Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கடனை செலுத்தாத பலரை நீதிமன்றத்திற்கு அழைக்க உத்தரவு!

கடனை செலுத்தாத பலரை நீதிமன்றத்திற்கு அழைக்க உத்தரவு!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நாடளாவிய ரீதியில் இணைய நிறுவனங்களில் கடன் பெற்று, கடனை செலுத்தாத பலரை நீதிமன்றத்திற்கு வரவழைக்க நேற்று (16) உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, அம்பாந்தோட்டை, மாத்தறை, காலி, கேகாலை, பொலன்னறுவை, மன்னார், புத்தளம், அவிசாவளை, பெலியஅத்த, மாவனெல்ல, ஹகுராங்கெத்த, போன்ற பிரதேசங்களில் இணைய வழி முறைகள் மூலம் வேண்டுமென்றே இரண்டு இலட்சம் ரூபாவிற்கும் குறைவான கடனைப் பலர் பெற்றுள்ளனர்.

கடனை பெற்றுவிட்டு பணத்தை செலுத்த தவறியதால், அவர்களை செப்டம்பர் 13ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு மாவட்ட நீதிபதி அருண விக்கிரமசிங்க நேற்று மனு அனுப்பியுள்ளார்.

கையடக்க தொலைபேசி செயலி மற்றும் இணையதளங்கள் மூலம் எந்தவித பாதுகாப்பு ஆவணங்களும் வழங்காமல் கடன் வாங்கியவர்கள் திருப்பிச் செலுத்தாமல் இழுத்தடித்ததாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய, நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு எதிராக கொழும்பு 7 இல் அமைந்துள்ள On Credit Online நிறுவனம் தாக்கல் செய்திருந்த வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிமன்றம் நேற்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

குறித்த நிறுவனம் 2021 ஆம் ஆண்டு முதல் சிறிய அளவிலான கடன்களை வழங்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளது.

கடன் கோரியவர்களுக்கு தனது நிறுவனத்தின் கையடக்க தொலைபேசி மென்பொருள் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்ட தரவுகள் ஒப்பிட்டு அதற்கேற்ப கடன்கள் வழங்கப்படுவதாகவும் மனுதாரரின் சட்டத்தரணி வீரசேகர தெரிவித்தார்.

கடனை வழங்கும்போது கடனாளர்களிடம் எந்தப் பத்திரமும் எடுக்கப்படுவதில்லை. அவர்கள் குறிப்பிட்டுள்ள வங்கிக் கணக்கு எண்ணில் குறுகிய காலத்திற்குள் கடன் தொகை வரவு வைக்கப்படுவதாகவும் முறைப்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

2022, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் 2 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக கடன் வாங்கி, வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாதவர்களுக்கு எதிராக இந்த வழக்குகளை நிறுவனம் தாக்கல் செய்துள்ளது.

தொடர்புடையசெய்திகள்

இணையவழி நிதி மோசடிகள் குறித்து பொதுமக்களுக்கு மத்திய வங்கியின் அவசர எச்சரிக்கை!
செய்திகள்

இணையவழி நிதி மோசடிகள் குறித்து பொதுமக்களுக்கு மத்திய வங்கியின் அவசர எச்சரிக்கை!

July 8, 2026
நாட்டின் பல பகுதிகளில் அடுத்தடுத்து விபத்துகள்; பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட நால்வர் பலி!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் அடுத்தடுத்து விபத்துகள்; பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட நால்வர் பலி!

July 8, 2026
ஈரானில் 80 இலக்குகள் மீது அமெரிக்கா தாக்குதல்; மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் தீவிரம்!
செய்திகள்

ஈரானில் 80 இலக்குகள் மீது அமெரிக்கா தாக்குதல்; மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் தீவிரம்!

July 8, 2026
சிறை மோதல் விவகாரம்; பூஸாவுக்கு மாற்றப்பட்ட கைதி உயிரிழப்பு!
செய்திகள்

சிறை மோதல் விவகாரம்; பூஸாவுக்கு மாற்றப்பட்ட கைதி உயிரிழப்பு!

July 8, 2026
சா/த பரீட்சை பெறுபேறு மறுபரிசீலனைக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் இன்று நிறைவு!
செய்திகள்

சா/த பரீட்சை பெறுபேறு மறுபரிசீலனைக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் இன்று நிறைவு!

July 8, 2026
நீர்கொழும்பில் இருந்து மட்டு சிறைக்கு 60 கைதிகள் இடமாற்றம்
செய்திகள்

நீர்கொழும்பில் இருந்து மட்டு சிறைக்கு 60 கைதிகள் இடமாற்றம்

July 8, 2026
Next Post
யாழ் போதனா வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் விஜயம்!

யாழ் போதனா வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் விஜயம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.