Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாடாளுமன்ற உறுப்பினர் பயணித்த வாகனத்தில் மோதுண்ட இளைஞன் மரணம்!

நாடாளுமன்ற உறுப்பினர் பயணித்த வாகனத்தில் மோதுண்ட இளைஞன் மரணம்!

12 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார பயணித்த ஜீப் வண்டியில் மோதி 08 நாட்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் நேற்று (12) உயிரிழந்துள்ளார்.

திஹாரிய, கல்கெடிஹேன பகுதியைச் சேர்ந்த 22 வயதான ஷனுக ரவிந்து என்பவரே உயிரிழந்துள்ளார். இந்த இளைஞன் மோட்டார் சைக்கிள் விற்பனை தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

குறித்த இளைஞன் விபத்தில் சிக்கிய நிலையில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மூளைச்சாவு அடைந்துள்ளார்.

இந்த நிலையில் அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் உயிருக்கு போராடியுள்ளார். மூளைச்சாவு அடைந்ததை மருத்துவர்கள் முடிவு செய்ததையடுத்து, இளைஞரின் பெற்றோர் சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகளை தானம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனர்.

விபத்துக்கு முன்னர் குறித்த இளைஞனின் விருப்பத்தை கருத்தில் கொண்டு குடும்பத்தாரின் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, நேற்றிரவு இளைஞனின் உறுப்புகள் அகற்றப்பட்டு மூன்று பேருக்கு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 03ஆம் திகதி காலை இந்த இளைஞன் விபத்தில் சிக்கியுள்ளார். கொழும்பு பிரதான வீதியில் கொங்கஸ்தெனிய சந்திக்கு அருகில், நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார பயணித்த ஜீப், இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது.

இந்த விபத்தில் நாடாளுமன்ற உறுப்பினருக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை என்பதுடன், மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் காயமடைந்து வத்துப்பிட்டி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக குறித்த இளைஞன் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த விபத்தின் காரணமாக அந்த இளைஞன் தலையில் பலத்த காயம் அடைந்து விபத்து நடந்த நேரம் முதல் சுயநினைவின்றி இருந்துள்ளார். விபத்து நடந்தபோது, ​​அப்பகுதியில் மழை பெய்து கொண்டிருந்தது.

விபத்தின் பின்னர், நளின் பண்டார பயணித்த ஜீப் வண்டியின் சாரதியை நிட்டம்புவ பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினர் கைது செய்து பின்னர் பிணையில் விடுவித்துள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

முச்சக்கர வண்டி திருட்டில் ஈடுபட்டு வந்த இளஞைன் ஐஸ் போதைப்பொருளுடன் கைது
செய்திகள்

முச்சக்கர வண்டி திருட்டில் ஈடுபட்டு வந்த இளஞைன் ஐஸ் போதைப்பொருளுடன் கைது

June 9, 2025
வானிலை தொடர்பான முன்னறிவிப்பு
செய்திகள்

வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

June 9, 2025
பிள்ளையானிடம் சிக்கிய சட்லைட் தொலைபேசி; அசாத் மௌலானா தொடர்பில் அதிரடி முடிவு
செய்திகள்

பிள்ளையானிடம் சிக்கிய சட்லைட் தொலைபேசி; அசாத் மௌலானா தொடர்பில் அதிரடி முடிவு

June 8, 2025
மாத்திரைகளை அளவுக்கதிகமாக உட்கொண்ட முதியவர் உயிரிழப்பு
செய்திகள்

மாத்திரைகளை அளவுக்கதிகமாக உட்கொண்ட முதியவர் உயிரிழப்பு

June 8, 2025
அறுவை சிகிச்சை இல்லாமல் இரத்த நாளங்களிலிருந்து கொழுப்பை அகற்ற அறிமுகமான இயந்திரம்
செய்திகள்

அறுவை சிகிச்சை இல்லாமல் இரத்த நாளங்களிலிருந்து கொழுப்பை அகற்ற அறிமுகமான இயந்திரம்

June 8, 2025
இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சுமார் 3,000 பேர் கைது
செய்திகள்

இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சுமார் 3,000 பேர் கைது

June 8, 2025
Next Post
இலங்கையில் ஆரம்பிக்கப்படவுள்ள டிஜிட்டல் கல்வித் தளம்!

இலங்கையில் ஆரம்பிக்கப்படவுள்ள டிஜிட்டல் கல்வித் தளம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.