Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
காதல் தொடர்பை நிறுத்த தாய் கோரியதால் அலரி விதையை உட்கொண்ட யுவதி உயிரிழப்பு!

காதல் தொடர்பை நிறுத்த தாய் கோரியதால் அலரி விதையை உட்கொண்ட யுவதி உயிரிழப்பு!

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு – வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்டூர் தெற்கு பகுதியில் காதல் தொடர்பை நிறுத்த கோரியதால் அலரி விதையை உட்கொண்ட யுவதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் 18 வயதுடைய மகேந்திரன் புவிதா என்ற யுவதியே உயிரிழந்துள்ளார்.

கல்முனை ஆதார வைத்தியசாலையில் கடந்த வியாழக்கிழமை (30) இரவு அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த யுவதி நேற்று (31) அதிகாலை 2.45 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த யுவதியின் தாயார் வெளிநாடு ஒன்றில் பணிபுரிந்த நிலையில் இலங்கைக்கு வந்து 3 மாதங்கள் சென்றுள்ளதாகவும், யுவதி 2 வருடங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள புனர்வாழ்வு நிலையம் ஒன்றில் தங்கி இருந்த நிலையில் களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற உத்தரவிற்கமைய யுவதியின் தாய் வீட்டிற்கு அழைத்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், யுவதி இளைஞன் ஒருவருடன் காதல் தொடர்பில் இருந்ததை அறிந்த தாயார் யுவதியை கண்டித்துள்ளார்.

இந்நிலையில், வீட்டை விட்டு வெளியேறி சென்ற யுவதி மீண்டும் 15 நிமிடங்களில் வீடு திரும்பியுள்ளார்.

இவ்வாறு வந்த யுவதி வீட்டினை சுத்தம் செய்த பின்னர் தனது தாயாருடன் சிறிது உரையாடிய பின்னர், தான் அலரி விதை உட்கொண்டு விட்டதாக தெரிவித்தையடுத்து உடனடியாக கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த யுவதியின் மரணம் தொடர்பில் கல்முனை நீதிமன்ற நீதிவானின் உத்தரவின் படி, மரண விசாரணை அதிகாரி முகமட் இப்றாகீம் நஸ்றுல் இஸ்லாம் முன்னிலையில் விசாரணைகள் இடம்பெற்றது.

அத்துடன், சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இடம்பெற்ற பின்னர் அரச பகுப்பாய்விற்காக சில உடல் உறுப்புகள் அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத்த எக்னலிகொட வழக்கின் சாட்சியை அச்சுறுத்திய ஓய்வுபெற்ற இராணுவ புலனாய்வு பிரிகேடியர் கைது
செய்திகள்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத்த எக்னலிகொட வழக்கின் சாட்சியை அச்சுறுத்திய ஓய்வுபெற்ற இராணுவ புலனாய்வு பிரிகேடியர் கைது

June 13, 2025
இந்திய விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 1 கோடி வழங்கப்படும் என டாடா குழுமத்தின் தலைவர் அறிவிப்பு
உலக செய்திகள்

இந்திய விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 1 கோடி வழங்கப்படும் என டாடா குழுமத்தின் தலைவர் அறிவிப்பு

June 13, 2025
முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஹமில்டன் வனசிங்க காலமானார்
செய்திகள்

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஹமில்டன் வனசிங்க காலமானார்

June 13, 2025
ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்; அவசரகால நிலை பிரகடனம்
உலக செய்திகள்

ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்; அவசரகால நிலை பிரகடனம்

June 13, 2025
சீனாவில் ஏஐ செயலிகளுக்கு தற்காலிக தடை
உலக செய்திகள்

சீனாவில் ஏஐ செயலிகளுக்கு தற்காலிக தடை

June 13, 2025
பருத்தித்துறை இராணுவ முகாமிற்கு அருகில் மனித எலும்புக்கூடு மீட்பு
செய்திகள்

பருத்தித்துறை இராணுவ முகாமிற்கு அருகில் மனித எலும்புக்கூடு மீட்பு

June 13, 2025
Next Post
6 மீனவர்களுடன் காணாமல் போன மீன்பிடி படகு மீட்பு!

6 மீனவர்களுடன் காணாமல் போன மீன்பிடி படகு மீட்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.