Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புகையிரத சேவை மறுசீரமைப்பு; கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கும் தொழிற்சங்கத்தினர்!

புகையிரத சேவை மறுசீரமைப்பு; கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கும் தொழிற்சங்கத்தினர்!

3 years ago
in முக்கிய செய்திகள்

புகையிரத திணைக்களம் இலாபமடைய வேண்டுமாயின் புகையிரத சேவையை அதிகார சபையாக மாற்றியமைக்க வேண்டும், புகையிரத சேவை மறுசீரமைக்கப்பட வேண்டும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்ட கருத்துக்கு புகையிரத சேவை தொழிற்சங்கத்தினர் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

புகையிரத சேவையை அதிகார சபையாக மாற்றியமைக்கும் போது பொது பயணிகள் பாரிய அசௌகரியங்களை எதிர்கொள்வார்கள். இலாபமடையும் நோக்கத்துக்காக கட்டணம் சடுதியாக அதிகரிக்கப்படும்.

ஆகவே புகையிரத சேவையை அதிகார சபையாக மாற்றியமைக்கும் போது ஏற்படும் பாதிப்பை அரசாங்கம் மக்களுக்கு அறிவுறுத்த வேண்டும். மக்களின் விருப்பத்துக்கு அமையவே புகையிரத சேவை மறுசீரமைக்கப்பட வேண்டும் என புகையிரத சேவை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்றார்.

புகையிரத சேவையில் பல மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டியுள்ளது. மானியம் இல்லாத காரணத்தால் அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க முடியாதுள்ளது. ஆகவே புகையிரத சேவை அதிகார சபையாக மாற்றியமைக்கப்பட வேண்டும்.

அத்துடன், புகையிரத சேவை காலத்துக்கு ஏற்றாற் போல் மறுசீரமைக்கப்பட வேண்டும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்ட கருத்துக்கு புகையிரத சேவை தொழிற்சங்கத்தினர் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

புகையிரத சேவையை அதிகார சபையாக மாற்றியமைத்தால் நடுத்தர மக்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்வார்கள். பொது போக்குவரத்து சேவையின் கட்டணம் உயர்வடைந்ததால் பெரும்பாலான பொது பயணிகள் தற்போது புகையிரத சேவையை பயன்படுத்துகிறார்கள். இவ்வாறான பின்னணியில் புகையிரத சேவையை அதிகார சபையாக்கினால் பொது பயணிகள் பாரிய அசௌகரியங்களை எதிர்கொள்வார்கள்.

புகையிரத சேவையை அதிகாரசபையால் மாற்றியமைக்கும் போது பொதுபயணிகள் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள், இழக்கப்படும் வரபிரசாதங்கள் ஆகியன தொடர்பில் வெளிப்படை தன்மையுடன் அரசாங்கம் மக்களுக்கு அறிவிக்க வேண்டும். மக்களின் விருப்பத்துக்கு அமையவே புகையிரத சேவை மறுசீரமைக்கப்பட வேண்டும் என தொழிற்சங்கத்தினர் போக்குவரத்து அமைச்சிடம் வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

வன்னியின் பெருமையை உயர்த்திய பாபு மாஸ்டர்; 7ஆம் நிலைக் கறுப்புப்பட்டி அங்கீகாரம்!
செய்திகள்

வன்னியின் பெருமையை உயர்த்திய பாபு மாஸ்டர்; 7ஆம் நிலைக் கறுப்புப்பட்டி அங்கீகாரம்!

July 28, 2026
மலேசியாவில் சிக்கிய இலங்கை போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய நபர்; ‘ரத்மலானே சைமா’ கைது!
செய்திகள்

மலேசியாவில் சிக்கிய இலங்கை போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய நபர்; ‘ரத்மலானே சைமா’ கைது!

July 28, 2026
சாய்ந்தமருதில் போலி உறுதி எழுதும் சட்டவிரோத இடங்கள்!
செய்திகள்

சாய்ந்தமருதில் போலி உறுதி எழுதும் சட்டவிரோத இடங்கள்!

July 28, 2026
கனடாவில் இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேர் கைது
உலக செய்திகள்

கனடாவில் இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேர் கைது

July 28, 2026
திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலயத்தின் 7ஆம் நாள் உற்சவம் பக்தி பூர்வமாக நடைபெற்றது!
செய்திகள்

திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலயத்தின் 7ஆம் நாள் உற்சவம் பக்தி பூர்வமாக நடைபெற்றது!

July 28, 2026
செம்மணி விவகாரத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை உறுதி; ஹர்ஷண நாணயக்கார
செய்திகள்

செம்மணி விவகாரத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை உறுதி; ஹர்ஷண நாணயக்கார

July 28, 2026
Next Post
இலங்கையின் பணவீக்கம் தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்ட தகவல்!

இலங்கையின் பணவீக்கம் தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்ட தகவல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.