Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு கலைஞர்களின் படைப்பான போடியார் திரைப்படம் திரைக்கு வருகின்றது!

மட்டு கலைஞர்களின் படைப்பான போடியார் திரைப்படம் திரைக்கு வருகின்றது!

9 months ago
in சினிமா, செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு படுவான்கரைப் பிரதேசத்தையும்,வாழ்வியலையும் மையப்படுத்தி “Visual Art Movies” நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டுள்ள “போடியார்” திரைப்படம் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு கடந்த வியாழக்கிழமை (01) மட்டக்களப்பு கல்லடி கிறீன் கார்டன் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.

இதன்போது “Visual Art Movies” நிறுவனம் இலங்கைத் தமிழ் சினிமாவை வர்த்தக ரீதியாக வளர்ப்பதுடன், எமது மொழி, கலை மற்றும் கலாசாரங்களைப் பாதுகாப்பதற்கும், இளம் கலைஞர்களை ஊக்குவிப்பதற்கு செயற்படும் வகையிலும் ஏற்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

போடியார் திரைப்படத்தை குடும்பநல வைத்திய நிபுணர் பேராசிரியர் க.அருளானந்தம், கிழக்குப் பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானபீட சிரேஷ்ட தயாரிப்பாளர் சதா சண்முகநாதன் மற்றும் “விசுவல் ஆர்ட் நிறுவன உரிமையாளர் ப.முரளிதரன் ஆகியோர் இணைந்து தயாரித்து இருந்தனர்.

இவ் மண்வாசனையை வெளிக் கொணரும் திரைப்படத்தில் ஜனா, ஜே.ஜே.நெலு, கிரேஸ், சுஜானி உட்படப் பலர் நடித்துள்ளனர்.

ப. முரளிதரன் அவர்களால் கதை திரைக்கதை, வசனம் எழுதப்பட்டிருந்ததுடன், இப் படத்தினை கோடிஸ்வரன் இயக்கியிருந்தார். புஷ்பகாந்த் அவர்களினால் படப்பிடிப்புக்கான எடிட்டிங் பணிகளும், யு.து. சங்கர்ஜன் அவர்களினால் இசையமைப்பு பணிகளும் செய்யப்பட்டு தற்போது படத்திற்கான வெளியீட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றுவருகிறது.

இத்திரைப்படத்தின் வெள்ளோட்டம் மட்டக்களப்பு விஜயா திரையரங்கில் எதிர்வரும் 23,25,26 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மாவட்டத்திலுள்ள பொதுமக்கள் வருகை தந்து திரைப்படத்தைப் பார்வையிடுவதுடன், இத் திரைப்படம் தொடர்பான எவ்வித கருத்துக்களையும் பகிர்ந்து இத்துறை சார்ந்து எங்களை ஊக்குவிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கொத்மலை பேருந்து விபத்து தொடர்பில் வெளியான தகவல்
செய்திகள்

கொத்மலை பேருந்து விபத்து தொடர்பில் வெளியான தகவல்

May 13, 2025
மட்டு நகரில் தேசிய வெசாக் வாரத்தினை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள்
செய்திகள்

மட்டு நகரில் தேசிய வெசாக் வாரத்தினை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள்

May 12, 2025
87 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா பறிமுதல்
செய்திகள்

87 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா பறிமுதல்

May 12, 2025
நுவரெலியாவில் அண்ணனை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்த தம்பி
செய்திகள்

நுவரெலியாவில் அண்ணனை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்த தம்பி

May 12, 2025
இந்தோனேசியாவில் மூழ்கிய கப்பல்; பலர் உயிரிழப்பு
உலக செய்திகள்

இந்தோனேசியாவில் மூழ்கிய கப்பல்; பலர் உயிரிழப்பு

May 12, 2025
மின்சார சபை தலைவர் பதவி விலகவில்லை என அமைச்சு மறுப்பறிக்கை
செய்திகள்

மின்சார சபை தலைவர் பதவி விலகவில்லை என அமைச்சு மறுப்பறிக்கை

May 12, 2025
Next Post
முல்லை புதுக்குடியிருப்பு பகுதியில் 15 வயது சிறுமியுடன் வாழ்ந்து வந்த 18 வயது இளைஞன் கைது!

முல்லை புதுக்குடியிருப்பு பகுதியில் 15 வயது சிறுமியுடன் வாழ்ந்து வந்த 18 வயது இளைஞன் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.