Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
முன்மொழியப்பட்டுள்ள இருவர்; தமிழ் பொதுவேட்பாளரின் பெயரை நாளை அறிவிக்கவுள்ளதாக தகவல்!

முன்மொழியப்பட்டுள்ள இருவர்; தமிழ் பொதுவேட்பாளரின் பெயரை நாளை அறிவிக்கவுள்ளதாக தகவல்!

2 years ago
in செய்திகள்

ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் களமிறக்கப்படவுள்ள பொதுவேட்பாளரின் பெயர் நாளை வியாழக்கிழமை (08) அறிவக்கப்படவுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் களமிறக்குவதற்குத் தகுதியான பொதுவேட்பாளர் யார் என்பது குறித்தும் , நிதி மற்றும் பரப்புரை நடவடிக்கைகளுக்கான உபகுழுக்களை நியமிப்பது குறித்தும் ஆராயும் நோக்கில் கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் கூடிய தமிழ்த்தேசிய பொதுக்கட்டமைப்பு, தமிழ் பொதுவேட்பாளரின் பெயரை ஓரிரு தினங்களில் அறிவிப்பதற்குத் தீர்மானித்தது.

அன்றைய கூட்டத்தில் நிதி மற்றும் பரப்புரை நடவடிக்கைகளுக்கான உபகுழுக்களுக்கான உறுப்பினர்கள் தொடர்பில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.

அதற்கமைய எதிர்வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித்தேர்தலில் தமிழ்மக்கள் சார்பில் களமிறக்குவதற்கான பொதுவேட்பாளராக பல்வேறு நபர்களின் பெயர்கள் முன்மொழியப்பட்டு ஆராயப்பட்ட நிலையில், அவர்களில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் மற்றும் தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் கே.வி.தவராசா ஆகியோரின் பெயர்கள் இறுதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளன.

இவ்விடயம் தொடர்பில் அவர்கள் இருவருடனும் கலந்துரையாடி, யாரை ஜனாதிபதித்தேர்தலில் களமிறக்கப்போகிறோம் என புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை அறிவிப்பதாக தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் சிறிகாந்தா தெரிவித்திருந்தார்.

அதன்படி இன்று புதன்கிழமை இதுபற்றி அவரிடம் வினவியபோது, பொதுவேட்பாளரின் பெயர் நாளை வியாழக்கிழமை அறிவிக்கப்படும் என அவர் உறுதிப்படுத்தினார்.

Tags: BatticaloaBattinaathamnewspoliticalnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

சில கரையோர பகுதிகளுக்கு எச்சரிக்கை; மறு அறிவித்தல் வரும் வரை கடலுக்கு செல்லவேண்டாம்
செய்திகள்

சில கரையோர பகுதிகளுக்கு எச்சரிக்கை; மறு அறிவித்தல் வரும் வரை கடலுக்கு செல்லவேண்டாம்

June 7, 2026
சஹாரா பாலைவனத்தில் துயரம்: ஹஜ் பெருநாளை முடித்து கொண்டு திரும்பிய 49 பேர் குடிநீர் இல்லாததால் மரணம்
செய்திகள்

சஹாரா பாலைவனத்தில் துயரம்: ஹஜ் பெருநாளை முடித்து கொண்டு திரும்பிய 49 பேர் குடிநீர் இல்லாததால் மரணம்

June 7, 2026
ஒரு பாடலுக்கு பயப்படுவது வேடிக்கையான விடயம்; சாணக்கியன்
செய்திகள்

ஒரு பாடலுக்கு பயப்படுவது வேடிக்கையான விடயம்; சாணக்கியன்

June 7, 2026
பெற்றோரின் சொத்துக்களை பெற்றுக்கொண்டு அவர்களை கைவிடும் பிள்ளைகளின் சொத்துக்கள் அரசுடமையாக்கும் சட்டம்
செய்திகள்

பெற்றோரின் சொத்துக்களை பெற்றுக்கொண்டு அவர்களை கைவிடும் பிள்ளைகளின் சொத்துக்கள் அரசுடமையாக்கும் சட்டம்

June 7, 2026
யாழ் விமான நிலையத்தில் நடராஜர் சிலை வைக்க தடையாக இருக்கும் அமைச்சர் சந்திரசேகர்
செய்திகள்

யாழ் விமான நிலையத்தில் நடராஜர் சிலை வைக்க தடையாக இருக்கும் அமைச்சர் சந்திரசேகர்

June 7, 2026
வீட்டு தகராறில் மனைவியின் தாக்குதலில் கணவன் பலி
செய்திகள்

வீட்டு தகராறில் மனைவியின் தாக்குதலில் கணவன் பலி

June 7, 2026
Next Post
விமானம் மூலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட ஐஸ் போதைப்பொருள்!

விமானம் மூலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட ஐஸ் போதைப்பொருள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.