Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கோட்டா வழங்கிய பொதுமன்னிப்புக்கு எதிராக மனுத்தாக்கல்!

கோட்டா வழங்கிய பொதுமன்னிப்புக்கு எதிராக மனுத்தாக்கல்!

9 months ago
in செய்திகள்

மிருசுவில் படுகொலை தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் இராணுவ அதிகாரி சுனில் ரத்நாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுக்களை 2025 ஜனவரி 15 ஆம் திகதி இலங்கை உயர் நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் 2020ஆம் ஆண்டு முன்னாள் இராணுவ அதிகாரி சுனில் ரத்நாயக்கவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பை எதிர்த்தும், அந்த தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்குமாறும் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

மிருசுவில் படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் மற்றும் இலங்கை மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் ஆணையாளர் நாயகம் அம்பிகா சற்குணநாதன் ஆகியோரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

2000 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் யாழ்ப்பாணம் மிருசுவிலில் 8 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் இராணுவ அதிகாரி சுனில் ரத்நாயக்க குற்றவாளி என அறிவிக்கப்பட்டு 2015 ஆம் ஆண்டு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

2000 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் திகதி மிருசுவில் கிராமத்தில் தங்களுடைய சொத்துக்களை பரிசோதிப்பதற்காக திரும்பி வந்த ​​உள்நாட்டில் இடம்பெயர்ந்த எட்டு அகதிகளை கொலை செய்து யாழ்ப்பாணத்திலிருந்து 16 மைல் தொலைவிலுள்ள புதைகுழியில் அவர்களின் சடலங்களைப் புதைத்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

சம்பவம் தொடர்பில் 5 இராணுவ சிப்பாய்களுக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்த நிலையில், சுனில் ரத்நாயக்கவிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்ததுடன், ஏனைய 4 இராணுவத்தினர் குறித்த போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவர்கள் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அத்தை கொடுத்த கடனை திருப்பி கேட்டதால் கழுத்தை நெரித்து கொலை செய்த மருமகன்
செய்திகள்

அத்தை கொடுத்த கடனை திருப்பி கேட்டதால் கழுத்தை நெரித்து கொலை செய்த மருமகன்

June 5, 2025
லொறி – மோட்டார் சைக்கிள் மோதி விபத்தில் ஒருவர் பலி
செய்திகள்

லொறி – மோட்டார் சைக்கிள் மோதி விபத்தில் ஒருவர் பலி

June 5, 2025
யாழில் 10 மாணவர்களில் 7 பேர் போதை மாத்திரைகளுக்கு அடிமை
செய்திகள்

யாழில் 10 மாணவர்களில் 7 பேர் போதை மாத்திரைகளுக்கு அடிமை

June 5, 2025
பண மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் சீனப் பெண் கைது
செய்திகள்

பண மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் சீனப் பெண் கைது

June 5, 2025
பீப்பாய்களை குப்பைத் தொட்டிகளாக மாற்றி விநியோகிக்கும் திட்டம் ஆரம்பம்
செய்திகள்

பீப்பாய்களை குப்பைத் தொட்டிகளாக மாற்றி விநியோகிக்கும் திட்டம் ஆரம்பம்

June 5, 2025
இராமநாதன் அர்ச்சுனாவின் நோய்க்கு மருந்தே கிடையாது என சபையில் கொந்தளித்த சந்திரசேகர்
செய்திகள்

இராமநாதன் அர்ச்சுனாவின் நோய்க்கு மருந்தே கிடையாது என சபையில் கொந்தளித்த சந்திரசேகர்

June 5, 2025
Next Post
படகு விபத்தில் காணாமல் போன மீனவரின் சடலம் மீட்பு!

படகு விபத்தில் காணாமல் போன மீனவரின் சடலம் மீட்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.