நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தைத் தொடர்ந்து பூஸா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
திடீர் உடல்நலக்குறைவு காரணமாக காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் குறித்த கைதி உயிரிழந்ததாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட சம்பவத்தின் பின்னணியில் நாடு முழுவதிலுமுள்ள அனைத்து சிறைச்சாலைகளின் சிரேஷ்ட அதிகாரிகளும் இன்று (08) காலை 7.30 மணிக்கு விசேட ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது, இதுபோன்ற சம்பவங்கள் ஏனைய சிறைச்சாலைகளில் ஏற்படாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
மேலும், நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்த 1,033 கைதிகள் பல்வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதுடன், மோதலை வழிநடத்தியதாகக் கூறப்படும் கட்டுவெல்லேகம சுரேஷும் பூஸா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையில், நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளதுடன், அவர்களில் 7 சிறைசாலை அதிகரிகள் உயிரிழந்துள்ளார்கள்.
மேலும், காயமடைந்த சுமார் 100 பேரில் 20 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.








