Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இந்தியாவில் ரயில் தடம்புரண்டத்தில் பலர் படுகாயம்; மீட்புப்பணியில் பொதுமக்கள்!

இந்தியாவில் ரயில் தடம்புரண்டத்தில் பலர் படுகாயம்; மீட்புப்பணியில் பொதுமக்கள்!

2 years ago
in உலக செய்திகள், முக்கிய செய்திகள்

கொல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கிப் புறப்பட்ட கோரமண்டல் கடுகதி ரயில் விபத்திற்குள்ளானதில் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட கோரமண்டல் கடுகதி ரயில் இன்று (2) இரவு சுமார் 7 மணியளவில் ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹானாகா ரெயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, பெங்களூருவில் இருந்து கொல்கத்தா சென்ற ரெயில் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதி விபத்துள்ளானது.

இந்த விபத்தில் பல பெட்டிகள் தடம் புரண்டதனால் 300 க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்திருக்கின்றனர். இந்த விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் நம்பப்படகின்றது.

மீட்புக் குழு விபத்து நடைபெற்ற இடத்திற்கு சென்றடைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளதுடன்,பொதுமக்களும் உதவி செய்து வருகின்றனர்.

சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு விபத்து நிவாரண ரயில் விரைந்துள்ளதாக தென் கிழக்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மேலும், 50 ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து காயம் அடைந்தவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளன.

உள்ளூர் பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகள், கல்லூரிகள் தயார் நிலையில் இருக்கும் வகையில் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

காயம் அடைந்துள்ள பயணிகள் சிகிச்சைக்காக பாலசோர் மெடிக்கல் கல்லூரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை 300 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலர் படுகாயத்துடன் சிகிக்கை பெறுகின்றனர். 22 பேர் அடங்கிய தேசிய மீட்புக்குழு சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது.

எனினும் ரயில் விபத்து பற்றிய முழுமையான தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. வனப்பகுதியில் இந்த விபத்து நடைபெற்று இருப்பதாகவும் இரவு நேரம் என்பதால் கடும் சிரமங்களுக்கு இடையே மீட்பு பணிகள் இடம்பெறுவதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விபத்து நடைபெற்ற இடத்திற்கு விரைந்துள்ளனர்.

மோடி இரங்கல்

இந்த ரயில் விபத்துக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ஒடிசாவில் இடம்பெற்ற ரயில் விபத்தால் வேதனை அடைந்துள்ளேன். துக்கத்தின் இந்த நேரத்தில், என் எண்ணங்கள் இறந்த குடும்பங்களுடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும். ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவிடம் பேசினேன். விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன, பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றன என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

வட்டுக்கோட்டையில் மாணவனைத் தாக்கிய ஆசிரியருக்கு 14 நாட்கள் விளக்கமறியல்
செய்திகள்

வட்டுக்கோட்டையில் மாணவனைத் தாக்கிய ஆசிரியருக்கு 14 நாட்கள் விளக்கமறியல்

May 12, 2025
மின் கட்டணத்தை அதிகரிக்கும் முயற்சியைக் கைவிடுமாறு சஜித் அரசிடம் வேண்டுகோள்
செய்திகள்

மின் கட்டணத்தை அதிகரிக்கும் முயற்சியைக் கைவிடுமாறு சஜித் அரசிடம் வேண்டுகோள்

May 12, 2025
வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வு கூறல்
செய்திகள்

வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வு கூறல்

May 12, 2025
வெசாக் பௌர்ணமி காலத்தில் சிறைக்கைதிகளை பார்வையிட விசேட சந்தர்ப்பம்
செய்திகள்

வெசாக் பௌர்ணமி காலத்தில் சிறைக்கைதிகளை பார்வையிட விசேட சந்தர்ப்பம்

May 12, 2025
இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்தம் ஒப்பந்தத்தை வரவேற்ற ஜனாதிபதி அநுர
செய்திகள்

இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்தம் ஒப்பந்தத்தை வரவேற்ற ஜனாதிபதி அநுர

May 11, 2025
தனக்கு தானே சிலை வைத்துக்கொண்ட டொனால்ட் ட்ரம்ப்
உலக செய்திகள்

தனக்கு தானே சிலை வைத்துக்கொண்ட டொனால்ட் ட்ரம்ப்

May 11, 2025
Next Post
இன்று வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!

இன்று வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.