Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஜனாதிபதியின் நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு பொதுஜன பெரமுன தொடர்ந்தும் ஆதரவை வழங்கும் ; பசில் ராஜபக்ஸ உறுதி!

ஜனாதிபதியின் நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு பொதுஜன பெரமுன தொடர்ந்தும் ஆதரவை வழங்கும் ; பசில் ராஜபக்ஸ உறுதி!

2 years ago
in முக்கிய செய்திகள்

அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு அரசாங்கத்தின் பிரதான கட்சியான பொதுஜன பெரமுன தொடர்ந்தும் ஆதரவை வழங்கும் என கட்சியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ச அதிபர் ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் வலியுறுத்தியுள்ளார்.

நேற்று (14) அதிபர் அலுவலகத்தில் அரசாங்க தரப்பு கட்சித் தலைவர்களுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே பசில் ராஜபக்ஸ மேற்கண்ட உறுதி மொழியை அளித்துள்ளார்.

பிரதமர் தினேஷ் குணவர்தன, பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அமைச்சர் ஜீவன் தொண்டமான், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. எல்.எம். அதாவுல்லா உள்ளிட்ட அமைச்சர்கள் குழு இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டது.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த பசில் ராஜபக்ஸ,

சில தொழிற்சங்கங்களும் தமது கட்சியைச் சேர்ந்த சில உள்ளுர் அரசியல்வாதிகளும் அரசாங்கத்தின் கொள்கைகள் தொடர்பில் முரண்பாடான நிலையில் கருத்து வெளியிடுவதாகவும், ஆனால் அந்த பிரச்சினைகள் எதுவும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஆதரவளிக்காத அளவுக்கு தீவிரமானவை அல்ல எனவும் தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடல் மூலம் ஒன்றிணைந்து செயற்படும் எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு காண முடியும் எனவும், அதற்காக மாதத்திற்கு ஒரு நாள் அதிபரை நேருக்கு நேர் சந்திப்பது அவசியமானது எனவும் பசில் ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தாம் உட்பட பொதுஜன பெரமுன கட்சி அண்மைக்கால வரலாற்றில் பல அதிபர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளதாகவும், அந்த அனுபவத்தின்படி அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் இதுவரை எந்தவொரு அதிபரிடத்தும் இல்லாத வகையில் ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் செயற்பாட்டுப் பணியாளர்கள் இருப்பதாகவும் பசில் ராஜபக்ச புகழாரம் சூட்டியுள்ளார்.

அதிபரின் தலைமைப் பணிப்பாளர் சாகல ரத்நாயக்க மற்றும் அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோரின் கடமைகளை தாம் பாராட்டுவதாகக் குறிப்பிட்டுள்ள பசில் ராஜபக்ஸ, மேலும் குறிப்பிட்டுள்ளதாவது. “அதிபரின் தலைமை அதிகாரியாக சாகல ரத்நாயக்கவும், செயலாளராக சமன் ஏக்கநாயக்கவும் இணைந்து செயற்படுவது மிகவும் இலகுவானது.

அவர்கள் எந்த நேரத்திலும் கலந்துரையாடலுக்கும் கேட்பதற்கும் தயாராக உள்ளனர். இப்பதவிகள் கிடைக்கும் போது பலருக்கு தொலைபேசி அழைப்பு செய்யக்கூட வாய்ப்பு கிடைப்பதில்லை. ஆனால் இருவரும் அந்த பலவீனத்தால் பாதிக்கப்படுவதில்லை. அவர்கள் அதை மதிப்பீடு செய்ய வேண்டும். மேலும் அந்த முக்கியமான அம்சத்தை பராமரிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

ஆனால், நமது பிரதமர் சற்று பிஸியாக இருப்பதால் அவரை தொலைபேசியில் தொடர்புகொள்வது கடினமாக உள்ளது. ஆனால் அதிபர் அப்படியல்ல. அவர் எவ்வளவு பிஸியாக இருந்தாலும், ஒரு அழைப்பைப் பெற்ற உடனேயே அதற்குப் பதிலளிப்பார். அதிபராக அப்படிச் செய்வது சிறப்புப் பாராட்டுக்குரியது என தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டைக் கட்டியெழுப்பும் அதிபரின் வேலைத்திட்டத்திற்கு கட்சி என்ற ரீதியில் இந்த ஆதரவை வழங்கியுள்ளோம், அதற்கு தட்டுப்பாடு இன்றி தொடர்ந்தும் ஆதரவளிப்போம். பொதுஜன பெரமுனவுடன் தொடர்புடைய ஏனைய கட்சிகளும் இதற்கு உடன்படுகின்றன.

இப்படி மாதம் ஒருமுறை கூடி விவாதித்தால், உள்ளூர் அரசியல் தலைவர்கள் தெரிவிக்கும் சில ஆட்சேபனைகளை நமது தொழிற்சங்கங்கள் சிலவற்றாலும் தீர்க்க முடியும்.

அத்துடன், தற்போது முன்னெடுக்கப்படும் இந்த செயற்பாடுகளுக்கான எமது முன்மொழிவுகளையும் யோசனைகளையும் முன்வைக்க முடியும்” என பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். இதுவரை வழங்கப்பட்டு வந்த ஆதரவு, தொடர்ந்து வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

கெஹெலிய ரம்புக்வெல மற்றும் அவரது மகன் பிணையில் விடுதலை
செய்திகள்

கெஹெலிய ரம்புக்வெல மற்றும் அவரது மகன் பிணையில் விடுதலை

June 3, 2025
செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்

June 3, 2025
யுத்தக்காலத்தில் இலங்கையில் இருந்து தப்பிச் சென்ற அகதிகள் மீண்டும் இலங்கைக்கு வருவதற்கு உள்ள தடைகளை நீக்க அரசாங்கம் முடிவு
செய்திகள்

யுத்தக்காலத்தில் இலங்கையில் இருந்து தப்பிச் சென்ற அகதிகள் மீண்டும் இலங்கைக்கு வருவதற்கு உள்ள தடைகளை நீக்க அரசாங்கம் முடிவு

June 3, 2025
தகராறின் போது கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு
செய்திகள்

தகராறின் போது கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு

June 3, 2025
கொழும்பு – மட்டக்குளி வீதியில் பயணித்த பேருந்து ஒன்று விபத்து
செய்திகள்

கொழும்பு – மட்டக்குளி வீதியில் பயணித்த பேருந்து ஒன்று விபத்து

June 3, 2025
முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தாக்கல் செய்த மனு நிராகரிப்பு
செய்திகள்

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தாக்கல் செய்த மனு நிராகரிப்பு

June 3, 2025
Next Post
மட்டு செங்கலடியில் போராட்டம்; மஜகர் கையளிப்பு!

மட்டு செங்கலடியில் போராட்டம்; மஜகர் கையளிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.