Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வெளிநாட்டில் மனைவி சித்திரவதைக்குள்ளானதை அறிந்த கணவர் உயிர்மாய்ப்பு!

வெளிநாட்டில் மனைவி சித்திரவதைக்குள்ளானதை அறிந்த கணவர் உயிர்மாய்ப்பு!

1 year ago
in செய்திகள்

சவூதி அரேபியாவுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாகச் சென்ற மனைவி சித்திரவதைக்குள்ளானதை அறிந்த கணவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை (7) இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் தம்புள்ளை அலகொலவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடையவர் என்பதோடு, நான்கு பிள்ளைகளின் தந்தையும் ஆவார்.

உயிரிழந்தவரது மனைவி பொருளாதார நெருக்கடி காரணமாக தம்புள்ளையில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றின் ஊடாக கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் திகதி சவூதி அரேபியாவுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாகச் சென்றுள்ளார்.

இந்நிலையில், அவ்வீட்டின் உரிமையாளர் இப்பெண்ணை மேலும் நான்கு வீடுகளுக்குப் பணிப்பெண்ணாக அனுப்பி பணம் சம்பாதித்து வந்துள்ளார்.

வீட்டின் உரிமையாளர், அப்பெண்ணை சித்திரவதை செய்து வந்ததோடு, உரிமையாளரின் மகன் அந்த பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.

சித்திரவதைக்குள்ளான பெண், அவ்வீட்டின் பெண் உரிமையாளரிடம் இது தொடர்பாக கூற, 15 நாட்களுக்கு மேற்பட்ட காலம் உணவின்றி அறையொன்றில் அடைத்து வைக்கப்பட்டார்.

பின்னர், அந்த பெண் தன் நிலையை பற்றி அந்நாட்டில் உள்ள தனது சகோதரியிடம் கூறியுள்ளார். உடனே அந்த சகோதரி சவூதி பொலிஸாருக்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துக்கும் தகவல் வழங்கியுள்ளார்.

பின்னர், சவூதி பொலிஸாரினால் அந்த பெண் காப்பாற்றப்பட்டு, சகோதரியின் உதவியுடன் தாய்நாட்டை வந்தடைந்துள்ளார்.

அதையடுத்து, தம்புள்ளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று, வீடு திரும்பியதன் பின்னர், தனக்கு நடந்த அநீதியை அப்பெண் தன் கணவரிடம் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர், இது தொடர்பாக கணவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு செய்தும் மனைவிக்கு நியாயம் கிடைக்கவில்லை. இதனால் விரக்தியடைந்த கணவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடையசெய்திகள்

5 கோடியே 50 இலட்சம் பெறுமதியான 673 மதுபான போத்தல்கள் மற்றும் 75 கிலோ ஏலக்காய் தொகைஎன்பன மீட்பு
செய்திகள்

5 கோடியே 50 இலட்சம் பெறுமதியான 673 மதுபான போத்தல்கள் மற்றும் 75 கிலோ ஏலக்காய் தொகைஎன்பன மீட்பு

June 14, 2025
அரசாங்கம் அளித்த வாக்குறுதியை மறந்து விட்டது; பேராயர் மல்கம் ரஞ்சித்
செய்திகள்

அரசாங்கம் அளித்த வாக்குறுதியை மறந்து விட்டது; பேராயர் மல்கம் ரஞ்சித்

June 14, 2025
“பூஜா பூமி” என்று புல்மோட்டை காணிகளை பிடிக்கும் தேரர்; ஜனாஸா நல்லடக்கம் செய்யவிடாமல் குழப்பம்
செய்திகள்

“பூஜா பூமி” என்று புல்மோட்டை காணிகளை பிடிக்கும் தேரர்; ஜனாஸா நல்லடக்கம் செய்யவிடாமல் குழப்பம்

June 13, 2025
உலகப் பொருளாதாரம் மிகவும் பலவீனமான நிலையை நோக்கிச் செல்கிறது என உலக வங்கி சுட்டிக்காட்டு
செய்திகள்

உலகப் பொருளாதாரம் மிகவும் பலவீனமான நிலையை நோக்கிச் செல்கிறது என உலக வங்கி சுட்டிக்காட்டு

June 13, 2025
சம்பியன் மகுடத்தை சூடிக்கொண்ட அட்டாளைச்சேனை அல்-நஜா விளையாட்டு கழகம்
செய்திகள்

சம்பியன் மகுடத்தை சூடிக்கொண்ட அட்டாளைச்சேனை அல்-நஜா விளையாட்டு கழகம்

June 13, 2025
வவுனியா சிறைச்சாலைக்குள் அதிரடியாக நுழைந்த குற்றப்புலனாய்வுப் பிரிவினர்
செய்திகள்

வவுனியா சிறைச்சாலைக்குள் அதிரடியாக நுழைந்த குற்றப்புலனாய்வுப் பிரிவினர்

June 13, 2025
Next Post
காணாமல் போன மாணவி தொடர்பில் தகவல் தேவை!

காணாமல் போன மாணவி தொடர்பில் தகவல் தேவை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.