Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
விபத்துகளில் சிக்கி அரச வைத்தியசாலைகளில் சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை ஒரு மில்லியனுக்கும் அதிகம்!

விபத்துகளில் சிக்கி அரச வைத்தியசாலைகளில் சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை ஒரு மில்லியனுக்கும் அதிகம்!

10 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

விபத்துகளினால் மாத்திரம் அரச வைத்திய சாலைகளில் தங்கி சிகிச்சை பெறுவதற்காக வருடாந்தம் ஒரு மில்லியனுக்கும் அதிக எண்ணிக்கையானவர்கள் வருகை தருவதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்றா நோய்ப் பிரிவு அறிவித்துள்ளது.

இதேவேளை, விபத்துகளினால் ஒவ்வொரு 03 மணிநேரத்துக்கும் ஒருமுறை நால்வர் உயிரிழப்பதாகத் தொற்றா நோய்ப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சமித்த சிறிதுங்க சுட்டிக்காட்டினார்.

தேசிய விபத்து நிவாரணவாரம் தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று முன்தினம் (02) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. அந்த சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

நாட்டிலுள்ள அரச வைத்தியசாலைகளில் தங்கி கிசிச்சைப் பெறுவதற்கு விபத்துகளினால் பாதிக்கப்பட்டவர்களே அதிகம் வருகிறார்கள். இவ்வாறு வருபவர்களில் அண்ணளவாக ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் விபத்துகளினால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.

ஆறு நபர்களில் ஒருவர் வைத்திய சிகிச்சையை பெற்றுக்கொள்ளும் வகையில் விபத்துகளுக்கு உள்ளாகுகிறார்கள். ஒரு வருடத்துக்கு 10,000 முதல் 12,000 வரையிலானவர்கள் விபத்துகளினால் உயிரிழக்கிறார்கள்.

அதாவது, மூன்று மணிநேரத்து ஒரு முறை நால்வர் விபத்துகளில் உயிரிழக்கிறார்கள். அவ்வாறு இல்லாவிட்டால் நாளொன்றுக்கு 3235 வரையானவர்கள் விபத்துகளினால் உயிரிழக்கிறார்கள்.

ஒவ்வொரு வருடமும் அரச வைத்தியசாலைகளில் விபத்துகளினால் பாதிப்படைபவர்களுக்கு மாத்திரம் ஒரு பில்லியன் ரூபாவுக்கும் அதிக நிதி செலவிடப்படுகிறது. எனவே இது நாடொன்றினால் தாங்கிக்கொள்ள முடியாத சுமையாகும்.

வெளிநோயாளர் பிரிவுகளில் சிகிச்சை பெறுபவர்களில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் வீடு மற்றும் அதன் சுற்றுச்சூழல் இடம்பெறும் பல்வேறு முரண்பாடுகளினால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்றார்.

தொடர்புடையசெய்திகள்

இறைச்சி விற்பனை நிலையங்களுக்கு மூன்று நாட்கள் பூட்டு
செய்திகள்

இறைச்சி விற்பனை நிலையங்களுக்கு மூன்று நாட்கள் பூட்டு

May 9, 2025
இலங்கையில் 34 பங்களாதேஷ் பிரஜைகள் கைது
செய்திகள்

இலங்கையில் 34 பங்களாதேஷ் பிரஜைகள் கைது

May 9, 2025
மாணவியின் தற்கொலைக்கு காரணமென குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியருக்கு கட்டாய விடுமுறை
செய்திகள்

மாணவியின் தற்கொலைக்கு காரணமென குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியருக்கு கட்டாய விடுமுறை

May 9, 2025
இந்திய இராணுவ தளபதிக்கு கூடுதல் அதிகாரம்
உலக செய்திகள்

இந்திய இராணுவ தளபதிக்கு கூடுதல் அதிகாரம்

May 9, 2025
நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு; ஏழு பேர் உயிரிழப்பு
செய்திகள்

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு; ஏழு பேர் உயிரிழப்பு

May 9, 2025
சந்திரசேகரை ஜ*டி அமைச்சரென்று சபையில் விமர்சித்த அர்ச்சுனா
அரசியல்

சந்திரசேகரை ஜ*டி அமைச்சரென்று சபையில் விமர்சித்த அர்ச்சுனா

May 9, 2025
Next Post
நயினாதீவு பகுதியில் படகு விபத்து ; ஒருவர் உயிரிழப்பு!

நயினாதீவு பகுதியில் படகு விபத்து ; ஒருவர் உயிரிழப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.