Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சரின் மகிழ்ச்சி தகவல்!

பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சரின் மகிழ்ச்சி தகவல்!

9 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நாட்டிலுள்ள அனைத்து அரசாங்க பாடசாலைகள், அரச அனுசரணை தனியார் பாடசாலைகள், பிரிவேனாக்கள் மற்றும் ஏனைய விசேட பாடசாலைகளிலும் கல்வி பயிலும் மாணவர்களுக்கு மூன்று வருட காலத்துக்கான சுரக்ஷா மாணவர் காப்புறுதியை நேற்று (01) முதல் வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

சுரக்‌ஷா காப்புறுதியை மாணவர்களுக்கு வழங்குவதற்காக (7,212 மில்லியன்) 711 கோடியே 20 இலட்சம் ரூபாவை முதலீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அது தொடர்பான உடன்படிக்கைக் கைச்சாத்து நேற்று நடைபெற்றதுடன் அந்த வைபவத்தில் கலந்து கொண்ட போதே கல்வி அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சும், இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனமும் இணைந்து சுரக்ஷா மாணவர் காப்புறுதித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதுடன் கல்வி அமைச்சின் சார்பில் அமைச்சின் செயலாளர் திலக்கா ஜயசுந்தரவும் காப்புறுதிக் கூட்டத்தாபனத்தில் சார்பில் அதன் பிரதான நிறைவேற்றதிகாரி ப்ரியந்த பெரேராவும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.

இக் காப்புறுதியின் மூலம் அரச அல்லது தனியார் மருத்துவமனைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதற்கான கொடுப்பனவாக 03 இலட்சம் ரூபாவும், வெளிநோயாளர் பிரிவு சிகிச்சைக்கான கொடுப்பனவாக 20,000 ரூபாவும், பாரதூரமான நோய்களுக்கான சிகிச்சைகளுக்காக 15,00,000 ரூபாவும் வழங்கப்படுமென அமைச்சர் தெரிவித்துள்ளார்.

விபத்து காப்புறுதி மூலம் முழுமையான அங்கவீனமுற்றிருந்தால் 2,00, 000 ரூபாவும், நிரந்தரமான பகுதியளவில் அங்கவீன முற்றிருந்தால் 1,50,000 ரூபாவும், தற்காலிக பாதிப்புகளுக்காக 25,000 ரூபா முதல் ஒரு இலட்சம் ரூபா வரை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.

ஆயுள் காப்பறுதியின் கீழ் வருடாந்த வருமானம் 1,80,000 ரூபாவை விட குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு மேலதிகமாக ‘அஸ்வெசும’ வேலைத் திட்டத்தில் இடம்பெறும் குடும்பங்களின் பெற்றோர், நிரந்தர பாதுகாவலருடன் காணப்படும் பிள்ளைகளுக்கு 75 ஆயிரம் ரூபாவும், ஒரு மரணத்துக்காக வழங்கப்படும் அதிகபட்ச தொகை 2,25,000 ரூபாவுமாகமென்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

குடும்பத்திலுள்ள அனைத்து பிள்ளைகளுக்கும் இந்த நிதி சமமாக ஒதுக்கப்படுமெனவும் பெற்றோர்கள் இருவரும் அல்லது பாதுகாவலரின் மரணத்துக்காக தனித்தனியாக இந்த காப்புறுதி உரித்துடையதாகுமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.

பாடசாலை மாணவர்களுக்கு இந்த காப்புறுதிக்காக இலவசமாக அட்டைகள் வழங்கப்படுவதுடன் காப்புறுதி டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டுள்ளமையும் விசேட அம்சமாகும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewsSrilankasrilankanewsசுரக்‌ஷா

தொடர்புடையசெய்திகள்

நாட்டில் மீண்டும் உப்பு பற்றாக்குறை
செய்திகள்

நாட்டில் மீண்டும் உப்பு பற்றாக்குறை

May 13, 2025
ஆயிரக்கணக்கான பயணிகளுடன் கொழும்பை வந்தடைந்த சொகுசு கப்பல்
செய்திகள்

ஆயிரக்கணக்கான பயணிகளுடன் கொழும்பை வந்தடைந்த சொகுசு கப்பல்

May 13, 2025
கொழும்பில் ஹெரோயினுடன் இரு இளைஞர்கள் கைது
செய்திகள்

கொழும்பில் ஹெரோயினுடன் இரு இளைஞர்கள் கைது

May 13, 2025
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு; பெண் கைது
செய்திகள்

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு; பெண் கைது

May 13, 2025
கொத்மலை பேருந்து விபத்து தொடர்பில் வெளியான தகவல்
செய்திகள்

கொத்மலை பேருந்து விபத்து தொடர்பில் வெளியான தகவல்

May 13, 2025
மட்டு நகரில் தேசிய வெசாக் வாரத்தினை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள்
செய்திகள்

மட்டு நகரில் தேசிய வெசாக் வாரத்தினை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள்

May 12, 2025
Next Post
தனது புகைப்படத்தை பயன்படுத்தலாம்; மஹிந்த அறிவிப்பு!

தனது புகைப்படத்தை பயன்படுத்தலாம்; மஹிந்த அறிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.