முச்சக்கர வண்டி திருட்டில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர் ஒருவரை ராகம பொலிஸார் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யதுள்ளனர்.
ராகம பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் நேற்று (08) பிற்பகல் ராகம பஸ் நிலையம் அருகே சோதனை நடத்தி 09 கிராம் 480 மில்லிகிராம் ஐஸ் என்ற போதைப்பொருளுடன் குறித்த நபரை கைது செய்தனர்.
சந்தேக நபர் கொழும்பு 14 ஐ வசிக்கும் 26 வயதுடையவராவார்.
சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில், ராகம பொலிஸாருக்கு 04.06.2025 அன்று ரூ.1,800,000/= மதிப்புள்ள முச்சக்கர வண்டியைத் திருடிய குற்றத்தில் அவர் சந்தேக நபர் என்பது தெரியவந்துள்ளது.
திருடப்பட்ட முச்சக்கர வண்டி பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளதுடன், ராகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.