Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாட்டின் பல பகுதிகளில் அடுத்தடுத்து விபத்துகள்; பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட நால்வர் பலி!

நாட்டின் பல பகுதிகளில் அடுத்தடுத்து விபத்துகள்; பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட நால்வர் பலி!

2 months ago
in செய்திகள்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று (07) இடம்பெற்ற நான்கு தனித்தனி வீதி விபத்துகளில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்துகள் தலாவ, கரந்தெனிய, புளியங்குளம் மற்றும் ஆனமடுவ பொலிஸ் பிரிவுகளில் பதிவாகியுள்ளன.

அனுராதபுரம் – தலாவ பிரதான வீதியின் சுனாமி சந்திக்கு அருகே, கெப் ரக வாகனமொன்று மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டது. இதில் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய ஹிதோகம பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கெப் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், தலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில், கரந்தெனிய மடக்கும்புர – கொடவெல குறுக்கு வீதியில், முன்னால் சென்ற மிதிவண்டியின் பின்புறத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் இருவரும் காயமடைந்தனர். பொரகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 50 வயதுடைய மிதிவண்டி ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மேலும், ஏ-09 வீதியின் ராமநூர் பகுதியில் யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற வேன் ஒன்று வீதியைக் கடக்க முயன்ற 48 வயதுடைய பாதசாரி மீது மோதியுள்ளது. மோதலின் தாக்கத்தில் அவர் எதிரே வந்த காரில் சிக்கி படுகாயமடைந்த நிலையில், வவுனியா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

அதேவேளை, ஆனமடுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆடிகம – கீரியன்கள்ளிய வீதியில், மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற மோட்டார் சைக்கிள் எதிரே வந்த டிப்பர் வாகனத்துடன் மோதியதில் 21 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த நான்கு விபத்துகள் தொடர்பிலும் சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்கள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் 74,900 ஹெக்டேயரில் பெரும்போக நெற்செய்கை; உரம், நீர் முகாமைத்துவம் குறித்து விசேட கவனம்!
செய்திகள்

மட்டக்களப்பில் 74,900 ஹெக்டேயரில் பெரும்போக நெற்செய்கை; உரம், நீர் முகாமைத்துவம் குறித்து விசேட கவனம்!

August 22, 2026
களனிப் பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் என்.டி. பெர்னாண்டோ!
செய்திகள்

களனிப் பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் என்.டி. பெர்னாண்டோ!

August 22, 2026
கல்கிஸ்ஸவில் 2.40 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான தங்கம், பணம் கொள்ளை; சந்தேகநபர் கைது!
செய்திகள்

கல்கிஸ்ஸவில் 2.40 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான தங்கம், பணம் கொள்ளை; சந்தேகநபர் கைது!

August 22, 2026
ஹாலிஎல தோட்டத்தில் தீ விபத்து; இரு வீடுகள் முற்றாக சேதம்
செய்திகள்

ஹாலிஎல தோட்டத்தில் தீ விபத்து; இரு வீடுகள் முற்றாக சேதம்

August 22, 2026
மாகாண சபைகளின் 2026 திட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதி விசேட கவனம்
செய்திகள்

மாகாண சபைகளின் 2026 திட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதி விசேட கவனம்

August 22, 2026
லண்டன் தேம்ஸ் நதிக்கரையில் முதன்முறையாக கங்கா ஆரத்தி!
உலக செய்திகள்

லண்டன் தேம்ஸ் நதிக்கரையில் முதன்முறையாக கங்கா ஆரத்தி!

August 22, 2026
Next Post
இணையவழி நிதி மோசடிகள் குறித்து பொதுமக்களுக்கு மத்திய வங்கியின் அவசர எச்சரிக்கை!

இணையவழி நிதி மோசடிகள் குறித்து பொதுமக்களுக்கு மத்திய வங்கியின் அவசர எச்சரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.