பாதுக்க, வத்தரக பிரதேசத்தில் வீடு ஒன்றில் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இன்று (29) அதிகாலையில் இனந்தெரியாத நபரினால் இந்த கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இறந்தவர் ஏதோ தேவைக்காக அதிகாலையில் வீட்டின் முன் அறைக்கு சென்றபோது, யாரோ கூரிய ஆயுதத்தால் அவரை தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/05/image-1280.png)
கூரிய ஆயுதங்களால் பலத்த காயமடைந்த பெண், பாதுக்க மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
பாதுக்க, வடரெக்க பிரதேசத்தில் வசிக்கும் 65 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மீகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.