Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
108 ஹெக்டேர் மேய்ச்சல் நிலத்தை அபகரித்த அதானி குழுமம்; தீர்ப்பை நிறுத்தி வைக்க உத்தரவு!

108 ஹெக்டேர் மேய்ச்சல் நிலத்தை அபகரித்த அதானி குழுமம்; தீர்ப்பை நிறுத்தி வைக்க உத்தரவு!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

குஜராத் கட்ச் மாவட்டத்தில் அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்ட 108 ஹெக்டேர் மேய்ச்சல் நிலத்தைத் திரும்பப் பெறுவதாக அறிவித்த குஜராத் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை, உச்சநீதிமன்றம் நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2005-ம் ஆண்டு கட்ச் மாவட்டத்தின் நவினல் கிராமத்திலுள்ள 231 ஏக்கர் மேய்ச்சல் நிலங்களை அதானி குழுமத்தின் முந்த்ரா துறைமுகத்திற்காக, குஜராத் மாநில வருவாய்த் துறை வழங்கியது.

அதானி குழுமம் அங்கு 2010-ம் ஆண்டில் வேலி அமைக்கும்போதுதான், மேய்ச்சல் நிலங்களை அதானி குழுமத்திற்கு அரசு வழங்கியது அந்தக் கிராம மக்களுக்குத் தெரிய வந்ததாகக் கூறப்படுகிறது.

கிராமத்தில் மொத்தமுள்ள 276 ஏக்கர் மேய்ச்சல் நிலங்களில் 231 ஏக்கர் அதானி குழுமத்திற்கு ஒதுக்கப்பட்டதைத் தொடர்ந்து 45 ஏக்கர் மேய்ச்சல் நிலம் மட்டுமே மீதமிருப்பதாகக் குற்றஞ்சாட்டிய கிராமத்தினர், இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது எனக் கூறி பொதுநல வழக்குத் தொடர்ந்தனர்.

இதில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஜூலை 5-ம் திகதியன்று குஜராத் உயர்நீதிமன்றம் அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்ட 108 ஹெக்டேர் மேய்ச்சல் நிலங்களைத் திரும்பப் பெறுவதாக அறிவித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, குஜராத் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை நிறுத்திவைக்க உச்சநீதிமன்றம் நேற்று (ஜூலை 10) உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வநாதன் அடங்கிய அமர்வு அதானி குழுமத்தின் மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணையில் நிலத்தைத் திருப்பி வழங்குவதை நிறுத்திவைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

குஜராத் மாநில வருவாய் துறை கூடுதல் தலைமைச் செயலாளரின் பிரமாணப் பத்திரத்தைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், இந்த வழக்கை வருகின்ற ஜூலை 26-ம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.

தொடர்புடையசெய்திகள்

மகாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு விபரங்களை இணையத்தில் அறியும் புதிய வசதி!
செய்திகள்

மகாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு விபரங்களை இணையத்தில் அறியும் புதிய வசதி!

August 20, 2026
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் சுமார்100க்கு மேற்பட்டோர் பலி!
செய்திகள்

மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் சுமார்100க்கு மேற்பட்டோர் பலி!

August 20, 2026
வவுனியா புரவசம்குளத்தில் காட்டுத்தீ; விமானப்படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது
செய்திகள்

வவுனியா புரவசம்குளத்தில் காட்டுத்தீ; விமானப்படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது

August 20, 2026
முதலமைச்சரானதும் வடக்கு முஸ்லிம் மக்களின்பிரச்சினைகளுக்கே முதலில் தீர்வு-அர்ச்சுனா
அரசியல்

முதலமைச்சரானதும் வடக்கு முஸ்லிம் மக்களின்பிரச்சினைகளுக்கே முதலில் தீர்வு-அர்ச்சுனா

August 20, 2026
கல்முனை வடக்கு வைத்தியசாலை சீருடை விவகாரம்; அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளியிட்டார் நளிந்த ஜயதிஸ்ஸ!
செய்திகள்

கல்முனை வடக்கு வைத்தியசாலை சீருடை விவகாரம்; அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளியிட்டார் நளிந்த ஜயதிஸ்ஸ!

August 20, 2026
முல்லைத்தீவு – கிளிநொச்சிக்கு தனியான நீர் வழங்கல் பிராந்திய அலுவலகங்கள் தேவை; ரவிகரன்!
செய்திகள்

முல்லைத்தீவு – கிளிநொச்சிக்கு தனியான நீர் வழங்கல் பிராந்திய அலுவலகங்கள் தேவை; ரவிகரன்!

August 20, 2026
Next Post
சுவ செரிய அறக்கட்டளைகளுக்காக நோயாளர் காவு வண்டிகளைப் பெறுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

சுவ செரிய அறக்கட்டளைகளுக்காக நோயாளர் காவு வண்டிகளைப் பெறுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.