கொஸ்லந்த ஊவா மாவெலகம பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகத்தில் ஒருவர் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை (28) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஊவா மாவெலகம, கம்பஹா, மதுகஸ்தலாவ பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
நபரொருவரின் வீட்டில் துப்பாக்கி இருப்பதாக கொஸ்லந்த பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தொலைபேசி அழைப்புக்கு அமைய பொலிஸார் குறித்த வீட்டை சுற்றி வளைத்து சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டனர்.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/05/image-1270.png)
இதன் போது, வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
பதுளை மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் உபுல் சந்தன, பண்டாரவளை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் களுபஹனவின் பணிப்புரையின் கீழ் கொஸ்லந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரபோப டபிள்யூ. விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினரால் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.