப்பகுதியில் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட முக்கிய தாக்குதலாக கருதப்படுகின்றது.

மேலும் இக்காலப்பகுதியில் புலிகள் அமைப்பு ஏனைய ஈழ இயக்கங்களுடன் இணைந்து செயற்பட்டது.

1984 ஆம் ஆண்டில் ஏப்ரல் மாதம் தமிழீழ விடுதலை இயக்கம், ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் மற்றும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என்பன ஈழப் போராட்ட அமைப்பான ஈழ தேசிய விடுதலை முன்னணியில் இணைந்தன.

ஆனால் 1986ஆம் ஆண்டில் புலிகள் இயக்கம், ஈழ தேசிய விடுதலை அமைப்பில் இருந்து விலகி, தமிழீழ விடுதலை இயக்கத்தின் உறுப்பினர்கள் மீதும் அதன் தளங்கள் மீதும் தாக்குதல் நடத்தியது.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைமையும் போராளிகளும் புலிகள் இயக்கத்தினரால் கொல்லப்பட்டனர். இதன் பின்னர் புலிகள் அமைப்பு, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மீதும் தாக்குதல் நடத்தியது. இதனால் இவ்வமைப்பு யாழ்குடாவை விட்டு வெளியேறியது.

மீதமிருந்த ஈழ இயக்கங்களை தம்முடன் இணைந்து கொள்ளுமாறு புலிகள் இயக்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பான அறிவித்தல்கள் யாழ்ப்பாணத்திலும் இந்தியாவில் சென்னையிலும் விடுக்கப்பட்டன.

தமிழீழ விடுதலை இயக்கம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகிய ஈழ இயக்கங்கள் அழிக்கப்பட்ட நிலையில், எஞ்சியிருந்த சில இயக்கங்கள் புலிகள் அமைப்புக்குள் உள்வாங்கப்பட்டன. இதன் மூலம் யாழ்ப்பாணம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது.

ஏனைய இயக்கங்கள் மீதான விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தாக்குதல் குறித்து பரவலாக விவாதங்கள் எழுந்த நிலையில், அனைத்து ஈழ இயக்கங்களுக்கும் இந்தியா ஆதரவளித்து வந்தது.

ஆனால் தமிழீழ விடுதலை இயக்கம் போன்றவை இந்தியாவை முழுமையாக ஏற்றுக் கொண்டப் போதிலும் புலிகள் அமைப்பு இந்தியா மீது எச்சரிக்கையாகவே இருந்தது.

குறிப்பாக இந்திய பிரதமர் ராஜிவ் காந்தி, விடுதலை புலிகள் இயக்கத்தை தனது ஆளுமைக்குள் வைத்திருக்க முற்படுகின்றார் என்று புலிகள் கருதியமையால் முறுகல் நிலைமை மேலும் வலுப்பெற்றது.

இந்தியா தனது தேவைக்காகவே இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தலையிடுவதாக புலிகள் கூறினர்.

எனவே தமிழர் பிரச்சினைக்கு கொடுக்கப்பட வேண்டிய தீர்வுத் தொடர்பில் நிலையான கொள்கை இல்லாத அல்லது தீர்வில் மாற்றங்களைச் செய்யத் தயாராக இருந்த இயக்கங்கள் செயற்படாமல் இருப்பது தமிழீழ போராட்டத்துக்கு நன்மை அளிக்கும் எனக் கருதிய புலிகள் இயக்கம் ஏனைய அனைத்து அமைப்புக்களையும் அழித்து முதன்மை இயக்கமாக உருவெடுத்தது.

1987ஆம் ஆண்டில், பொருளாதார, அரசியல், இராணுவ இலக்குகள் மீது விடுதலை புலிகள் இயக்கம் தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொள்ள கூடிய கரும்புலிகள் அணியை உருவாக்கியது.

இராணுவத் தளம் ஒன்றின் மீது கரும்புலிகள் நடத்திய தாக்குதலினால் 40 இராணுவத்தினர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து யாழ் குடாநாட்டை புலிகளிடமிருந்து மீட்கும் நோக்குடன் ஒப்பரேசன் லிபரேசன் என்ற இராணுவ நடவடிக்கையை அரசாங்கம் ஆரம்பித்தது.

இந்திய ஊடகங்கள் இந்நடவடிக்கையை பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நடவடிக்கையாக காட்டின. தமிழ்நாட்டில் பெருகி வந்த ஈழத் தமிழர் ஆதரவினாலும் இந்தியா நோக்கிச் சென்ற அகதிகளாலும், இந்தியா முதன் முறையாக போரில், இலங்கை வான்பரப்பை மீறி யாழ்ப்பாணத்துக்கு உணவுப் பொருட்களை வழங்கியது.

