Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வடகிழக்கு மக்களின் ஆதரவால் சஜித்தின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது; ஹிஸ்புல்லா தெரிவிப்பு!

வடகிழக்கு மக்களின் ஆதரவால் சஜித்தின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது; ஹிஸ்புல்லா தெரிவிப்பு!

2 years ago
in அரசியல், செய்திகள், மட்டு செய்திகள்

வடகிழக்கு மக்களின் ஆதரவு காரணமாக சஜித் பிரேமதாசவின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதி தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகள் இணைந்த ஊடக சந்திப்பு இன்று (03) மட்டக்களப்பு கல்லடியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.

இதில் முன்னாள் பிரதி அமைச்சர்களான எம்.எஸ்.எஸ்.அமீர்அலி, சோ.கணேசமூர்த்தி ஆகியோரும் கருத்து தெரிவித்தனர்.

சாதாரண மக்களின் வாழ்வாதாரத்தினை முன்னேற்றக்கூடிய வகையிலும், நாட்டின் பொருளாதாரத்தினை முன்னேற்றக்கூடிய வகையிலும் வேட்பாளர் சஜித் பிரேதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் அமைந்துள்ளதாகவும் இதன்போது எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

நாட்டின் வடக்கு கிழக்கு உட்பட அனைத்து பகுதிகளிலும் எமது ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவரது நிர்வாகத்தில் மிகச் சிறப்பாக பொருளாதாரம் கட்டி எழுப்பப்பட்டு வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களது எதிர்காலத்தை முன்னேற்றக் கூடிய வகையிலும் சிறப்பானதொரு தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்வைத்து அவர் தேர்தல் களத்தில் நிற்கின்றார்.

இன்று தமிழரசு கட்சி அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ள விடயத்தை நாம் வரவேற்று பாராட்டுகின்றோம். இதன் மூலம் வடக்கு கிழக்கு அனைத்து மாவட்டங்களிலும் மூவின மக்களாலும் நேசிக்கப்பட்டு ஒரு வெற்றி வேட்பாளராக காணப்படுகின்றார் .

இதன் மூலம் வடக்கு கிழக்கில் நிலவுகின்ற அதிகார பிரச்சனைகளுக்குரிய தீர்வு அபிவிருத்தியிலும் பொருளாதாரத்திலும் பின்தங்கியுள்ள வடக்கு கிழக்கு பகுதிகளுக்கான விசேட அபிவிருத்தி திட்ட செயற்பாடுகளை வெளிநாட்டு நிதி உதவியுடன் முன்னெடுக்க உள்ளார். எனவே வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து மக்களும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வெற்றியின் பங்காளர்களாக வேண்டு மென ஹிஸ்புல்லா தெரிவித்தார்

பல்வேறுபட்ட மோசடிகளைக் கொண்ட அரசாங்கமாக இன்றைய அரசாங்கம் காணப்படுவதாக முன்னாள் பிரதியமைச்சர் சோ.கணேசமூர்த்தி இதன்போது கருத்து தெரிவித்தார்.

இலங்கையில் 29 தேர்தல்களில் தோல்வியடைந்த ஒரு ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவர் உள்ளதாகவும், அவர் எந்த பதவியிலும் ஐந்து வருடங்களுக்கு மேல் நீடித்தது கிடையாது எனவும் இங்கு கருத்து தெரிவித்த முன்னாள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
செய்திகள்

காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

June 7, 2026
பாடகர் கைது செய்யப்பட்டிருப்பது தோல்வியடைந்த அரசியல்வாதிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கலாம்; இளங்குமரன்
செய்திகள்

பாடகர் கைது செய்யப்பட்டிருப்பது தோல்வியடைந்த அரசியல்வாதிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கலாம்; இளங்குமரன்

June 7, 2026
சிறுவனை துஷ்பிரயோகம் செய்த பிக்குவுக்கு 24 ஆண்டுகள் கடுழியச் சிறைத்தண்டனை
செய்திகள்

சிறுவனை துஷ்பிரயோகம் செய்த பிக்குவுக்கு 24 ஆண்டுகள் கடுழியச் சிறைத்தண்டனை

June 7, 2026
தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த 5 உறுப்பினர்களை பதவி நீக்கிய ஐக்கிய மக்கள் சக்தி
அரசியல்

தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த 5 உறுப்பினர்களை பதவி நீக்கிய ஐக்கிய மக்கள் சக்தி

June 7, 2026
சில கரையோர பகுதிகளுக்கு எச்சரிக்கை; மறு அறிவித்தல் வரும் வரை கடலுக்கு செல்லவேண்டாம்
செய்திகள்

சில கரையோர பகுதிகளுக்கு எச்சரிக்கை; மறு அறிவித்தல் வரும் வரை கடலுக்கு செல்லவேண்டாம்

June 7, 2026
சஹாரா பாலைவனத்தில் துயரம்: ஹஜ் பெருநாளை முடித்து கொண்டு திரும்பிய 49 பேர் குடிநீர் இல்லாததால் மரணம்
செய்திகள்

சஹாரா பாலைவனத்தில் துயரம்: ஹஜ் பெருநாளை முடித்து கொண்டு திரும்பிய 49 பேர் குடிநீர் இல்லாததால் மரணம்

June 7, 2026
Next Post
மனைவியுடன் சேர்த்து வைக்குமாறு கணவன் மரத்தில் ஏறி போராட்டம்!

மனைவியுடன் சேர்த்து வைக்குமாறு கணவன் மரத்தில் ஏறி போராட்டம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.