Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஜனாதிபதியின் உத்தரவை உதாசீனப்படுத்தும் அரச அதிகாரிகள்; நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் குற்றச்சாட்டு!

ஜனாதிபதியின் உத்தரவை உதாசீனப்படுத்தும் அரச அதிகாரிகள்; நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் குற்றச்சாட்டு!

1 year ago
in செய்திகள்

வவுனியாவில் மக்களுக்காக காடுகளை விடுவிப்பு செய்யுமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்த போதிலும் அதிபரின் உத்தரவை சில அரச அதிகாரிகள் உதாசீனப்படுத்துவதாக வவுனியா அபிவிருத்தி குழு தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கு. திலீபன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அபிவிருத்தி குழு அலுவலகத்தில் நேற்றையதினம் (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், “ அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் இணைந்து நான் தொடர்ச்சியாக கொடுத்த அழுத்தத்திற்கு அமைவாக வவுனியா மாவட்டத்தில் வனவள திணைக்களத்திடம் இருந்து பல்லாயிரக்கணக்கான காணிகளினை விடுவிப்பதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

ஆனால் அதிபரின் வேலை திட்டத்தினை மதிக்காமல் செயற்படும் சில அரச அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் மக்களுகக்கான இந்த விடயத்தில் கீழ் மட்ட அரச உத்தியோகத்தர்களின் மீது மறைமுக அழுத்தத்தினை பிரயோகிப்பது வேதனையான விடயமாகும்.

குறிப்பாக இந்த ஊடக சந்திப்பினை மேற்கொண்டதன் நோக்கமானது இவ்விடயத்தினை கிராம சேவையாளர்களிடம் தெரியப்படுத்துவதற்காகவே.

ஏன் எனில் வனவள அதிகாரிகளுடன் இணைந்து கிராம சேவையாளர்கள் காணி விடுவிப்பு செய்வதற்கான இடங்களை பார்வையிட்டு அதற்குரிய அனுமதி அளிப்பதற்கான செயற்பாட்டில் ஈடுபடுவதாக காண்பிக்கப்படுகின்றது.

உங்களுடன் இணைந்து காணி விடுவிப்பதற்குரிய இடங்களை அடையாளப்படுத்தும் போது நாங்கள் உங்களுடன் இணைந்து அடையாளப்படுத்திய மக்களிற்கான காணிகளை ஆக்கிரமிப்பதற்கு வனவள திணைக்களத்திற்கு இடமளிக்க வேண்டாம்.

மாறாக எல்லைக்கற்கள் போடாமல் இடத்தினை பார்வையிடுகிறோம் என கூறி உயிர் மரங்களில் அடையாளமிட்டு அவ்விடத்தில் ஜிபிஎஸ் எடுத்து அதனை வர்த்தமானி அறிவித்தலாக வெளியிட வனவள திணைக்களமும் வவுனியாவில் உள்ள சில அதிகாரிகளும் நடவடிக்கையெடுத்திருக்கின்றனர்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளராக தினகரன் ரவி நியமனம்
செய்திகள்

மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளராக தினகரன் ரவி நியமனம்

June 10, 2025
திருகோணமலை கல்வி வலயத்தின் புதிய வலய கல்விப் பணிப்பாளராக காரைதீவைச் சேர்ந்த செல்லத்துரை புவனேந்திரன் நியமனம்
செய்திகள்

திருகோணமலை கல்வி வலயத்தின் புதிய வலய கல்விப் பணிப்பாளராக காரைதீவைச் சேர்ந்த செல்லத்துரை புவனேந்திரன் நியமனம்

June 10, 2025
மண்டைதீவு கடலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி
செய்திகள்

மண்டைதீவு கடலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி

June 10, 2025
நேபாளத்தில் முதல் தாய்ப்பால் வங்கி திறப்பு
உலக செய்திகள்

நேபாளத்தில் முதல் தாய்ப்பால் வங்கி திறப்பு

June 10, 2025
240 பில்லியனை மதுபானங்களிலிருந்தும் 2 பில்லியனை பீடியிலிருந்தும் வருமானஈட்ட மதுவரித் திணைக்களம் எதிர்பார்ப்பு
செய்திகள்

240 பில்லியனை மதுபானங்களிலிருந்தும் 2 பில்லியனை பீடியிலிருந்தும் வருமானஈட்ட மதுவரித் திணைக்களம் எதிர்பார்ப்பு

June 10, 2025
யாழ் தையிட்டியில் போராட்டம்; தமிழ் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு
செய்திகள்

யாழ் தையிட்டியில் போராட்டம்; தமிழ் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு

June 10, 2025
Next Post
வாகன வருமான அனுமதிப்பத்திரம் பெறும் முறை தொடர்பில் வெளியான செய்தி!

வாகன வருமான அனுமதிப்பத்திரம் பெறும் முறை தொடர்பில் வெளியான செய்தி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.