வளிமண்டலவியல் திணைக்களத்தின் தகவலின்படி, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பகுதிகளிலும், காலி மாவட்ட கரையோரப் பகுதிகளிலும் காலை வேளையில் சிறிதளவு மழை எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
வடக்கு, வடமத்திய மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை, புத்தளம் மாவட்டங்களில் மணிக்கு 30–40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இடியுடன் கூடிய மழையின்போது மின்னல் மற்றும் பலத்த காற்று காரணமாக ஏற்படும் ஆபத்துகளைத் தவிர்க்க பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், சில கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணிக்கு 50 கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும் என்பதால், அவை அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது







