Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புளொட் இயக்கத்தின் உறுப்பினருக்கு மரண தண்டனை; நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பு!

புளொட் இயக்கத்தின் உறுப்பினருக்கு மரண தண்டனை; நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பு!

3 years ago
in முக்கிய செய்திகள்

வவுனியா பொது வைத்தியசாலை மகப்பேற்றுவியல் நிபுணர் வைத்திய கலாநிதி முகமட் சுல்தான் மீரா முகைதீன், வவுனியா தனியார் வைத்தியசாலை வெளிவாசலில் வைத்து 20.04.2009 அன்று சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் புளொட் இயக்கப் பொறுப்பாளர் நெடுமாறன் என அழைக்கப்படும் சிவநாதன் பிரேம்நாத் என்ற எதிரியை கொலை குற்றவாளி என தீர்ப்பளித்த வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், அவருக்கு இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

வவுனியா தனியார் வைத்தியசாலை உரிமையாளரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சிவமோகன் தனது சாட்சியத்தில், கொலை செய்யப்பட்ட மகப்பேற்றுவியல் நிபுணர் தனது வைத்தியசாலையில் மாலை நேர கடமையை புரிந்து விட்டு 6.30 மணியளவில் புறப்பட்ட போது வெளிவாசலில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டதாக சாட்சியமளித்தார்.

சம்பவ இடத்தில் கைத்துப்பாக்கியின் வெற்று தோட்டக்கள் நான்கு கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் புலனாய்வு அதிகாரி சாட்சியம் அளித்தார்.

எதிரியான புளொட் பிரதேச இராணுவ பொறுப்பாளர் நெடுமாறனை கைத்துப்பாக்கியுடன் கைது செய்ததாக இராணுவ உத்தியோகத்தர் நீதிமன்றில் சாட்சியமளித்துள்ளார்.

நெடுமாறனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கைத்துப்பாக்கியால் தான் வைத்திய கலாநிதி சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட நான்கு வெற்று தோட்டாக்கள் சுடப்பட்டுள்ளதாகவும், அவை ஒத்து செல்வதாகவும் இரசாயன பகுப்பாளர் மடவள நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்து சாட்சியமளித்துள்ளார்.

அத்துடன் இது துப்பாக்கிச்சூட்டு காயங்களால் ஏற்படுத்தப்பட்ட மரணம் என பிரேத பரிசோதனை செய்த வைத்திய கலாநிதி சாட்சியம் அளித்துள்ளார்.

எனினும் எதிரி, எதிரிக்கூண்டில் நின்று, தான் புளொட் இயக்க பிரதேச அரசியல் பொறுப்பாளர் எனவும், தனக்கு துப்பாக்கி தரப்படுவதில்லை என்றும் வாக்குமூலம் அளித்ததை நம்பகத்தன்மை அற்ற வாக்குமூலம் என நீதிபதி நிராகரித்து எதிரியை கொலை குற்றவாளி என தீர்ப்பளித்து மரண தண்டனை விதித்துள்ளார்.

மேலும் அவர் கண்டி போகம்பறை சிறைச்சாலைக்கு எதிரி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

யோஷித ராஜபக்ஷ பிணையில் விடுதலை
செய்திகள்

யோஷித ராஜபக்ஷ பிணையில் விடுதலை

June 17, 2026
ஆஷு மாரசிங்க எமது கட்சி உறுப்பினர் அல்ல என அறிவித்தது ஐக்கிய தேசியக் கட்சி
செய்திகள்

ஆஷு மாரசிங்க எமது கட்சி உறுப்பினர் அல்ல என அறிவித்தது ஐக்கிய தேசியக் கட்சி

June 17, 2026
இந்திய அரசுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தது டெலிகிராம்
உலக செய்திகள்

இந்திய அரசுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தது டெலிகிராம்

June 17, 2026
சுரேஷ் சலேவின் உடல்நிலை கவலைக்கிடம்; ஆடைகளின்றி சோதனை செய்ததை CID ஏற்றுக்கொண்டதாக மனைவி குற்றச்சாட்டு!
செய்திகள்

சுரேஷ் சலேவின் உடல்நிலை கவலைக்கிடம்; ஆடைகளின்றி சோதனை செய்ததை CID ஏற்றுக்கொண்டதாக மனைவி குற்றச்சாட்டு!

June 17, 2026
கத்தாரில் வதிவிட விசா இரத்து செய்யப்பட்டால் 14 நாட்களுக்குள் வெளியேற வேண்டும்; விதிகளை மீறினால் தினசரி அபராதம்
செய்திகள்

கத்தாரில் வதிவிட விசா இரத்து செய்யப்பட்டால் 14 நாட்களுக்குள் வெளியேற வேண்டும்; விதிகளை மீறினால் தினசரி அபராதம்

June 17, 2026
சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் புலிகளின் தங்கத்தை தேடியவர்களுக்கு ஏமாற்றம்
செய்திகள்

சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் புலிகளின் தங்கத்தை தேடியவர்களுக்கு ஏமாற்றம்

June 17, 2026
Next Post
இன்று வாழைச்சேனையில் கண்டணப்பேரணி; மகஜர் ஒன்றும் கையளிப்பு!

இன்று வாழைச்சேனையில் கண்டணப்பேரணி; மகஜர் ஒன்றும் கையளிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.