Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உலக தமிழர்களினை ஒருங்கிணைக்கும் வகையில் மட்டு நகரில் உலக தமிழ் கலை இலக்கிய மாநாடு!

உலக தமிழர்களினை ஒருங்கிணைக்கும் வகையில் மட்டு நகரில் உலக தமிழ் கலை இலக்கிய மாநாடு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

உலக தமிழர்களினை ஒருங்கிணைக்கும் வகையில் நேற்றுமுன் தினம் மட்டக்களப்பில் உலக தமிழ் கலை இலக்கிய மாநாடு கோலாகலமாக ஆரம்பமானது.

கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமானின் வழிகாட்டலின் கீழ் கிழக்கு மாகாண கல்வித்திணைக்களம், பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் மட்டக்களப்பு மாநகரசபை இணைந்து இந்த உலக தமிழ் கலை இலக்கிய மாநாட்டினை நடாத்துகின்றது.

மட்டக்களப்பு அரசடியில் கிழக்கு பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு பீடத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டதை தொடர்ந்து தமிழர்களின் பண்பாட்டு பாரம்பரியங்களையும் மட்டக்களப்பின் தனித்துவ அடையாளங்களையும் பிரதிபலிக்கும் வகையிலான பண்பாட்டு ஊர்திகள் மற்றும் மாணவர்களின் பவணியானது ஆரம்பமானது.

குறித்த பவனியானது மட்டக்களப்பு நகர் ஊடாக வருகைதந்து மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நிகழ்வுகள் ஆரம்பமானது.

உலக தமிழர் கலை இலக்கிய கருத்தரங்கியல் தலைவர் முனைவர் க.சுபாஷினி தலைமையில் ஆரம்பமான இந்த கருத்தரங்கின் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் மலேசிய பாராளுமன்ற உறுப்பினர் டத்தோ சி.சரணவன்,கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் வ.கனகசிங்கம்,எழுத்தாளர் சுவிஸ் நாட்டை சேர்ந்த கல்லாறு சதீஸ் உட்பட இலங்கை,தமிழ் நாடு மற்றும் சர்வதேச நாடுகளிலிருந்து வருகைதந்த எழுத்தாளர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பில் உலக தமிழ் கலை இலக்கிய மாநாடு தொடர்பான மலர் வெளியிடப்பட்டதுடன் மட்டக்களப்பு ஆய்வு நூலும் இதன்போது வெளியீடு செய்யப்பட்டது.அத்துடன் மட்டக்களப்பில் உலக தமிழ் கலை இலக்கிய மாநாட்டை குறிக்கும் வகையில் இலங்கை அஞ்சல் திணைக்களத்தினால் முத்திரையொன்றும் இதன்போது வெளியீடுசெய்யப்பட்டது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பில் உலக தமிழ் கலை இலக்கிய மாநாட்டை சிறப்பிக்கும் வகையில் பல்வேறு கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

புனரமைக்க முடியாத மலையக வீடுகளுக்கு ரூ.50 இலட்சம்; அரசின் புதிய தீர்மானம்!
செய்திகள்

புனரமைக்க முடியாத மலையக வீடுகளுக்கு ரூ.50 இலட்சம்; அரசின் புதிய தீர்மானம்!

June 9, 2026
30 ஆண்டு சட்டப் போராட்டத்தில் தாய்க்கு வெற்றி; வீட்டின் உரிமை தாய்க்கே என நீதிமன்றம் தீர்ப்பு
செய்திகள்

30 ஆண்டு சட்டப் போராட்டத்தில் தாய்க்கு வெற்றி; வீட்டின் உரிமை தாய்க்கே என நீதிமன்றம் தீர்ப்பு

June 9, 2026
விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமில்லை; ஆனந்த விஜேபால
செய்திகள்

விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமில்லை; ஆனந்த விஜேபால

June 9, 2026
வலுவடையும் டொலரின் மதிப்பு; ரூ. 342 ஐ தாண்டிய விற்பனை விலை!
செய்திகள்

வலுவடையும் டொலரின் மதிப்பு; ரூ. 342 ஐ தாண்டிய விற்பனை விலை!

June 9, 2026
50 ஆண்டுகளாக தொடரும் உரிமைப் போராட்டம்; தீர்வு இல்லை என குற்றச்சாட்டு!
செய்திகள்

50 ஆண்டுகளாக தொடரும் உரிமைப் போராட்டம்; தீர்வு இல்லை என குற்றச்சாட்டு!

June 9, 2026
கல்முனை வலய மட்ட செஸ் போட்டியில் சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை மாணவர்கள் அசத்தல் சாதனை
செய்திகள்

கல்முனை வலய மட்ட செஸ் போட்டியில் சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை மாணவர்கள் அசத்தல் சாதனை

June 9, 2026
Next Post
யாழில் விபத்து; பெண்ணொருவர் பலி!

யாழில் விபத்து; பெண்ணொருவர் பலி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.