பின்னர் ஏற்பட்ட பேச்சுவார்த்தைகள் மூலம் இலங்கையும் இந்தியாவும் 1987 ஆம் ஆண்டில் இலங்கை – இந்திய ஒப்பந்ததில் கைச்சாத்திட்டன.

இதன் பிரகாரம் இலங்கை அரசு தமிழருக்கு கூட்டாட்சி வடிவிலான தீர்வை வழங்கும் என்றும் விடுதலை புலிகள் இயக்கம் ஆயுதங்களை கீழே வைக்கும் என்றும் கூறப்பட்டது. மேலும் இந்திய அமைதி காக்கும் படையை இலங்கைக்கு அனுப்புவதாகவும் ஒப்பந்தத்தின் பிரகாரம் ஏற்பாடாகியிருந்தது.

இலங்கை – இந்திய ஒப்பந்ததை சில ஈழ இயக்கங்கள் ஏற்றுக் கொண்டாலும், விடுதலை புலிகள் இயக்கம் எதிர்த்தது.

மேலும் தமது ஆயுதங்களை இந்திய அமைதிக்காக்கும் படைகளிடம் ஒப்படைக்கவும் புலிகள் மறுத்தனர்.

முறுகல் நிலை முற்றவே, 1987 அக்டோபர் 5 ஆம் திகதி இந்திய அமைதி காக்கும் படையினரோடு ஒத்துழையாமையை புலிகள் அறிவித்தனர். இதற்கு பின்னர் இடம்பெற்ற அனைத்து சம்பவங்களுமே விடுதலை புலிகளுக்கும் இந்தியாவுக்கும் இடையில் பெரும் விரிசலுக்கு வழிவகுத்தன.

1987ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் திகதி இந்திய அமைதிகாக்கும் படையினர் சென்ற வாகனத்தின் மீது புலிகள் தாக்கதல் நடத்தியதில் 8 இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

இதன் பின்னர் இலங்கையில் நிலைக்கொண்டிருந்த இந்திய படைகள் முழு அளவில் விடுதலை புலிகளுக்கு எதிரான போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டன. இந்த இருதரப்பு மோதல் தீவிரமடைந்தது. 1991 ஆம் ஆண்டு முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியை தற்கொலை தாக்குதல் மூலம் விடுதலை புலிகள் இயக்கம் கொலை செய்தது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து உலக நாடுகள் அனைத்தும் புலிகள் இயக்கத்தை கண்டித்தன. இதன் பின்னர் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் விடுதலை புலிகள் இயக்கத்திற்கு எதிராக கடுமையான தீர்மானங்களையும் நடவடிக்கைகளையும் எடுத்த இந்தியா, இன்றும் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மீண்டும் புதுப்பித்துள்ளது.

(லியோ நிரோஷ தர்ஷன்)

தொடர்புடையசெய்திகள்

லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவர் மாட்டிறைச்சி கடை ஏல விவகாரத்தில் கைது
செய்திகள்

லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவர் மாட்டிறைச்சி கடை ஏல விவகாரத்தில் கைது

June 2, 2025
திருகோணமலையில் கிழக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டம்
செய்திகள்

திருகோணமலையில் கிழக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டம்

June 2, 2025
கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற ஆளும்கட்சி சில உறுப்பினர்களை விலைக்கு வாங்கி முயற்சி; பொதுஜன பெரமுன
அரசியல்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற ஆளும்கட்சி சில உறுப்பினர்களை விலைக்கு வாங்கி முயற்சி; பொதுஜன பெரமுன

June 2, 2025
தமது உள்நாட்டு விவகாரத்தில் அமெரிக்கா தலையிடுவது நெருப்புடன் விளையாடுவது போன்றது; சீனா எச்சரிக்கை
உலக செய்திகள்

தமது உள்நாட்டு விவகாரத்தில் அமெரிக்கா தலையிடுவது நெருப்புடன் விளையாடுவது போன்றது; சீனா எச்சரிக்கை

June 2, 2025
பதவியேற்ற மறுநாளே மின்சாரம் தாக்கி பிரதேச சபை உறுப்பினர் உயிரிழப்பு
செய்திகள்

பதவியேற்ற மறுநாளே மின்சாரம் தாக்கி பிரதேச சபை உறுப்பினர் உயிரிழப்பு

June 2, 2025
காணி அபகரிப்பு மற்றும் இந்து ஆலயங்கள் மீதான அடக்கு முறையினைக் கண்டித்து திருமலையில் போராட்டம்
செய்திகள்

காணி அபகரிப்பு மற்றும் இந்து ஆலயங்கள் மீதான அடக்கு முறையினைக் கண்டித்து திருமலையில் போராட்டம்

June 2, 2025
Next Post
மட்டு போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை ஈன்றெடுத்த தாய்!

மட்டு போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை ஈன்றெடுத்த தாய்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.