Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உலகக்கிண்ண போட்டிக்கு முன் மதுபான விருந்து; இலங்கை வீரர்களுக்கு புதிய சிக்கல்!

உலகக்கிண்ண போட்டிக்கு முன் மதுபான விருந்து; இலங்கை வீரர்களுக்கு புதிய சிக்கல்!

11 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள், விளையாட்டு

நடந்து முடிந்த இருபதுக்கு20 உலகக்கிண்ணத் தொடரில் தென்னாபிரிக்க அணியுடனான போட்டிக்கு முந்தைய இரவு இலங்கை அணியின் சில மேலாளர்கள் மற்றும் வீரர்கள் மதுபான விருந்தொன்றை நடத்தியதாக ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அணியின் மேலாளர், 3 முன்னணி துடுப்பெடுத்தாளர்கள், ஒரு வேகப்பந்து வீச்சாளர் மற்றும் ஒரு சகலதுறை வீரர் ஆகியோர் இந்த விருந்தில் பங்கேற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

அத்துடன், இந்த விருந்து அணியின் உதவி மேலாளரின் அறையில் நடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.சி.சியின் விதிமுறைகளை மீறுவதற்கு குறித்த வீரர்கள் எடுத்த முடிவின் விளைவு, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணியின் மோசமான ஆட்டத்தின் மூலம் வெளிப்படுகின்றது.

எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பில் அணியின் பொறுப்பதிகாரிகள் மற்றும் ஊடகங்களிடம் அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற போதிலும், அணியின் மூத்த ஆலோசகரால் இந்த விடயம் மூடி மறைக்கப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்க அணிக்கெதிரான போட்டியில் இலங்கை அணியின் விளையாட்டு, இரசிகர்களால் பெரிதும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருந்தது.

இந்நிலையில், இலங்கை அணியின் முன்னாள் தலைமை பயிற்றுவிப்பாளர் கிறிஸ் சில்வர்வர்ட், தனது ஒப்பந்தத்தை நீடிப்பதை இடைநிறுத்தியுள்ளார்.

மற்றுமொரு உப பயிற்றுவிப்பாளராக நவீட் நவாஸின் ஒப்பந்தமும் இலங்கை அணியின் சரிவின் பின்னர் இடைநிறுத்தப்பட்டது.

இவ்வாறான சூழ்நிலையில், இலங்கை அணியின் சரிவுக்கு அதன் முகாமைத்துவமும் ஒரு காரணியாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

இது தொடர்பான விசாரணைகளை நடத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமே இலங்கை அணி மீது பதிந்துள்ள கரும்புள்ளியை நீக்குவதற்கு முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சுமார் 3,000 பேர் கைது
செய்திகள்

இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சுமார் 3,000 பேர் கைது

June 8, 2025
பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரங்களை மாற்றுவதற்கு முயற்சி; சம்பிக்க குற்றச்சாட்டு
செய்திகள்

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரங்களை மாற்றுவதற்கு முயற்சி; சம்பிக்க குற்றச்சாட்டு

June 8, 2025
ஜனாதிபதி பொதுமன்னிப்பு பட்டியலில் இல்லாத பலர் விடுவிப்பு; சி.ஐ.டியினர் விசாரணை
செய்திகள்

ஜனாதிபதி பொதுமன்னிப்பு பட்டியலில் இல்லாத பலர் விடுவிப்பு; சி.ஐ.டியினர் விசாரணை

June 8, 2025
24 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ள கால்நடை வைத்தியர்கள் சங்கம்
செய்திகள்

24 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ள கால்நடை வைத்தியர்கள் சங்கம்

June 8, 2025
பிரபாகரன் தமது தேசியத் தலைவர் என்று அர்ச்சுனா குறிப்பிடுவதற்கு சரத் வீரசேகர எதிர்ப்பு
செய்திகள்

பிரபாகரன் தமது தேசியத் தலைவர் என்று அர்ச்சுனா குறிப்பிடுவதற்கு சரத் வீரசேகர எதிர்ப்பு

June 8, 2025
காத்தான்குடியில் காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு
செய்திகள்

காத்தான்குடியில் காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு

June 8, 2025
Next Post
ஹஜ் யாத்திரையில் 1300 பேர் பலி; உயிரிழந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்!

ஹஜ் யாத்திரையில் 1300 பேர் பலி; உயிரிழந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.