Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழ் கரப்பந்தாட்ட விளையாட்டு நிகழ்வில் வாள்வெட்டு சம்பவம்!

யாழ் கரப்பந்தாட்ட விளையாட்டு நிகழ்வில் வாள்வெட்டு சம்பவம்!

2 years ago
in செய்திகள்

யாழ்ப்பாணம் கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீசாலை, தெருவாரத்தில் உள்ள விளையாட்டுக் கழத்தின் மைதானத்தில் சனிக்கிழமை(15) மாலை 5 மணியளவில் இவ் வாள்வெட்டுச் சம்பவம் பதிவாகியுள்ளது.

இதன் போது சிவகுமார் ராகுலன் 25 வயதான இளைஞன் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது,

மீசாலை, தெருவாரத்தில் உள்ள கரப்பந்து விளையாட்டுக் கழகமொன்று, கரப்பந்து சுற்றுப் போட்டி நடாத்தி வருகிறது. இச் சுற்றுப் போட்டியின் இறுதிச் சுற்றுப் போட்டி 7:30 மணிக்கு ஆரம்பமாக இருந்தது.

இந்நிலையில் மாலை 5 மணியளவில் 12 பேர் கொண்ட காடையர் கூட்டமொன்று மது போதையில் வாள் மற்றும் பொல்லுகளுடன் உட்புகுந்து அங்கு நின்றிருந்தவர்கள் மீதும் வீதியால் பயணித்தவர்கள் மீதும் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

இதனை அவதானித்த ஊரவர்கள் மற்றும் விளையாட்டுக் கழக வீரர்கள் தாக்குதல் நடாத்திய காடையர் கூட்டத்தை சுற்றிவளைத்து, காடையர்களை நையப்புடைத்து நால்வரை மடக்கிப் பிடித்து கட்டி வைத்தனர்.

ஏனையவர்கள் தப்பித்துச் சென்றுள்ளனர். அவர்களைத் துரத்திச் சென்றபோதும் காடையர்கள் கூட்டம் தப்பித்துச் சென்றுள்ளனர்.

ஊரவர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட நால்வரையும் மின் கம்பத்துடன் கட்டி வைத்து விட்டு, கொடிகாமம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற கொடிகாமம் பொலிஸார் நான்கு காடையர்களையும் கைதுசெய்துள்ளனர்.

தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாள் மற்றும் கத்தி என்பனவும் மீட்கப்பட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதாகிய நால்வரும் 17 மற்றும் 18 வயதுகளையுடையவர்கள் என்றும் தாக்குதல் நடாத்த வந்த ஏனையோரும் குறித்த வயதினையுடைவர்கள் என்றும், இவர்கள் மந்துவில், எழுதுமட்டுவாழ், உஷன், கொடிகாமம் பகுதிகளைச் சேர்ந்த வெளிக் கிராமங்களைச் சேர்ந்த பதின்ம வயதினரே என்றும் தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதல் நடாத்திய ஏனையோரையும் கொடிகாமம் பொலிஸார் தேடி வருகின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் சர்வதேச தினம்; வடக்கு, கிழக்கில் நிகழ்வுகள் ஏற்பாடு!
செய்திகள்

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் சர்வதேச தினம்; வடக்கு, கிழக்கில் நிகழ்வுகள் ஏற்பாடு!

August 16, 2026
கல்முனை வடக்கு வைத்தியசாலை விவகாரம்; பணிப்பாளர் உள்ளிட்ட ஐவருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!
செய்திகள்

கல்முனை வடக்கு வைத்தியசாலை விவகாரம்; பணிப்பாளர் உள்ளிட்ட ஐவருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!

August 16, 2026
உள்நாட்டு பெரிய வெங்காய உற்பத்தியை அதிகரிக்க திட்டம்!
செய்திகள்

உள்நாட்டு பெரிய வெங்காய உற்பத்தியை அதிகரிக்க திட்டம்!

August 16, 2026
கடுவெல பகுதியில் இன்று விசேட போக்குவரத்து திட்டம்!
செய்திகள்

கடுவெல பகுதியில் இன்று விசேட போக்குவரத்து திட்டம்!

August 16, 2026
இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்; 38 பேர் பலி
உலக செய்திகள்

இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்; 38 பேர் பலி

August 15, 2026
அமைச்சர் சந்திரசேகர் விஜயம்… மீனவர்களுக்கே தகவல் இல்லையா? பெரியநீலாவணையில் சர்ச்சை
செய்திகள்

அமைச்சர் சந்திரசேகர் விஜயம்… மீனவர்களுக்கே தகவல் இல்லையா? பெரியநீலாவணையில் சர்ச்சை

August 15, 2026
Next Post
போரில் பங்கேற்கும் இலங்கையர்கள் விபரம்; வழங்க மறுக்கும் உக்ரைன்!

போரில் பங்கேற்கும் இலங்கையர்கள் விபரம்; வழங்க மறுக்கும் உக்ரைன்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.