மட்டக்களப்பு,காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி சேர்.ராசீக் பரீட் மாவத்தையிலுள்ள கடை ஒன்றிலிருந்து 70 பக்கெட் மதன லேகியம் இன்று (30) காலை கைப்பற்றப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணை பிரிவினர் தெரிவித்தனர் .
இது தொடர்பாக குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் காத்தான்குடியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடமிருந்து குறித்த வர்த்தக நிலையத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 70 பக்கெட் காம மதன லேகியங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அங்கிருந்த மோட்டார் சைக்கிளும் மாவட்ட குற்ற விசாரணை பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/05/WhatsApp-Image-2024-05-29-at-16.16.11-1-1024x576.jpeg)
இவ்வாறு மீட்கப்பட்ட போதைப்பொருட்களை, சந்தேக நபரையும் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணை பிரிவினர் ஒப்படைத்துள்ளனர்.
அதேசமயம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் குறித்த நபரை ஒப்படைக்க தேவையாக நடவடிக்கைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜி கஜநாயக்கா மேலும் தெரிவித்தார்.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/05/WhatsApp-Image-2024-05-29-at-16.16.16-1024x576.jpeg)
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/05/WhatsApp-Image-2024-05-29-at-16.16.36-1024x576.jpeg)
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/05/WhatsApp-Image-2024-05-29-at-16.27.08-1024x576.jpeg)
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/05/WhatsApp-Image-2024-05-29-at-16.16.02-1024x576.jpeg)